search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manikam Tagore"

    • நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார்.
    • மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது.

    விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் இன்று அருப்புக் கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட சூலக்கரை, சின்னவள்ளி குளம், மாசி நாயக்கன்பட்டி குல்லூர் சந்தை, ராமசாமிபுரம் பால வநத்தம், கோவிலாங்குளம், பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தேர்தல் முடிந்ததும் மனு செய்தால், உடனடியாக வழங்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார் . இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை 150 நாட்களாகவும், சம்பளத்தை 400 ஆக உயர்ததவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், மகளிருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.

    இதன் மூலம் அவர்களின் குடும்ப வாழ்வு வளம் பெறும். மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனப் பேசினார். பிராசரத்தில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • கவர்னர் ஒப்புதல் வழங்காதது மக்கள் நலனுக்கு எதிரானது என மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.
    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார். கல்விக்கடன் விருதுநகரில் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி யளித்த அவர் மேலும் கூறியதாவது:-

    விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மத்திய அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழுவினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி, துணைத் தலைவர் தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தில் ரூ. 143 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ. 9 கோடியே 5 லட்சம் மட்டுமே கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மத்திய அரசு கல்வி கடனில் கவனம் செலுத்தாததை காட்டுகிறது.

    கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மாவட்டத்தில் ரூ. 120 கோடி வரை கல்விக்கடன் வழங்கப்பட்டது. ரூ.143 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை மத்திய அரசு நிறுத்திவிட்ட நிலையில் தமிழக அரசு திட்டத்தினை செயல்படுத்த குழு அமைத்து அதற்கு தேவையான நிதியினை நிதியமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக விளங்கும் நிலையில் விவசாய காலம் தவிர பிற நாட்களில் இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மக்களுக்கு எதிரான ஆன்லைன் ரம்மிதடை மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது மக்கள் நலனுக்கு எதிரானது. இந்த விஷயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விருதுநகர் பாத்திமா நகரில் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டியை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்.

    • ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம் தெரிவித்தார்.
    • எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா இன்று நடந்தது. இைதயொட்டி அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.

    இதில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார், நிர்வாகிகள் சுப்பிரமணியன், சரவணபகவான்,சத்யன், ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்ப ரசு உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    அண்மையில் மதுரை வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மதுரை மக்களிடம் எய்ம்ஸ் மருத்துவமனை சம்பந்தமாக தவறான தகவலை ெதரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ததாகவும் அதற்கு தமிழக அரசு தாமதமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தவறான தகவல்.

    ஆரம்பத்தில் மதுரை விமான நிலையத்தில் அண்டர் பாஸ் முறையில் திட்டம் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் குறைந்த அளவு இடம் போதும் என மத்திய அரசு தெரிவித்தது. தற்போது அதிக இடம் வேண்டும் என்று கூறி அண்டர் பாஸ்ட் திட்டம் கைவிடப்பட்டது என திட்டத்தை மாற்றி அறிவித்துள்ளது.

    இதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக தெரிவித்துள்ளார். இதுவும் தவறான தகவல். இது தொடர்பாக மக்கள் மன்றத்தில் நாங்கள் கூறினால் தவறாக திரித்து கூறுவதாக சொல்கின்றனர்.

    அண்மையில் தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, பெருந்தலைவர் காமராஜர் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, காமராஜர் தி.மு.க.வினரின் கட்டை விரலை வெட்டு வேன் என்று கூறியதாகவும், அவருக்கு கல்லறை அமைத்தது தி.மு.க. தான் என்றும் கூறி உள்ளார்.

    காமராஜர் இதுபோன்ற கடினமான வார்த்தைகளை எப்போதும் பேசியது கிடையாது. இன்றளவும் மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவர். அவரைப் பற்றி ஆர்.எஸ்.பாரதி கூறியது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×