search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் வேட்பாளர்"

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார்.
    • பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள்.

    தருமபுரி:

    இந்தியா கூட்டணி கட்சி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ.மணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:

    தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து லட்சகணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுக்களை போட்டு.. மோடிக்கு வைக்க வேண்டும்.

    தருமபுரி தொகுதியில் அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டையில் 11 கோடி ரூபாய் மதிப்பிட்டில் சாலை அமைக்கப்பட்டது உள்ளி்ட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

    தற்போது புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளேன். இதில் தொப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள், தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே திட்டம், ஒகே னக்கல்லில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் காவிரி உபரிநீர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பு காவிரி உபரிநீர் திட்டம், விவசாயிகளுக்கான நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படு்ம். தேர்தலுக்கு தேர்தல் தான் மோடி வந்து செல்வார். இந்தியாவிேலயே முதன் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இந்த திட்டத்தை வெளி மாநிலத தவரும், வெளிநாட்டவரும் பின்பற்றக்கூடிய திட்டமாக இருக்கிறது. இது திராவிட மாடல் அரசு.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் வழங்கப்படும்,.பெட்ரோல் 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயுக்கு வழங்கப்படும். இந்தியா முழுக்க உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி, சமூகநீதிக்காக எதிராக உள்ள பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் இதனை மறுத்தும் வரும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்.

    டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த ராமதாஸ் பா.ஜ.க.வி்ன் ஆட்சிக்கு பூஜ்ஜியத்திற்கு கீழே ஏதாவது மதிப்பெண் இருந்தால் தான் கொடுக்கலாம் என்றார். ஆனால் ராமதாஸ், தற்போது பா.ம.க அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    தேர்தல் நேரத்தில் வந்து செல்வார் பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி செல்வதாக செங்கல்லை நட்டு அடிக்கல் நாட்டி சென்றார், அந்த ஒற்றை கல்லயும் நான் எடுத்து வந்துவிட்டேன்.

    மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன், 29 பைசா, அதாவது செல்லாக்காசு, அப்படியே நீங்களும் அப்படியே அழைக்கலாம். மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக ஜி .எஸ்.டி. திருப்பி தருகிறீர்கள், ஆனால் தமிழகத்திறகு 29 பைசா தான் ஒன்றிய அரசு திருப்பி தருகிறார்கள்.

    மாநில உரிமைகளை அடகு வைத்தது அ.தி.மு.க.தான். உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று அ.தி.மு.க. கூற முடியுமா?, சசிகலாவின் காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர், கடைசியில் அவர்கள் காலை வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு மட்டும் இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த 2 கூட்டணி கட்சிகளையும் விரட்டியடிக்க வேண்டும்.

    கடந்த 10 வருடத்தில் பா.ஜ.க. அரசு செய்த அனைத்து ஊழல்களும் சி.ஏ.ஜி அறிக்கையில் கிடையாது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்திருக்க கூடிய செலவுகளில் 7½ லட்சம் கோடி ரூபாய் பணத்தை காணவில்லை. ஆயுஷ்மான்பவன் திட்டத்தின் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு ஒரே செல்போனிலிருந்து பணம் அனுப்பி இருக்கின்றனர். பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள். இது தான் மோடி அரசு.

    எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமர். இந்தியா கூட்டணியில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும், மோடியை விரட்டியடிக்க வேண்டும், இந்தியாவிக்கே ஒரு விடியல் ஆட்சியை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
    • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வடசென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பால்கனகராஜுக்கு ஆதரவாக, மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று பிரசாரம் செய்தார்.

    வடசென்னை தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதி நம்மாழ்வார்பேட்டை சந்தை பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

    பேரணியின்போது, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நாங்கள் ஓட்டு கேட்டு வருகிறோம். ஆனால், தலைமை இல்லா 'இந்தியா' கூட்டணி, யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முன்னிறுத்தாமல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கூற முடியுமா?

    கேரளாவில் இந்தியா கூட்டணியினர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். ஆனால், டெல்லியில் கட்டித்தழுவிக்கொண்டிருக்கின்றனர். நாட்டிலேயே கலாசாரம் மிக்க பூமியாக தமிழகம் திகழ்கிறது. ஆனால், தி.மு.க. சனாதன தர்மத்தை எதிர்க்கிறது. இதற்கு நாடே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு வழங்கிய நலத்திட்டங்களை சொல்ல முடியுமா? பா.ஜனதா தொண்டர்கள் நாட்டின் ஜனநாயகத்தை காக்க கடுமையாக பணியாற்ற வேண்டும். பா.ஜனதாவுக்கு மக்கள் ஓட்டு போடுவதற்காக நாம் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பிரசாரத்தின்போது வட சென்னை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு 5 கிலோ எடை கொண்ட மீன் வழங்கி வரவேற்றார்.

    இதேபோல் திருவள்ளூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன் பாலகணபதிக்கு ஆதரவு திரட்டி திருநின்றவூரில் ஸ்மிரிதி இரானி பிரசாரம் மேற்கொண்டார்.

    • இந்தியா கூட்டணியின் நான்காவது சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது
    • கடந்த முறை டீ, பிஸ்கட், சமோசா வழங்கினர் என்றார் பின்டு

    அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் உள்ளிட்ட பல மாநிலங்களின் முக்கிய கட்சிகளை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர்.

    இக்கூட்டணியின் முதல் சந்திப்பு பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு பெங்களூரூவிலும், 3-வது சந்திப்பு மும்பையிலும் நடந்தது.

    நான்காவது சந்திப்பு இரு தினங்களுக்கு முன் புது டெல்லியில் நடைபெற்றது.

    இச்சந்திப்பில், தேர்தலில் கூட்டணி கட்சிகளின் இட பங்கீடு, பேரணிகள், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிப்பதாக இருந்தது.

    பிரதமர் வேட்பாளர் பெயரில் இந்த சந்திப்பில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில், இச்சந்திப்பில் பங்கேற்ற பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள எம்.பி. சுனில் குமார் பின்டு இந்த கூட்டம் குறித்து தெரிவித்ததாவது:

    பல பெரிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் நிதி நெருக்கடியில் இருப்பதனால் மக்களிடம் நன்கொடை கேட்டது.

    கடந்த சில சந்திப்புகளில் டீ, பிஸ்கட், சமோசா அளித்து உபசரித்தனர்.

    ஆனால், இந்த முறை சமோசா இல்லை; டீ, பிஸ்கட் மட்டும்தான்.

    இடப்பங்கீடு, பிரதமர் வேட்பாளர் என எந்த விஷயத்திலும் முடிவும் எட்டப்படாமல்தான் சந்திப்பு நிறைவடைந்தது.

    இவ்வாறு பின்டு கூறினார்.

    • இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிந்தார்.
    • ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஆர்ஜேடி தலைவர் லாலு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். மம்தாவின் கருத்திற்கு வைகோ, உபி. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "எங்களின் இலக்கு வெற்றி தான். வெற்றிக்கு பிறகு தான் பிரதமர் யார் என முடிவு செய்யப்படும். பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பின் எங்களிடம் போதுமான எம்.பிகள் இருப்பார்கள். அதன் பிறகு ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என்றார்.

    • கர்நாடகாவில் பா.ஜனதாவை வீழ்த்தியதில் கார்கேவுக்கு முக்கிய பங்கு உண்டு.
    • இதுவரை இந்தியாவில் பிரதமர் பதவிக்கு தலித் இனத்தை சேர்ந்தவர்கள் யாரும் தேர்வு செய்யப்பட்டது இல்லை.

    பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர தொடங்கி உள்ளன. வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் ஓரணியில் போட்டியிட வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. குறிப்பாக 450 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

    இதில் ஒருமித்த கருத்து ஏற்படுமா? என்று தெரியவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளில் சில கட்சிகள் காங்கிரசை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வர முயற்சி செய்வதுதான்.

    ராகுலை பிரதமராக ஏற்க மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், சந்திர சேகரராவ் உள்பட பல தலைவர்கள் விரும்பவில்லை. இது எதிர்க்கட்சிகளை ஒற்றுமைபடுத்தும் முயற்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது.

    இதை கடந்த சில தினங்களாக ஆய்வு செய்த காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர். அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முன் நிறுத்தலாம் என்று யோசனை தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் அவரை ஏற்பதில் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

    கர்நாடகாவில் பா.ஜனதாவை வீழ்த்தியதில் கார்கேவுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் கார்கே தலித் இன தலைவர் ஆவார். இதுவரை இந்தியாவில் பிரதமர் பதவிக்கு தலித் இனத்தை சேர்ந்தவர்கள் யாரும் தேர்வு செய்யப்பட்டது இல்லை.

    அந்த வகையில் கார்கேவை முன்னிறுத்தும் போது அவருக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இதற்காக கார்கேவை உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் போட்டியிட வைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

    ஆனால் கார்கேவை எதிர்க்கட்சி தலைவர்களில் எத்தனை பேர் ஏற்பார்கள்? என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது. என்றாலும் பா.ஜனதாவை வீழ்த்த கார்கே தலைமை கை கொடுக்கும் என்று காங்கிரசில் ஒரு சாரார் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

    • நிதிஷ்குமார், 50 ஆண்டுகளாக, சமூக, அரசியல் போராளியாக இருக்கிறார்.
    • பா.ஜனதாவின் மேலாதிக்கத்தை இந்திய அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்.

    புதுடெல்லி :

    பீகாரில், பா.ஜனதாவுடன் உறவை துண்டித்துக்கொண்ட முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரி ஆனார். ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

    இந்தநிலையில், தேஜஸ்வி யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் நிறுத்தப்படுவதாக பேசப்படுவது பற்றி கேட்டதற்கு தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-

    இதற்கு நிதிஷ்குமார்தான் பதில் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பில் நான் எதுவும் பேச முடியாது. ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால், நிதிஷ்குமார் நிச்சயமாக வலிமையான வேட்பாளராக இருப்பார்.

    நிதிஷ்குமார், 50 ஆண்டுகளாக, சமூக, அரசியல் போராளியாக இருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கம் மற்றும் இடஒதுக்கீடு இயக்கங்களில் பங்கேற்றுள்ளார். 37 ஆண்டுகள் பரந்த பாராளுமன்ற, நிர்வாக அனுபவம் பெற்றவர். சக அரசியல் தலைவர்களிடையே நன்மதிப்பை பெற்றிருப்பவர்.

    பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டிருப்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு முன்னறிவிப்பு ஆகும்.

    பெரும்பாலான எதிர்க்கட்சிகள், நாட்டின் முன்னால் உள்ள பெரும் சவாலை உணர்ந்து கொண்டுள்ளன. பா.ஜனதாவின் மேலாதிக்கத்தை இந்திய அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்.

    மேலும், மாநில கட்சிகளும், இதர முற்போக்கு அரசியல் கட்சிகளும் குறுகிய லாப, நஷ்டங்களுக்கு அப்பால் சிந்தித்து, நாட்டை காப்பாற்ற வேண்டும். முளையிலேயே கிள்ளாவிட்டால், பிறகு கடினமாகி விடும்.

    மத்திய அரசு, ஒத்துழைப்பான கூட்டாட்சி பற்றி பேசுகிறது. ஆனால், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை கண்டுகொள்ள மறுக்கிறது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தேவை. ஆனால் அதற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.

    நிதிஷ்குமார் மீது நானும், எனது கட்சியும் விமர்சனங்களை வைத்தது உண்மைதான். அவையெல்லாம் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக ஆற்றிய கடமை. மக்களின் கவலைகளை அரசு கேட்க வேண்டும் என்பதற்காக பேசினோம்.

    நடைமுறையில் நான்தான் முதல்-மந்திரி என்று பா.ஜனதா கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பீகாரில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று நான் முன்பு கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×