search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுத்தேர்வு"

    • ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.
    • கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததை தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதி (திங்கட்கிழமை)யுடன் தேர்வு நிறைவடைகிறது. இதையடுத்து சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப் பட்டுள்ளது.

    மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த 2-ந்தேதி ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதியுடன் பெரும்பாலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து விடுகிறது.

    அதனால் 9-ந்தேதி முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந் தேதிகளில் 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ரம்ஜான் பண்டிகை இடையில் வருவதால், தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் 22, 23 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அடுத்த வாரத்தில் யுகாதி மற்றும் ரம்ஜான் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து பிற நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியிருப்பதால் முன்கூட்டியே தேர்தலை நடத்தி முடிக்கின்றனர்.

    அதனால் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைக்கிறது. ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.

    தனியார் மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதனால் யுகாதி, ரம்ஜான் அரசு விடுமுறையுடன் சேர்த்து கோடை விடுமுறை விடப்படுகிறது. அரசு பள்ளிகளும் ஏப்ரல் 12-ந்தேதி வரை மட்டுமே செயல்படும். அதன் பின்னர் 2 நாட்கள் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இந்த வருடம் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைத்து இருப்பதால் உற்சாகமாக உள்ளனர். சொந்த ஊர்களுக்கும், உறவினர் இல்லத்திற்கும் செல்ல இப்போதே பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

    ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் முடிந்தவுடன் கோடை ஸ்தலங்களுக்கும், மலை பிரதேசங்களுக்கும் மற்றும் கோவில்களுக்கும் பயணத்தை தொடங்குகின்றனர்.

    கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பது பின்னர் முடிவு செய்யப்படுகிறது.

    • கண்காணித்து ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்தாலும் மாணவர்களின் சேட்டைகள் குறையவில்லை.
    • தேர்வு மைய அதிகாரிகள் மெத்தனமான இருந்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள சில அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர், பள்ளிக்கு புத்தகப்பையுடன் செல்வதை விட செல்போனுடன் செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவர்கள் வகுப்பறைகளில் அமர்ந்து 'ரீல்ஸ் வீடியோ' எடுத்து, அதை சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக நடக்கிறது. இதனை கண்காணித்து ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்தாலும் மாணவர்களின் சேட்டைகள் குறையவில்லை. மேலும் சில ஆசிரியர்கள் பின்விளைவுகளை நினைத்து தங்கள் கடமையை செய்ய அச்சப்படுகின்றனர்.

    இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி எல்லையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள், மார்ச் 11 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடந்த கணக்குப்பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு 'பிட்' எடுத்துச் சென்று காப்பி அடித்தது தொடர்பாக, தங்கள் செல்போனில் ரீல்ஸ் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

    இந்த வீடியோ இதர சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பள்ளிக்கு செல்போனுடன் வந்தவர்கள் இப்போது பொதுத்தேர்வு அறைக்கே செல்போனுடன் சென்றது தெளிவாகி இருக்கிறது.

    தேர்வு மையத்துக்கு செல்போன் எப்படி வந்தது. தேர்வு மைய அதிகாரிகள் மெத்தனமான இருந்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சென்னையில் உள்ள மையங்களிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.

    இந்த நிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் உள்ள மையங்களிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து ஏற்கெனவே திருத்துதல் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துதல் பணிகள் வருகிற 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த பணியில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். விடைத்தாள் திருத்தி முடிந்ததும் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 6-ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. விடைத்தாள் திருத்துதலின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.
    • தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

    மன்னார்குடி:

    திருமக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர் எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). விவசாயி. இவரது மகன் எழில்வேந்தன். இவர் திருமக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் ஆறுமுகம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.

    அவரது இறுதிச்சடங்கு நடைபெறாத நிலையில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல், சோகத்தையும் வெளிகாட்ட முடியாமல் தனது படிப்புக்காக தேர்வை எழுத வேண்டும் என்ற நிலையில் திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.

    அப்போது கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பள்ளியின் தன்னார்வ உடற்கல்வி ஆசிரியர் பூபேஷ் ஆகியோர் மாணவருக்கு ஆறுதல் கூறி தகுந்த ஆலோசனை வழங்கி தேர்வு அறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவர் தேர்வு எழுதினார்.

    தனது தந்தை உயிரிழந்து, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விருப்பபடி தனது கல்விக்கு எந்த தடையும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் நேற்றைய தேர்வில் எழில்வேந்தன் பங்கேற்றது அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் எழில்வேந்தனின் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வு அறைகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக ஈடுபடுகிறார்கள்.
    • கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இன்று தொடங்கும் தேர்வு, வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன.

    முதல் நாளான இன்று, தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடக்கிறது. தேர்வை, 12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த, 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது.

    தேர்வு அறைகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக ஈடுபடுகிறார்கள். மேலும், 3 ஆயிரத்து 350 பறக்கும் படைகளும், ஆயிரத்து 241 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதன பொருட்கள் கொண்டுவர ஆசிரியர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களும், ஹால்டிக்கெட்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. பிளஸ்-1 விடைத்தாள்கள் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. இதில், பிளஸ்-1 அரியர் மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 6-ந்தேதியில் இருந்தும், இதர மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 15-ந் தேதியில் இருந்தும் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்குகிறது.

    • 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது
    • முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது

    பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

    தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
    • பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!

    நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.

    பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு, மின்சார சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

    இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    304 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

    மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு, மின்சார சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

    ஒழுங்கீன செயலை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். தேர்வு முடிவு மே 10-ந்தேதி வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.
    • விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும்.

    சென்னை:

    பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 22-ந்தேதியுடனும், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 25-ந்தேதியுடனும் தேர்வு நிறைவு பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

    இந்த நிலையில் பொதுத் தேர்வு நிறைவு பெற்றதும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும். அந்த வகையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்ற தகவலை பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரையிலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி ஆரம்பித்து 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும். ஏற்கனவே பொதுத் தேர்வு அட்டவணை வெளியிட்ட நேரத்தில், பிளஸ்-2 வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு மே 10-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு மே 14-ந்தேதியும் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொதுத்தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி தமிழ் பொதுத்தேர்வு நடந்து உள்ளது. நாளை (5-ந் தேதி) ஆங்கிலத் தேர்வு நடை பெறுகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத் தேர்வு இன்று தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 தேர்வை விட பிளஸ்-1 தேர்வை அதிக மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

    இத்தேர்வை 8 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். பள்ளிகளில் நேரடியாக 8 லட்சத்து 20 ஆயிரத்து 201 பேரும் தனித்தேர்வர்கள் 5 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.

    பொதுத்தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

    மேலும் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியாகாமல் இருக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளி மையங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை அங்குள்ள தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது தவிர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிளஸ்-1 தேர்வு இன்று தீவிர கண்காணிப்பில் நடந்தது. காலை 10-15 மணிக்கு தொடங்கி 1.15 மணிக்கு முடிகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆசி பெற்று சென்றனர்.

    சென்னை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். வினாத்தாள்கள் காப்பி மையங்களில் இருந்து பாதுகாப்பாக மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதே போல தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் தூப்பாக்கி பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

    பிளஸ்-2, பிளஸ்-1 தேர்வு விடைத்தாள்கள் கல்வி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ள அறையில் வைக்கப்படுகிறது.

    • தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
    • முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

    சென்னை:

    பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது.

    இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர்.

    இதுதவிர தனித்தேர்வர்களாக 5 ஆயிரம் பேரும், சிறைவாசிகளாக 187 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

    தேர்வில் முறைகேடுகளை தடுக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும், தேர்வு பணிகளில் 46 ஆயிரத்து 700 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

    முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. நாளை தொடங்கும் தேர்வு வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.
    • 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு.

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.

    இந்த தேர்வில், 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.

    இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர் எனவும் கூறப்பட்டது.

    இதற்காக, தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தமிழ் பாடத்தேர்வான இன்று சுமார் 12,364 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என கூறப்படுகிறது.

    ×