search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medicinal properties"

    • கொரோனா தடுப்பு மருந்தாக ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் பயன்படுத்தப்பட்டது.
    • ஆண்மைக்குறைவு பாதிப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    மக்களுக்கு ஓமியோபதி மருத்துவம் சிறப்பானதாக இருக்கும் என்றார் மகாத்மா காந்தி. விலை குறைவு, உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் நிவாரணம் அளிப்பதால் உலக அளவில் மக்கள் பயன்படுத்தும் 2-வது மருத்துவமுறையாக ஓமியோபதி மருத்துவமுறை இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்தாக ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவத்தில் பெருமளவு தாவரங்களும், ஒரு சில உலோகங்களும் அணு வடிவமாக்கப்பட்டு மருந்தாக பயன்படுகின்றன.

    அந்த வகையில் நாம் வீடுகளில் வளர்க்கும் அழகு தாவரமான கலாடியம் என்ற செடியில் இருந்து மருந்து தயாரிக்கப்பட்டு அந்த செடியின் பெயரிலே வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த கலாடியம் மருந்து, தீவிர புகையிலை பழக்கத்தால் ஆண்மைக்குறைவு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பசியின்மை, வாயு கோளாறு, கொசு கடித்தால் கூட தோலில் ஏற்படும் கடுமையான அரிப்பு, சிவப்பு கொப்பளங்கள், மூக்கு, காது மற்றும் தலையில் ஏற்படும் கொப்பளங்கள், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளையும் நீக்க ஓமியோபதி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

    கலாடியம் தாய் திரவத்தை சொட்டு மருந்தாக தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் புகைப்பழக்கம், புகையிலை பழக்கங்களில் இருந்து மீளலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.

    பொதுவாக, ஓமியோபதி மருந்துகளை தகுதி வாய்ந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தினால் பெரிய மருத்துவ செலவு இல்லாமல் பல நோய்களில் இருந்து வருமுன் தற்காத்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது.

    • மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
    • மாதுளையை சாப்பிட்டு வரும்போது இதயமும், மூளையும் வலிமை பெறும்.

    உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் நோயினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்கள் தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டு வரும் போது உடல் வலிமை பெறும்.

    இனிப்பு மாதுளையை சாப்பிட்டு வரும்போது இதயமும், மூளையும் வலிமை பெறும். அதுமட்டுமில்லாமல் பித்தம், இருமல் ஆகியவற்றை போக்கும். புளிப்பு மாதுளை சாப்பிட்டால் தடைபட்ட சிறுநீரை வெளியேற்றும் மற்றும் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

    சருமத்தை பராமரிக்கக்கூடியதில் மிகவும் முக்கியமானது வைட்டமின் ஈ. இது மாதுளம் பழத்தில் அதிகம் இருக்கிறது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

    இவற்றின் தோலை காய வைத்து பொடி செய்து பாசிப்பயறு மாவு சேர்த்து குளித்தாலும் அல்லது முகத்தில் பூசிக்கொண்டாலோ உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

    மாதுளம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் நார்சத்து போன்றவை இருக்கின்றது. இது கருவுற்ற பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வரும்போது மலச்சிக்கல் நீங்கும்.

    மாதுளம் பழம் சாற்றை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வரும்போது மாதவிடாய் பிரச்சினை நீங்கும். அதுமட்டுமில்லாமல் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

    மாதுளை தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கச்செய்கிறது. இதில் உள்ள தனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் தலைமுடியை அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளரச்செய்கிறது.

    மாதுளம் பழ விதைகளை பசும்பால் விட்டு அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து நஷ்டம் வேகக்கடுப்பு குணமாகி ஆண்மை தன்மை அதிகரிக்க உதவி செய்கிறது.

    • குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு நார்ச்சத்து முக்கியமானது.
    • அத்திப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன.

    உடல் எடையை குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களுக்கு அத்திப்பழம் சிறந்த தேர்வாக அமையும். அதில் இருக்கும் நார்ச்சத்து வயிறு நிறைந்த உணர்வை தரும். பசியை தடுக்கும். அதனால் அதிகம் சாப்பிடத்தோன்றாது.

    மேலும் அத்திப்பழத்தில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதோடு பல்வேறு உடல் நல நன்மைகளை அத்திப்பழம் வழங்குகின்றன. அவை ஒட்டுமொத்த உடல் நலனை காப்பதில் நிகழ்த்தும் மாயஜாலங்கள் குறித்து பார்ப்போம்.

    செரிமானத்தை எளிதாக்கும்

    அத்திப்பழத்தின் தனித்துவமான பண்புகளில் ஒன்று, நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதுதான். குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு நார்ச்சத்து முக்கியமானது. தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி புரியும். அதனால் செரிமானம் மேம்படும். இதில் இருக்கும் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து கழிவுப்பொருட்களுடன் பிணைக்கப்பட்டு அவை குடல் வழியாக விரைவாக வெளியேற உதவும்.

    அத்திப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கும், உடலில் தீங்கு விளைவிக்கும் ஃபிரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்துவதற்கும் உதவி புரியும். இந்த ஆன்டி ஆக்சிடென்டுகளில் கிவெர்செடின், கேடசின்கள் மற்றும் அந்தோசயின்கள் போன்ற பாலிபினால்கள் அடங்கும். இவை இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.

    இதய ஆரோக்கியம்

    இதயத்திற்கு உகந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. ரத்த அழுத்தத்தை பராமரிக்க தேவையான எலக்ட்ரோலைட்டுகள் இதில் ஏராளம் உள்ளன. கூடுதலாக, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் ரத்த நாளங்களின் செயல்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன. ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும் உதவி புரிகின்றன.

    எலும்பு ஆரோக்கியம்

    அத்திப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்பு உருவாக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்பு அடர்த்தியை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.

    சர்க்கரை அளவு

    அத்திப்பழம் மிட்டாய் போன்று லேசான இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டவை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கு பொருத்தமானதாக இருக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சப்படுவதை தடுக்க உதவி புரியும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு பொக்கிஷமாக அத்திப்பழம் அமையும்.

    சரும நலன்

    அத்திப்பழம் சரும நலனையும் பாதுகாக்கக்கூடியது. ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வைட்டமின் ஏ, பி போன்றவை இருப்பதால் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும். கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க தூண்டும். சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றுவதை குறைத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அத்திப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் இயற்கையாகவே சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கக்கூடியவை.

    சுவாச ஆரோக்கியம்

    அத்திப்பழத்தில் மூச்சுக்குழாய் அழற்சி பண்புகளுடன் கூடிய சேர்மங்கள் உள்ளன. இவை சுவாச பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும் குவெர்செடின் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. அவை நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி ஆஸ்துமா போன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    நோய் எதிர்ப்பு தன்மை

    அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும், தொற்றுநோய்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதிலும், நோய்களை குணப்படுத்த உதவுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    • அதிராம்பட்டினம் கடலில் மருத்துவ குணம் கொண்ட காரப்பொடி மீன் வரத்து அதிகரித்துள்ளது.
    • ஆஸ்துமா நோயாளிகள் பிற சுவாச கோளாறுகளுக்கு இந்த மீன் குழம்பு நல்ல நிவாரணி.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இறால், மீன், நண்டு வகைகளுக்கு மவுசு அதிகம் . அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று பகுதியான மல்லிப்பட்டிணம், கொள்ளுக்காடு, சேதுப்பாவசத்திரம் போன்ற பகுதிகளில் கடலில் சில மாதங்களுக்கு முன்பு நண்டு வரத்து அதிமாக இருந்து வந்த நிலையில் தற்போது மருத்துவ குணம் கொண்ட காரப்பொடி மீன் வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த மீன் வகைகள் முழுக்க முழுக்க மருத்துவ குணம் நிறைந்து.

    இது எவ்வளவு கடினமான நெஞ்சு சளியையும் கரைத்து விடும்.

    ஆஸ்துமா நோயாளிகள் பிற சுவாச கோளாறுகளுக்கு இந்த மீன் குழம்பு நல்ல நிவாரணி.

    பாலூட்டும் தாய்மார்கள், காய்ச்சல் கண்டவர்கள், புண் ஆறாமல் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம்.

    • பாவூர்சத்திரத்தில் குளிர்பான கடை நடத்தி வரும் நபர் ஒருவர் முன்மாதிரியாக இருப்பது பெரிதும் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
    • காரணம் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்ப்பதால் வாடிக்கையாளர்களின் தாகம் அடங்குவதோடு, ஒரு சில நோய்க்கும் மருந்தாக அமைவதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

    தென்காசி:

    கோடைகாலம் என்றாலே சாலை ஓரங்களில் அதிகம் இளநீர், சர்பத், தர்பூசணி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் கடைகள் தோன்றுவது வழக்கம்.

    அதன்படி குளிர்பா னங்கள் பருக வரும் பொதுமக்களை கவரும் விதத்திலும் அவர்களின் உடல்நிலையில் அக்கறை கொள்ளும் விதத்திலும் பாவூர்சத்திரத்தில் குளிர்பான கடை நடத்தி வரும் நபர் ஒருவர் முன்மாதிரியாக இருப்பது பெரிதும் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரிராமகிருஷ்ணன் (வயது 48). இவர் கடந்த 8 ஆண்டுகளாக பாவூர்சத்திரத்தில் நெல்லை -தென்காசி சாலையில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இங்கு தர்பூசணி, இளநீர், சர்பத், சோடா உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்து வருகிறார்.

    பொதுவாக நாம் குளிர்பான கடைகளில் லெமன் சோடா கேட்டால் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதனுடன் சோடா மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து கொடுப்பதை பார்த்திருப்போம். ஆனால் அரிராமகிருஷ்ணன் அப்படி இல்லாமல் தன்னிடம் லெமன் சோடா கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு லெமன் சோடாவுடன் இஞ்சி, பூண்டு, மிளகாய், மல்லி, சீரகம், மிளகு உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களையும் சேர்த்து கனகச்சிதமாக லெமன் சோடா வழங்கி வருகிறார்.

    இதனை பருகும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. காரணம் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்ப்பதால் வாடிக்கையாளர்களின் தாகம் அடங்குவதோடு, ஒரு சில நோய்க்கும் மருந்தாக அமைவதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

    மக்களின் நலனுக்காக வும், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிக ரிக்கும் வண்ணமும், தான் மற்றவ ர்களை போல் இல்லா மல் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்த்து லெமன் சோடா வழங்கி வருவதாக தெரிவிக்கிறார். 

    பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளது. பப்பாளி பழம் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    தமிழகத்தில் எங்கும் எளிதில் கிடைக்கும் பழங்களில் மிக முக்கியமானது பப்பாளி பழம். விலையும் மிக குறைவுதான். இந்த பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளது. எனவே, பப்பாளி பழம் மூலம் என்ன என்ன நன்மைகள் என பார்க்கலாம்.  

    பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் தொடர்ந்து பூசி வந்தால் புண்கள் ஆறும்.  

    பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், நாக்குப்பூச்சிகள் அழிந்து போகும்.  

    பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூசினால் புண்கள் உடனே ஆறும்.  

    பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வந்தால்  புண்கள் விரைவில் ஆறும்.  

    பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.  

    பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் இருந்தால் அதன்மேல் பூசி வந்தால்  வீக்கம் விரைவில் கரைவதை பார்க்கலாம்.  

    பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால், வலியும், விஷமும் இறங்கும் என்பது உறுதி.  

    பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், பால் நன்றாக சுரக்கும். 

    பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.  

    பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். 

    பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.  

    பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.  

    நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.  

    எனவே, மிக எளிதில் கிடைக்கும் இந்த பப்பாளி பழத்தை உபயோகப்படுத்தி பயன்பெறலாம். 
    துளசி சிறந்த கிருமிநாசினி மற்றும் உடல் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் மிக்கது. துளசியை எந்த வகையில் பயன்படுத்தின்ல் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசம், பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியும் அலாதியானது. பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுவது. மனிதனுக்கு ஏராளமான நன்மைகள் செய்யும் துளசியின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா!.

    துளசியில் பல வகைகள் இருந்தாலும், பொதுவாக வீடுகளில், கோவில்களில் காணப்படும் துளசியின் பலன்களைப் பார்ப்போம்.

    சிறந்த கிருமிநாசினி மற்றும் உடல் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் மிக்கது. மனச்சோர்வு நீங்கி, எண்ணங்கள் சீராகி, மன நலம் சிறந்து விளங்க, தினமும் ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம்.

    காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் நீங்க, துளசி இலைகளை கொதிக்கும் நீரில் இட்டு, ஆவி பிடித்துவர, அவை எல்லாம் விரைவில் நீங்கும்.

    அலர்ஜியினால் உண்டாகும் தும்மல் மற்றும் மூக்கடைப்பு பாதிப்புகள் சரியாக, துளசி இலைகளை சாறாக்கி, அத்துடன் இஞ்சிச்சாறு மற்றும் சிறிதளவு மிளகை சேர்த்து தூளாக்கி, தேனில் கலந்து சாப்பிட, பாதிப்புகள் விலகிவிடும்.



    துளசியின் இலைகளை நிழலில் உலர்த்தி, அதைப்பொடியாக்கி, கொதிக்கும் நீரில் கலந்தோ அல்லது அந்தப்பொடியை தேனிலோ கலந்து சாப்பிட, கிருமிநாசினியாக செயல்பட்டு, இருமல், நெஞ்சில் உள்ள சளியைப் போக்கி, உடலில் உள்ள கெட்ட தன்மையுள்ளவற்றை அழிக்கும் ஆற்றல் உள்ளது.

    உடல் சூட்டினால் ஏற்படும் சிறு கொப்புளங்கள் போன்ற கட்டிகள் மறைய, துளசி இலைகளை அரைத்து அவற்றில் பூசிவர, கட்டிகள் மறையும். சரும வியாதிகளைப் போக்கும்.

    துளசி இலைச்சாறை தினமும் சாப்பிட்டுவர, உடலை வலுவாக்கி, ஞாபக சக்தியைத் தூண்டும் மேலும் உடல் உள் உறுப்புகளைக் காக்கும்.

    துளசி இலைகளை குடிநீரில் ஊறவைத்து, அதை தினமும் அடிக்கடி பருகிவர, சர்க்கரை பாதிப்புகள் அணுகாது வாழலாம். துளசி இலைகளை முன் தினம் இரவில், நாம் குளிக்கும் நீரில் இட்டுவைத்து, அந்த நீரில் மறுநாள் குளிக்கும்போது, உடலின் வியர்வை நாற்றம் நீங்கி, உடலில் புத்துணர்வுடன் நறுமணம் கமழும்.

    துளசி இலைச்சாறை அடிபட்ட காயங்களுக்கு தடவி வர, காயங்கள் ஆறும், துளசி இலைச்சாற்றுடன் பச்சைக் கற்பூரம் சேர்த்து, வலியுள்ள பல்லில் வைக்க, பல் வலி தீரும். தலை முடி சுத்தமாக, பேன் பொடுகு தொல்லை நீங்க, துளசி இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் நன்கு தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து நீராடிவர, பேன் பொடுகு போன்றவை நீங்கி, தலை முடி வளமாகும்.

    துளசி இலைகளை கொத்தாக வீடுகளில் ஆங்காங்கே வைக்க, வீட்டில் கொசுத்தொல்லைகள் நீங்கும். துளசியைப் போலவே பலன் தரும் துளசி வேரை காயவைத்து பொடியாக்கி பசு நெய்யோடு குழைத்து உட்கொண்டுவர, உயிரணுக்களின் ஆற்றல் கூடும்.
    ×