search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayaperumal"

    • அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
    • பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் கிராமம் கிராமமாக கூட்டணி கட்சியினருடன் சென்று இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். கீழக்கரை, ஏர்வாடி இதம்பாடல், சிக்கல், மாரியூர், சாயல்குடி கிழக்கு ஒன்றியம் மற்றும் தரைக்குடி, சேதுராஜபுரம் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.


    வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி.உதயகுமார், அன்வர்ராஜா, மணிகண்டன். தேர்தல் பொறுளர்கள் மலேசியா எஸ். பாண்டியன், முன்னாள் எம். பி. நிறைகுளத்தான், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் மு.சுந்தரபாண்டியன், கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முனியசாமி பாண்டியன் தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா, ஒன்றிய செயலாளர்கள் பிரவீன் குமார் ராஜேந்திரன், அந்தோனிராஜ், உள்பட அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

    பிரசாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயபெருமாள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சென்ற இடமெல்லாம் இரட்டை இலைக்கு அதிக மவுசு உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் சுயேட்சைகள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார். சாயல்குடி பகுதியில் அ.தி.மு.க. மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி வீடு, வீடாக சென்று பா. ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    • அனைத்தையும் தி.மு.க. ஆட்சி நிறுத்தி விட்டது.
    • உலக தமிழர்களுக்காக பாடுபட்டவர் விஜயகாந்த்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கமுதியில் பேசியதாவது:-

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பண்பாளர். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க ஓடோடி வருவார். கச்சத்தீவை ஒப்படைத்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் இப்போது கச்சத்தீவை மீட்போம் என்கிறார்கள். மீனவர்களின் பாதுகாப்பு மிக அவசியம், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தான் மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்தையும் தி.மு.க. ஆட்சி நிறுத்தி விட்டது.

    உலக தமிழர்களுக்காக பாடுபட்டவர் விஜயகாந்த். தமிழர்களுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினார். மானாமதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி வழியாக ரெயில் பாதை அமைக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் .

    தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சிதான். அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, ராமநாதபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் எம்எல்ஏ மலேசியா, எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுலத்தான். மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன். தே.மு.தி.க. சிங்கை சின்னா. எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாலர்கள் பெரியசாமி தேவர், காளி முத்து, ராஜேந்திரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கர்ணன். எஸ்.டி. செந்தில்குமார். கருப்பசாமி ஆகியோர் வெற்றி கலந்து கொண்டனர்.

    • ஒரு குடும்பத்தில் பெண் வேலையை பார்த்தால் அந்த குடும்பம் மட்டுமல்லது அந்த சந்ததியே நன்றாக இருக்கும்.
    • வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் புதுக்கோட்டை பகுதிகளுக்கு உட்பட்ட கரூர், ஒக்கூர், குறுந்தலூர்,பெரம்பூர், இரும்பாநாடு, தீயத்தூர். பெருங்குளம், பொன்பேத்தி. வேல்வரை, தாழனூர், மதகம் உட்பட 29 கிராமங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

    அப்போது பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் திரண்டு வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் வேட்பாளர் ஜெயபெருமாள் பேசுகையில், ஒரு குடும்பத்தில் பெண் வேலையை பார்த்தால் அந்த குடும்பம் மட்டுமல்லது அந்த சந்ததியே நன்றாக இருக்கும். அதன் அடிப்படையில் தான் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார் ஜெயலலிதா.

    அதேபோல் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களின் குடும்பங்களை எவ்வித கஷ்டமும் இல்லாமல் கொண்டு செல்லவும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து தாலுகாக்களிலும் இலவச தொழில் மையங்கள் அமைக்கப்பபடும்.

    படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்காமல் பெரிய தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிறப்பு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற அவர்களுக்கு இலவச தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பேசினார். இதில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரம் முத்து, மாவட்ட துணைச் செயலாளர் ராஜநாயகம், அனைத்து உலகை எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஆனி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜெயபெருமாள் தொகுதி முழுவதும் பட்டிதொட்டியெங்கும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
    • எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்கள் என ஆரவாரத்துடன் ஓட்டு கேட்கிறார்கள்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் தொகுதி முழுவதும் பட்டிதொட்டியெங்கும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று இவர் கடலாடி யூனியனில் பூக்குளம், மேல சிறுபோது, இளஞ்செம்பூர், குருவிகாத்தி, தேவர் குறிச்சி, பொதிகுளம், ஆப்பனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

    வேட்பாளர் பா.ஜெயபெருமாளுடன் கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலெட்சுமி முனியசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் என்.கே.முனியசாமி பாண்டியன் தேர்தல் பொறுப்பாளர்கள் மலேசியா எஸ். பாண்டியன், முன்னாள் எம். பி.எம்.எஸ்.நிறைகுளத்தான், சாமிநாதன் ஆகியோர் கடலாடி யூனியனில் வீடு, வீடாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தனர்.

    அப்போது மலேசியா எஸ்.பாண்டியா கூறுகையில், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. கடலாடி யூனியனில் கிராமங்களில் வீடு வீடாக இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு செல்லும் இடங்களிலெல்லாம் வேட்பாளர் பா.ஜெயபெருமாளை ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்கள் என ஆரவாரத்துடன் ஓட்டு கேட்கிறார்கள். ஆகையால் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது என்றார்.

    • நான் ஒரு சாதாரண விவசாயி. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.
    • தி.மு.க. அரசு கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு சாயல்குடி பகுதியில் பூப்பாண்டியபுரம், பிள்ளையார்குளம், நோம்பகுளம், எஸ்.கீரந்தை, காணிக்கூர், கீழசெல்வனூர், பன்னந்தை மேல சிறு போது, இளஞ்செம்பூர் பூக்குளம், ஒருவானேந்தல், தேவர்குறிச்சி ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், நான் ஒரு சாதாரண விவசாயி. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாததால் வானம் பார்த்த பூமியாக உள்ளது. கிராம மக்கள் குடிப்பதற்கே போதுமான குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது. வைகை தண்ணீரை கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் தாலுகா விவசாயத்திற்கு திறந்துவிட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மழைநீர் கடலில் வீணாக கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க. அரசு கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை. படித்த இளைஞர்களுக்கு கிராமங்களிலேயே தொழில் செய்ய தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லை. வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கிராமங்களில் இரட்டை இலைக்கு அமோக வரவேற்பு உள்ளது. தாய்மார்களிடையேட இரட்ரை இலைக்கு அதிக மவுசு, இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள் என்று பேசினார்.

    அப்போது பெண்கள் குலவையிட்டு எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என கோஷமிட்டனர். அதிமுக வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி முனியசாமியாண்டியன், கடலாடி ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், சாயல்குடி ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ்.அந்தோணிராஜ், தனிச்சியம் ராஜேந்திரன், சிக்கல் பிரவீன், தேமுதிக, மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.
    • இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டனர்.

    ராமநாபுரம் பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் மண்டபம் பகுதியில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தபோது பெண்கள் திரண்டு குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்று உறுதியளித்தனர். அப்போது வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:- 

    நான் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன். கிராம மக்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவேன்.

    கடந்த முறை பொய் வாக்குறுதி கூறி வெற்றிபெற்ற எம்.பி.யை அடையாளம் தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா? மக்களை ஏமாற்றி ஓட்டுக்களைப் பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்கின்றவர்கள் மீண்டும் ஓட்டுகேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள். மக்களின் பிரதிநிதிதான் எம்.பி., அதனை மறந்து மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு உங்களிடமே மீண்டும் ஓட்டுகேட்டு வருகிறார். மக்களை ஏமாற்றிய தி.மு.க. கூட்டணிக்கு தக்கபாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனில் அதிக கவனம் செலுத்துவேன். இங்கு மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.

    கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கும் முன்பு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன்பிடி தொழில் நடைபெற்றது. இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டனர். பாராளுமன்ற முதல் கூட்டத்திலேயே தச்சத்தீவு பிரச்சனையை எழுப்புவேன். மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கையாக இருந்தாலும், ஆசிரியர்களின் போராட்டமாக இருந்தாலும் கோரிக்கையை நிறைவேற்ற உடனிருப்பேன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் இவ்வாறு பேசினர்.

    வேட்பாளருடன் ஜெயபெருமாளுடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத ஆட்சியை தூக்கி எறிய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
    • விவசாய தொழிலாளர்களை முன்னேற்றவும், ஏழை தொழிலாளியின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்பாடு படுவேன்.

    ராமதாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம், தொண்டி, சோழாந்தூர், வரவணி, சேத்திடல், ஆனந்தூர், செவ்வாய்பேட்டை, ஆய்ங்குடி, மேலப்பனையூர், சனவெளி, உப்பூர்சத்திரம், பாரனூர், திருப்பாலைக்குடி ஆகிய கிராமங்களில் வீடு வீடாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-

    பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றும் தி.முகவுக்கு பாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இந்த நாடக ஆட்சியில் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத ஆட்சியை தூக்கி எறிய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயிகளின் அனைத்து கஷ்டங்களையும் உணர்ந்தவன். விவசாயியான என்னை அதிமுக வேட்பாளராக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    விவசாய தொழிலாளர்களை முன்னேற்றவும், ஏழை தொழிலாளியின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்பாடு படுவேன். கடந்த காலங்களில் மக்களின் ஓட்டுக்களைப்பெற்று பகட்டாக கோடிஸ்வரன்களாக வீதிகளில் வலம் வருபவர்களை ஒதுக்குங்கள். மக்களுக்காக பாடுபடுவர்களை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன். மக்களுக்கு உதவவும், அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் குரல் கொடுப்பேன்.

    மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட கடலில் இறங்கியும் போராட தயங்க மாட்டேன். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தைவலுப்படுத்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் கே.சி.ஆனிமுத்து, ஆர்.எஸ். மங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.ஜி.திருமலை, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ராஜா, பழ.கருப்பையா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ஷாஜ கான், பேரூராட்சி செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா உள்பட கூட்டணி கட்சியினர் சென்றனர்.

    • நான் ஒரு சாதாரண விவசாயி.
    • விவசாய கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவேன்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் முதுகுளத்தூர் பகுதியில் வளநாடு, தேரிருவேலி, காக் கூர், கொளுந்துரை சாம்பகுளம், கீழத்தூவல், சேரி, வெண்ணீர வாய்க்கால், செல்வநாயகபுரம். உடையநாதபுரம், அச்சங்குளம், நல்லுக்குறிச்சி அபிராமம் பல்வேறு கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-

    தமிழ்நட்டில் நடப்பது நாடக ஆட்சி. மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுகவின் மோசடி அரசியலை மக்கள் உணர்ந்து விட்டனர். 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே தலைகாட்டாமல் மீண்டும் ஓட்டுகேட்டுவரும் எம்.பி.க்கு பாடம் புகட்டுங்கள்.

    ஜெயலலிதாவின் ஆட்சியில் கிராம மக்களை வலுப்படுத்த ஆடு, மாடு, கோழி மற்றும் பெண்களுக்கு தாலிக்கு தங்கமும் கொடுத்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டன. கிராமங்களில் கூட போதை அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளன.

    நான் ஒரு சாதாரண விவசாயி. உங்களுடனே இருப்பேன். விவசாய கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவேன். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். எந்த தடை இருந்தாலும் கிராமங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்ற இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

    வேட்பாளருடன் முன்னான் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுளத்தான், முன்னான் மாவட்ட ஊராட்சி சேர்மன் வக்கீல் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றிய கழக செயலாளர்கள் கோ.கர்ணன், என்.டி.செந்தில்குமார். கருப்புச்சாமி. ஆனை சேரி முத்துராமலிங்கம், அம்சராஜ உள்பட அ.தி.மு.க கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

    • கச்சத்தீவு பற்றி பேசும் முழு உரிமை அ.தி.மு.க.வுக்குத்தான் உண்டு.
    • மீனவர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா. ஜெயபெருமாள் மண்டபம் கேம்ப் மற்றும் பாம்பன் ஆகிய மீனவ கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது வழியெங்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர். மக்கள் மத்தியில் வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:-

    நான் சாதாரன விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது பையனுக்கு ராமேஸ்வரத்தில் பெண் எடுத்துள்ளேன். நான் அடிக்கடி ராமேஸ்வரத்துக்கு வந்து செல்கிறேன். மீனவர்களின் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மீனவ கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மேம்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சிதான். கச்சத்தீவு பற்றி பேசும் முழு உரிமை அ.தி.மு.க.வுக்குத்தான் உண்டு. கச்சத்தீவை தாரைவார்த்தவர்களே கச்சத்தீவு குறித்து பிதற்றுகிறார்கள். மீனவர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்.

    நான் உங்களில் ஒருவன். மீனவர் நலனில் அக்கரை உள்ளவன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன், தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுளத்தான், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கே.சி.ஆணிமுத்து, மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சசிவணன், திருவாடனை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆசை ராமநாதன், வடக்குஒன்றிய செயலாளர் ஏ.ஆண்டவர், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் செ.நாகராஜன் ராஜா மற்றும் தே.மு.தி.க., எஸ். டி.பி.ஐ., புதிய தமிழகம், மருது சேனா நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×