search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் மருத்துவ குணம் கொண்ட பொருட்களுடன் குளிர்பானங்கள்
    X

    குளிர்பான கடையை படத்தில் காணலாம்.

    பாவூர்சத்திரத்தில் மருத்துவ குணம் கொண்ட பொருட்களுடன் குளிர்பானங்கள்

    • பாவூர்சத்திரத்தில் குளிர்பான கடை நடத்தி வரும் நபர் ஒருவர் முன்மாதிரியாக இருப்பது பெரிதும் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
    • காரணம் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்ப்பதால் வாடிக்கையாளர்களின் தாகம் அடங்குவதோடு, ஒரு சில நோய்க்கும் மருந்தாக அமைவதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

    தென்காசி:

    கோடைகாலம் என்றாலே சாலை ஓரங்களில் அதிகம் இளநீர், சர்பத், தர்பூசணி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் கடைகள் தோன்றுவது வழக்கம்.

    அதன்படி குளிர்பா னங்கள் பருக வரும் பொதுமக்களை கவரும் விதத்திலும் அவர்களின் உடல்நிலையில் அக்கறை கொள்ளும் விதத்திலும் பாவூர்சத்திரத்தில் குளிர்பான கடை நடத்தி வரும் நபர் ஒருவர் முன்மாதிரியாக இருப்பது பெரிதும் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரிராமகிருஷ்ணன் (வயது 48). இவர் கடந்த 8 ஆண்டுகளாக பாவூர்சத்திரத்தில் நெல்லை -தென்காசி சாலையில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இங்கு தர்பூசணி, இளநீர், சர்பத், சோடா உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்து வருகிறார்.

    பொதுவாக நாம் குளிர்பான கடைகளில் லெமன் சோடா கேட்டால் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதனுடன் சோடா மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து கொடுப்பதை பார்த்திருப்போம். ஆனால் அரிராமகிருஷ்ணன் அப்படி இல்லாமல் தன்னிடம் லெமன் சோடா கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு லெமன் சோடாவுடன் இஞ்சி, பூண்டு, மிளகாய், மல்லி, சீரகம், மிளகு உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களையும் சேர்த்து கனகச்சிதமாக லெமன் சோடா வழங்கி வருகிறார்.

    இதனை பருகும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. காரணம் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்ப்பதால் வாடிக்கையாளர்களின் தாகம் அடங்குவதோடு, ஒரு சில நோய்க்கும் மருந்தாக அமைவதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

    மக்களின் நலனுக்காக வும், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிக ரிக்கும் வண்ணமும், தான் மற்றவ ர்களை போல் இல்லா மல் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்த்து லெமன் சோடா வழங்கி வருவதாக தெரிவிக்கிறார்.

    Next Story
    ×