search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prime minister candidate"

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார்.
    • பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள்.

    தருமபுரி:

    இந்தியா கூட்டணி கட்சி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ.மணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:

    தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து லட்சகணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுக்களை போட்டு.. மோடிக்கு வைக்க வேண்டும்.

    தருமபுரி தொகுதியில் அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டையில் 11 கோடி ரூபாய் மதிப்பிட்டில் சாலை அமைக்கப்பட்டது உள்ளி்ட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

    தற்போது புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளேன். இதில் தொப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள், தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே திட்டம், ஒகே னக்கல்லில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் காவிரி உபரிநீர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பு காவிரி உபரிநீர் திட்டம், விவசாயிகளுக்கான நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படு்ம். தேர்தலுக்கு தேர்தல் தான் மோடி வந்து செல்வார். இந்தியாவிேலயே முதன் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இந்த திட்டத்தை வெளி மாநிலத தவரும், வெளிநாட்டவரும் பின்பற்றக்கூடிய திட்டமாக இருக்கிறது. இது திராவிட மாடல் அரசு.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் வழங்கப்படும்,.பெட்ரோல் 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயுக்கு வழங்கப்படும். இந்தியா முழுக்க உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி, சமூகநீதிக்காக எதிராக உள்ள பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் இதனை மறுத்தும் வரும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்.

    டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த ராமதாஸ் பா.ஜ.க.வி்ன் ஆட்சிக்கு பூஜ்ஜியத்திற்கு கீழே ஏதாவது மதிப்பெண் இருந்தால் தான் கொடுக்கலாம் என்றார். ஆனால் ராமதாஸ், தற்போது பா.ம.க அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    தேர்தல் நேரத்தில் வந்து செல்வார் பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி செல்வதாக செங்கல்லை நட்டு அடிக்கல் நாட்டி சென்றார், அந்த ஒற்றை கல்லயும் நான் எடுத்து வந்துவிட்டேன்.

    மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன், 29 பைசா, அதாவது செல்லாக்காசு, அப்படியே நீங்களும் அப்படியே அழைக்கலாம். மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக ஜி .எஸ்.டி. திருப்பி தருகிறீர்கள், ஆனால் தமிழகத்திறகு 29 பைசா தான் ஒன்றிய அரசு திருப்பி தருகிறார்கள்.

    மாநில உரிமைகளை அடகு வைத்தது அ.தி.மு.க.தான். உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று அ.தி.மு.க. கூற முடியுமா?, சசிகலாவின் காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர், கடைசியில் அவர்கள் காலை வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு மட்டும் இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த 2 கூட்டணி கட்சிகளையும் விரட்டியடிக்க வேண்டும்.

    கடந்த 10 வருடத்தில் பா.ஜ.க. அரசு செய்த அனைத்து ஊழல்களும் சி.ஏ.ஜி அறிக்கையில் கிடையாது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்திருக்க கூடிய செலவுகளில் 7½ லட்சம் கோடி ரூபாய் பணத்தை காணவில்லை. ஆயுஷ்மான்பவன் திட்டத்தின் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு ஒரே செல்போனிலிருந்து பணம் அனுப்பி இருக்கின்றனர். பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள். இது தான் மோடி அரசு.

    எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமர். இந்தியா கூட்டணியில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும், மோடியை விரட்டியடிக்க வேண்டும், இந்தியாவிக்கே ஒரு விடியல் ஆட்சியை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சந்திரபாபு நாயுடு மற்றும் ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #ChandrababuNaidu #MKStalin
    மணப்பாறை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி பெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.



    இது தொடர்பாக மணப்பாறையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  கூறுகையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் என்றார்.

    ஏற்கனவே சந்தித்த சந்திரசேகர ராவ் என்ன ஆனார்? என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.   #ADMK #ThambiDurai #ChandrababuNaidu #MKStalin
    நாட்டை காப்பாற்றவே அணி திரள்கிறோம் என்றும், ‘நான் பிரதமர் வேட்பாளர் அல்ல’ என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார். #ChandrababuNaidu #MKStalin
    சென்னை:

    சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி விட்டு வெளியே வந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகத்தை காப்பாற்ற மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தேன். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற துறைகளை மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க் கட்சியினரை துன்புறுத்தவே பயன்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி உள்பட எந்த அமைப்பும் பாதுகாப்பாக இல்லை. இந்தியாவில் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது.



    பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எதுவும் நடக்கவில்லை. இதன்மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை என்று மத்திய நிதி மந்திரி ஒத்துக்கொண்டுள்ளார். அதேவேளையில் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவர் கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறி உள்ளார்.

    நாட்டில் ஜனநாயகம் இல்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற விஜய்மல்லையா, நீரவ்மோடி ஆகியோர் இந்தியாவில் இருந்து தப்பித்து விட்டனர். வாராக்கடனால் பல வங்கிகள் திவால் ஆகி விட்டன. மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

    இந்த நாட்டை பா.ஜ.க. விடம் இருந்து காப்பாற்ற வேண்டியது உள்ளது. இதற் காக பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் கட்சியினரை அணி திரட்டி வருகிறோம். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினேன். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை விரைவில் சந்திக்க உள்ளேன்.

    பா.ஜ.க.வுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் ஒற்றுமையாக உள்ளோம். எங்களிடம் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கருத்து இருந்தாலும் ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்றும் எண்ணம் தான் முதன்மையாக இருக்கும்.

    இந்த நாட்டை காப்பாற்ற ஒரே எண்ணத்தோடு பயணம் செய்ய முடிவெடுத்துதான் அணி திரண்டு வருகிறோம். என்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல. எங்கள் அணியில் பலம் வாய்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர்.

    மோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகிதான். பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை இணைப்பது மட்டும் தான் எனது பணி. இந்த அணியை யார் வழி நடத்துவார்கள் என்பதை அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம்.

    தமிழகத்தில் அரசு செயல் படுவதாக தெரியவில்லை. டெல்லியில் இருந்து தான் தமிழகத்தை இயக்குகிறார்கள். அரசியலை தவிர்த்து கிருஷ்ணாநதிநீர், கோதாவரி நீர் ஆகியவற்றை தமிழகத்துக்கு வழங்குவது குறித்தும் மு.க. ஸ்டாலினிடம் பேசினேன்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். 
    ×