search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாரம்"

    • பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது.
    • தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மதுரை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி நெல்லை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.
    • இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டனர்.

    ராமநாபுரம் பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் மண்டபம் பகுதியில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தபோது பெண்கள் திரண்டு குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்று உறுதியளித்தனர். அப்போது வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:- 

    நான் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன். கிராம மக்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவேன்.

    கடந்த முறை பொய் வாக்குறுதி கூறி வெற்றிபெற்ற எம்.பி.யை அடையாளம் தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா? மக்களை ஏமாற்றி ஓட்டுக்களைப் பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்கின்றவர்கள் மீண்டும் ஓட்டுகேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள். மக்களின் பிரதிநிதிதான் எம்.பி., அதனை மறந்து மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு உங்களிடமே மீண்டும் ஓட்டுகேட்டு வருகிறார். மக்களை ஏமாற்றிய தி.மு.க. கூட்டணிக்கு தக்கபாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனில் அதிக கவனம் செலுத்துவேன். இங்கு மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.

    கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கும் முன்பு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன்பிடி தொழில் நடைபெற்றது. இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டனர். பாராளுமன்ற முதல் கூட்டத்திலேயே தச்சத்தீவு பிரச்சனையை எழுப்புவேன். மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கையாக இருந்தாலும், ஆசிரியர்களின் போராட்டமாக இருந்தாலும் கோரிக்கையை நிறைவேற்ற உடனிருப்பேன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் இவ்வாறு பேசினர்.

    வேட்பாளருடன் ஜெயபெருமாளுடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார்.
    • மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது.

    விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் இன்று அருப்புக் கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட சூலக்கரை, சின்னவள்ளி குளம், மாசி நாயக்கன்பட்டி குல்லூர் சந்தை, ராமசாமிபுரம் பால வநத்தம், கோவிலாங்குளம், பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தேர்தல் முடிந்ததும் மனு செய்தால், உடனடியாக வழங்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார் . இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை 150 நாட்களாகவும், சம்பளத்தை 400 ஆக உயர்ததவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், மகளிருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.

    இதன் மூலம் அவர்களின் குடும்ப வாழ்வு வளம் பெறும். மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனப் பேசினார். பிராசரத்தில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • அதேபோல விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.
    • நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது.

    கோவை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ் மொழிக்கு தேசிய அளவில் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். இந்த பிரச்சி னையில் தி.மு.க.வினருக்கும், எந்த கொள்கையும் இல்லை. தமிழகத்தில் வடமாநிலத்தி னரின் எண்ணிக்கை தொட ர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதேநிலை நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும்.

    சின்னத்தை முடக்கினாலும் நாம் தமிழர் கட்சியை எதுவும் செய்து விட முடியாது. அதேபோல விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவ டிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்து விட்டதாக உலக வங்கி கருத்து தெரி வித்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக மக்களை ஏமாற்று கின்றனர். வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளை அறிவிப்பதற்கு 44 நாள் தாமதப்படுத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    மேகதாது அணை விவகாரத்தில் அண்ணாமலையின் கருத்து என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதே போல தமிழக நதி நீர் உரிமையை பாதுகாப்பதில் பாரதிய ஜனதாவின் நிலை என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் தேசியம் பேசுகிறவர்கள் கர்நாடகத்தில் மாநில உரிமைகள் குறித்து பேசுகின்றனர். எனவே ஒரு சொட்டு கூட தண்ணீர் தர முடியாது என்பவர்களுக்கு ஒரு வாக்கு கூட கிடையாது என மக்கள் முடிவெடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது கன்னடராக இருப்பது தனக்கு பெருமை என பேசிய அண்ணாமலை, கர்நாடகத்தில் தேர்தலில் போட்டியிடாமல் தமிழகத்தில் எதற்கு போட்டியிட வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் மீதான குறைகளை சுட்டிக்காட்டிபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரசாரம் வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    பிரசாரத்துக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் மீதான குறைகளை சுட்டிக்காட்டிபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் எனவே அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

    இப்படி தேர்தல் பிரசாரம் 'களை' கட்டி உள்ள நிலையில் பிரதமர் மோடி சென்னையில் நேற்று ரோடு ஷோ நடத்தி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தமிழகத்துக்கு 7-வது முறையாக தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ள பிரதமர்மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். பிரியங்கா காந்தியும் காங்கிரசிற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இப்படி தேசிய தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

    தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில் சோதனைகளும் தீவிரமாகி உள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பறக்கும் படை அதிகாரிகளும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.
    • ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நேற்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்தார்.

    இந்நிலையில், தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை வந்தார்.

    அங்கு, பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.

    ரோடு ஷோவில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில்.

    கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

    சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சனைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.

    சென்னை என் மனதை வென்றது!

    இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.

    சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
    • ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

    மதுரை:

    தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரை வந்தார். அப்போது அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் இரவு அழகர்கோவில் சாலையில் உள்ள தங்குவிடுதியில் தங்கினார்.

    இதனையடுத்து இன்று காலை உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற பின்னா் முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்தார்.

    பின்னர் மீனாட்சியம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டார். பின்னர் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்

    முன்னதாக அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்டசக்தி மண்டபம் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர் தங்கிய தங்கு விடுதியில் இருந்து கோவில் வரை பலத்த பாதுகாப்பு போடப் பட்டதோடு, கோவிலை சுற்றிய பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.

    மீனாட்சியம்மன் கோவிலில் 30 நிமிட சாமி தரிசனம் முடித்த பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுசென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலமாக அசாம் புறப்பட்டுசென்றார்.

    முன்னதாக காலையில் ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்.
    • ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தது பிஜேபி அல்ல காங்கிரஸ் எனவும், குறிப்பாக ப.சிதம்பரம்தான் அதைத் தொடங்கி வைத்தார்

    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து விருதுவிளங்கினான் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியாவின் புகழைப் பரப்ப வேண்டும் என்று பாடுபட்டு வருவதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுடன், பொருளாதாரத்தில் இந்தியாவை மேலும் முன்னேற்ற முயற்சித்து வருவதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாடு தனித்தீவு போலவும், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லை என்றும், பாரதம் என்ற ஒன்றே இல்லாதது போலவும் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

    அதனை தொடர்ந்து, சு.வாழாவெட்டி கிராமத்தில் பேசிய ரவி பச்சமுத்து, இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் எனவும், ஊழலுக்கு எதிராக ஊழல் கட்சிகள் மீது பிரதமர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். இங்கு தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர், தமிழ் என்று சொல்கிறார்களே தவிர, பிரதமர் மோடியை போலவும் டாக்டர் பாரிவேந்தரைப் போலவும் யாரும் செயல்படவில்லை என்று விமர்சித்தார். சென்னை அருகே ராக்கெட் ஏவுதளத்தை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் கூறியதாகவும், பல்வேறு தொகுப்பு வீடுகள், சோலார் மின்சாரம் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடர்ந்து கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். டாக்டர் பாரிவேந்தர் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் ஒரே சிந்தினை உடையவர்கள் எனவும் தெரிவித்தார்.

    அதேபோல் கல்லேரி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தது பிஜேபி அல்ல காங்கிரஸ் எனவும், குறிப்பாக ப.சிதம்பரம்தான் அதைத் தொடங்கி வைத்தார் எனவும் குற்றஞ்சாட்டினார். பிரதமர் மோடிக்கும், பாரிவேந்தருக்கும் இரண்டு ஒற்றுமைகள் உள்ளது எனவும், இருவருக்கும் ஒரே எண்ணங்கள், ஒரே கொள்கைகள் உள்ளதாகவும் கூறினார். மேலும், டாக்டர் பாரிவேந்தர் ஒரு விவசாயின் மகன் எனவும், தனி ஒருவராக சென்னைக்கு சென்று நேர்வழியில் படித்து, மற்றவர்களுக்கும் கல்வி மற்றும் பல்வேறு தொழில்களை கொடுத்து, ஒரு ஆசிரியராக இருந்தவர் என புகழாரம் சூட்டினார்.

    இதனையடுத்து வலசை கிராமத்தில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து டாக்டர் ரவி பச்சமுத்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய மொழியில் தமிழ் மொழியும் முக்கியமானவை என்றும், உலகத்தை தமிழர்கள்தான் ஆள்கிறார்கள் எனவும் கூறினார். மேலும் தமிழர்கள்தான் இன்று உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறார்கள் எனவும் தேசியத்தை நோக்கியும் பொருளாதரத்தை நோக்கியும் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார்.
    • பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள்.

    தருமபுரி:

    இந்தியா கூட்டணி கட்சி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ.மணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:

    தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து லட்சகணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுக்களை போட்டு.. மோடிக்கு வைக்க வேண்டும்.

    தருமபுரி தொகுதியில் அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டையில் 11 கோடி ரூபாய் மதிப்பிட்டில் சாலை அமைக்கப்பட்டது உள்ளி்ட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

    தற்போது புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளேன். இதில் தொப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள், தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே திட்டம், ஒகே னக்கல்லில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் காவிரி உபரிநீர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பு காவிரி உபரிநீர் திட்டம், விவசாயிகளுக்கான நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படு்ம். தேர்தலுக்கு தேர்தல் தான் மோடி வந்து செல்வார். இந்தியாவிேலயே முதன் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இந்த திட்டத்தை வெளி மாநிலத தவரும், வெளிநாட்டவரும் பின்பற்றக்கூடிய திட்டமாக இருக்கிறது. இது திராவிட மாடல் அரசு.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் வழங்கப்படும்,.பெட்ரோல் 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயுக்கு வழங்கப்படும். இந்தியா முழுக்க உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி, சமூகநீதிக்காக எதிராக உள்ள பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் இதனை மறுத்தும் வரும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்.

    டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த ராமதாஸ் பா.ஜ.க.வி்ன் ஆட்சிக்கு பூஜ்ஜியத்திற்கு கீழே ஏதாவது மதிப்பெண் இருந்தால் தான் கொடுக்கலாம் என்றார். ஆனால் ராமதாஸ், தற்போது பா.ம.க அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    தேர்தல் நேரத்தில் வந்து செல்வார் பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி செல்வதாக செங்கல்லை நட்டு அடிக்கல் நாட்டி சென்றார், அந்த ஒற்றை கல்லயும் நான் எடுத்து வந்துவிட்டேன்.

    மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன், 29 பைசா, அதாவது செல்லாக்காசு, அப்படியே நீங்களும் அப்படியே அழைக்கலாம். மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக ஜி .எஸ்.டி. திருப்பி தருகிறீர்கள், ஆனால் தமிழகத்திறகு 29 பைசா தான் ஒன்றிய அரசு திருப்பி தருகிறார்கள்.

    மாநில உரிமைகளை அடகு வைத்தது அ.தி.மு.க.தான். உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று அ.தி.மு.க. கூற முடியுமா?, சசிகலாவின் காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர், கடைசியில் அவர்கள் காலை வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு மட்டும் இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த 2 கூட்டணி கட்சிகளையும் விரட்டியடிக்க வேண்டும்.

    கடந்த 10 வருடத்தில் பா.ஜ.க. அரசு செய்த அனைத்து ஊழல்களும் சி.ஏ.ஜி அறிக்கையில் கிடையாது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்திருக்க கூடிய செலவுகளில் 7½ லட்சம் கோடி ரூபாய் பணத்தை காணவில்லை. ஆயுஷ்மான்பவன் திட்டத்தின் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு ஒரே செல்போனிலிருந்து பணம் அனுப்பி இருக்கின்றனர். பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள். இது தான் மோடி அரசு.

    எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமர். இந்தியா கூட்டணியில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும், மோடியை விரட்டியடிக்க வேண்டும், இந்தியாவிக்கே ஒரு விடியல் ஆட்சியை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.
    • சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை மத்தூர், பர்கூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.

    அப்போது சீமான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டி பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனே ஆதரவாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.

    இதனால் சீமான் அந்த வாலிபரை முறைத்தபடி திட்டினார். இதனைத்தொடர்ந்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • ஜிஎஸ்டி வரியை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால் மட்டும் இந்த நிலை மாறும்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்தி அளிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி கார்த்திக் சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் காரைக்குடியில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது,

    இந்திய கூட்டணி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும்படியும் கூறினார். இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கித்துவம் ஆனது. மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. இந்தியா எந்த திசையை நோக்கி பயணிக்க போகிறது என்பதை தேர்ந்தெடுக்கும் நேரம் இது. ஒரு வேட்பாளரை தாண்டிய தேர்தல் இது. இந்தியாவை இப்போது ஆண்டு கொண்டிருப்பது பாஜக, அவர்களின் கொள்கை இந்தி, இந்துத்துவா. அர்த்தம் என்னவென்றால் இந்தி மொழி தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும், இந்தி மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் மற்ற மொழிகளை எல்லாம் மட்டம் தட்ட வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். நமக்கு அது சரிப்பட்டு வராது. நமக்கு தமிழ் தான் முக்கியம். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    அவர்கள் இந்துத்துவா கொள்கையை பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி அவர்களை மட்டம் தட்டுவதுதான் பாஜகவினரின் வேலையாக உள்ளது.

    20 ஆண்டுகளுக்கு முன் கோவில்களில் கிடா வெட்டும் நிகழ்வை ரத்து செய்தனர். இந்த இந்துத்துவா பாஜக ஆட்சி மீண்டும் வந்தால் நமது ஊர்களில் கிடா வெட்டுவதையும், சேவல் நேர்த்திக்கடனாக கொடுப்பதையும் தடை செய்து விடுவார்கள். அவர்களது இந்துத்துவா என்பது முழுக்க முழுக்க வடஇந்திய, சமஸ்கிருத, மேல்தட்டு வெஜிட்டேரியன் இந்துத்துவா. நமது நடைமுறை வாழ்க்கைக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. நமது கிராமபுற பழக்க வழக்கங்கள் தொடர வேண்டும் என்றால் இந்திய கூட்டணியான கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    நாம் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம். நாம் 1 ரூபாய் வரிக்கட்டினால் நமக்கு திரும்ப வருவது 29 பைசா மட்டும் தான். ஆனால் வட இந்தியாவான உத்திர பிரதேச மாநிலத்தில் 1 ரூபாய் வரிக்கட்டினால் 2.73 பைசா அவர்கள் திரும்ப பெறுகிறார்கள்.


    எல்லா பொருட்களுக்கும் விலைவாசி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 55 ரூபாயாக இருந்த கேபிள் டிவியின் சந்தா இப்போது 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கியக்காரணம் இந்தி, இந்துத்துவா அரங்சாங்கமான பாஜக மட்டுமே. விலையேற்றத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் ஜிஎஸ்டி வரியை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால் மட்டும் இந்த நிலை மாறும்.

    முதலமைச்சரின் நலத்திட்டங்கள் உங்களுக்கு நல்லப்படியாக வந்து கொண்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், கல்லூரி பெண்களுக்கு ஊக்கத்தொகை, இலவச பேருந்து இவை அனைத்தும் தொடர வேண்டுமென்றால் கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்தி அளிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறேன். கல்விக்கடன் யாராவது வாங்கியிருந்தால் முழுமையாக ரத்து செய்யப்படும். இனிமேல் இரண்டு வாரங்களுக்கு யாரிடம் இருந்து உங்களுக்கு போன் வந்தால் ஹாலோ என்று கூறாமல் கைசின்னம் என்று தான் கூற வேண்டும்.

    நான் கூறிய அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றால் இந்திய கூட்டணியான கைசின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.

    • வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

    பல்லடம்:

    தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது செல்லும் வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.இதைப்பார்த்த அண்ணாமலை அதிர்ச்சியடைந்ததுடன், ஞாயிற்றுக்கிழமை என்றாலே இப்படித்தான் நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்ய வரவே பயமாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாஸ்மாக் கடைதான். எனவே டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கு நீங்கள் பா.ஜ.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.

    பின்னர் அவர் தனது பிரசாரத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×