search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொகுதி பக்கமே தலைகாட்டாமல் மீண்டும் ஓட்டுகேட்டுவரும் எம்.பி.க்கு பாடம் புகட்டுங்கள்
    X

    தொகுதி பக்கமே தலைகாட்டாமல் மீண்டும் ஓட்டுகேட்டுவரும் எம்.பி.க்கு பாடம் புகட்டுங்கள்

    • நான் ஒரு சாதாரண விவசாயி.
    • விவசாய கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவேன்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் முதுகுளத்தூர் பகுதியில் வளநாடு, தேரிருவேலி, காக் கூர், கொளுந்துரை சாம்பகுளம், கீழத்தூவல், சேரி, வெண்ணீர வாய்க்கால், செல்வநாயகபுரம். உடையநாதபுரம், அச்சங்குளம், நல்லுக்குறிச்சி அபிராமம் பல்வேறு கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-

    தமிழ்நட்டில் நடப்பது நாடக ஆட்சி. மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுகவின் மோசடி அரசியலை மக்கள் உணர்ந்து விட்டனர். 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே தலைகாட்டாமல் மீண்டும் ஓட்டுகேட்டுவரும் எம்.பி.க்கு பாடம் புகட்டுங்கள்.

    ஜெயலலிதாவின் ஆட்சியில் கிராம மக்களை வலுப்படுத்த ஆடு, மாடு, கோழி மற்றும் பெண்களுக்கு தாலிக்கு தங்கமும் கொடுத்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டன. கிராமங்களில் கூட போதை அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளன.

    நான் ஒரு சாதாரண விவசாயி. உங்களுடனே இருப்பேன். விவசாய கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவேன். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். எந்த தடை இருந்தாலும் கிராமங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்ற இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

    வேட்பாளருடன் முன்னான் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுளத்தான், முன்னான் மாவட்ட ஊராட்சி சேர்மன் வக்கீல் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றிய கழக செயலாளர்கள் கோ.கர்ணன், என்.டி.செந்தில்குமார். கருப்புச்சாமி. ஆனை சேரி முத்துராமலிங்கம், அம்சராஜ உள்பட அ.தி.மு.க கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×