search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றும் தி.மு.க.-வுக்கு பாடம் புகட்ட வேண்டும்
    X

    பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றும் தி.மு.க.-வுக்கு பாடம் புகட்ட வேண்டும்

    • விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத ஆட்சியை தூக்கி எறிய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
    • விவசாய தொழிலாளர்களை முன்னேற்றவும், ஏழை தொழிலாளியின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்பாடு படுவேன்.

    ராமதாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம், தொண்டி, சோழாந்தூர், வரவணி, சேத்திடல், ஆனந்தூர், செவ்வாய்பேட்டை, ஆய்ங்குடி, மேலப்பனையூர், சனவெளி, உப்பூர்சத்திரம், பாரனூர், திருப்பாலைக்குடி ஆகிய கிராமங்களில் வீடு வீடாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-

    பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றும் தி.முகவுக்கு பாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இந்த நாடக ஆட்சியில் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத ஆட்சியை தூக்கி எறிய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயிகளின் அனைத்து கஷ்டங்களையும் உணர்ந்தவன். விவசாயியான என்னை அதிமுக வேட்பாளராக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    விவசாய தொழிலாளர்களை முன்னேற்றவும், ஏழை தொழிலாளியின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்பாடு படுவேன். கடந்த காலங்களில் மக்களின் ஓட்டுக்களைப்பெற்று பகட்டாக கோடிஸ்வரன்களாக வீதிகளில் வலம் வருபவர்களை ஒதுக்குங்கள். மக்களுக்காக பாடுபடுவர்களை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன். மக்களுக்கு உதவவும், அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் குரல் கொடுப்பேன்.

    மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட கடலில் இறங்கியும் போராட தயங்க மாட்டேன். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தைவலுப்படுத்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் கே.சி.ஆனிமுத்து, ஆர்.எஸ். மங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.ஜி.திருமலை, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ராஜா, பழ.கருப்பையா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ஷாஜ கான், பேரூராட்சி செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா உள்பட கூட்டணி கட்சியினர் சென்றனர்.

    Next Story
    ×