search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanathapuram constituency"

    • அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
    • பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் கிராமம் கிராமமாக கூட்டணி கட்சியினருடன் சென்று இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். கீழக்கரை, ஏர்வாடி இதம்பாடல், சிக்கல், மாரியூர், சாயல்குடி கிழக்கு ஒன்றியம் மற்றும் தரைக்குடி, சேதுராஜபுரம் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.


    வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி.உதயகுமார், அன்வர்ராஜா, மணிகண்டன். தேர்தல் பொறுளர்கள் மலேசியா எஸ். பாண்டியன், முன்னாள் எம். பி. நிறைகுளத்தான், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் மு.சுந்தரபாண்டியன், கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முனியசாமி பாண்டியன் தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா, ஒன்றிய செயலாளர்கள் பிரவீன் குமார் ராஜேந்திரன், அந்தோனிராஜ், உள்பட அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

    பிரசாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயபெருமாள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சென்ற இடமெல்லாம் இரட்டை இலைக்கு அதிக மவுசு உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் சுயேட்சைகள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார். சாயல்குடி பகுதியில் அ.தி.மு.க. மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி வீடு, வீடாக சென்று பா. ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    • அனைத்தையும் தி.மு.க. ஆட்சி நிறுத்தி விட்டது.
    • உலக தமிழர்களுக்காக பாடுபட்டவர் விஜயகாந்த்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கமுதியில் பேசியதாவது:-

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பண்பாளர். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க ஓடோடி வருவார். கச்சத்தீவை ஒப்படைத்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் இப்போது கச்சத்தீவை மீட்போம் என்கிறார்கள். மீனவர்களின் பாதுகாப்பு மிக அவசியம், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தான் மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்தையும் தி.மு.க. ஆட்சி நிறுத்தி விட்டது.

    உலக தமிழர்களுக்காக பாடுபட்டவர் விஜயகாந்த். தமிழர்களுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினார். மானாமதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி வழியாக ரெயில் பாதை அமைக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் .

    தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சிதான். அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, ராமநாதபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் எம்எல்ஏ மலேசியா, எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுலத்தான். மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன். தே.மு.தி.க. சிங்கை சின்னா. எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாலர்கள் பெரியசாமி தேவர், காளி முத்து, ராஜேந்திரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கர்ணன். எஸ்.டி. செந்தில்குமார். கருப்பசாமி ஆகியோர் வெற்றி கலந்து கொண்டனர்.

    • ஒரு குடும்பத்தில் பெண் வேலையை பார்த்தால் அந்த குடும்பம் மட்டுமல்லது அந்த சந்ததியே நன்றாக இருக்கும்.
    • வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் புதுக்கோட்டை பகுதிகளுக்கு உட்பட்ட கரூர், ஒக்கூர், குறுந்தலூர்,பெரம்பூர், இரும்பாநாடு, தீயத்தூர். பெருங்குளம், பொன்பேத்தி. வேல்வரை, தாழனூர், மதகம் உட்பட 29 கிராமங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

    அப்போது பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் திரண்டு வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் வேட்பாளர் ஜெயபெருமாள் பேசுகையில், ஒரு குடும்பத்தில் பெண் வேலையை பார்த்தால் அந்த குடும்பம் மட்டுமல்லது அந்த சந்ததியே நன்றாக இருக்கும். அதன் அடிப்படையில் தான் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார் ஜெயலலிதா.

    அதேபோல் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களின் குடும்பங்களை எவ்வித கஷ்டமும் இல்லாமல் கொண்டு செல்லவும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து தாலுகாக்களிலும் இலவச தொழில் மையங்கள் அமைக்கப்பபடும்.

    படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்காமல் பெரிய தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிறப்பு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற அவர்களுக்கு இலவச தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பேசினார். இதில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரம் முத்து, மாவட்ட துணைச் செயலாளர் ராஜநாயகம், அனைத்து உலகை எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஆனி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜெயபெருமாள் தொகுதி முழுவதும் பட்டிதொட்டியெங்கும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
    • எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்கள் என ஆரவாரத்துடன் ஓட்டு கேட்கிறார்கள்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் தொகுதி முழுவதும் பட்டிதொட்டியெங்கும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று இவர் கடலாடி யூனியனில் பூக்குளம், மேல சிறுபோது, இளஞ்செம்பூர், குருவிகாத்தி, தேவர் குறிச்சி, பொதிகுளம், ஆப்பனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

    வேட்பாளர் பா.ஜெயபெருமாளுடன் கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலெட்சுமி முனியசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் என்.கே.முனியசாமி பாண்டியன் தேர்தல் பொறுப்பாளர்கள் மலேசியா எஸ். பாண்டியன், முன்னாள் எம். பி.எம்.எஸ்.நிறைகுளத்தான், சாமிநாதன் ஆகியோர் கடலாடி யூனியனில் வீடு, வீடாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தனர்.

    அப்போது மலேசியா எஸ்.பாண்டியா கூறுகையில், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. கடலாடி யூனியனில் கிராமங்களில் வீடு வீடாக இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு செல்லும் இடங்களிலெல்லாம் வேட்பாளர் பா.ஜெயபெருமாளை ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்கள் என ஆரவாரத்துடன் ஓட்டு கேட்கிறார்கள். ஆகையால் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது என்றார்.

    • சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டி.
    • ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், ராமநாதபரத்தில் போட்டியிடும் 5 ஓ.பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்மூலம், ராமநாதபுரத்தில், 5 ஓ.பன்னீர்செல்வங்களும் சுயேச்சையாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

    • நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம்.
    • அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

    இதில், 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

    அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. அவரே விரைவில் அறிவிப்பார் என அண்ணாமலை கூறினார்.

    இந்நிலையில், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம். அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர்.

    தொண்டர்களின் பலத்தை அறிய ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளோம்.

    அதனால், ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எங்களுக்குள் எந்தவித கருத்துவேறுபாடும் கிடையாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • ஏணி சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியே போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏணி சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தலில் கடந்த 52 ஆண்டுகளுக்கு பின்னர் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றுள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் தொகுதியில் திருச்சுழி, அறந்தாங்கி, திருவாடானை, பரமக்குடி (தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    இவற்றில் 7,75,765 ஆண், 7,82,063 பெண், மூன்றாம் பாலினத்தவர் 82 பேர் என 15, 57,910 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் 10,60,802 வாக்குகள் பதிவாகின.

    ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதா வேட்பாளராக நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க. வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக புவனேஸ்வரி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விஜயபாஸ்கர் ஆகியோர் போட்டியிட்டனர்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இறுதிவரை நவாஸ்கனி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். 28 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் 16-வது சுற்றில் மட்டும் நயினார் நாகேந்திரன் அதிக வாக்குகள் பெற்றார். மற்ற 27 சுற்றுகளிலும் நவாஸ் கனி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.

    தபால் வாக்குகளில் நவாஸ் கனி(இ.யூ.மு.லீ.) 2352, பாரதிய ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 1517, வ.து.ந.ஆனந்து (அ.ம.மு.க.) 611 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவிற்கு 50 வாக்குகள் பதிவாகியுள்ளது.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் இறுதி முடிவு இன்று அதிகாலை 1 மணிக்கு அறிவிக்கப்பட்டது. தி.மு.க கூட்டணி முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி 1,27,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கலெக்டர் வீரராகவராவ் அறிவித்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.

    நவாஸ் கனி (இ.யூ.மு.லீ.) -4,69,943

    நயினார் நாகேந்திரன் (பா.ஜனதா) -3,42,821

    வ.து.ந.ஆனந்த் (அ.ம.மு.க.) -1,41,806

    புவனேஸ்வரி (நாம் தமிழர் கட்சி) -46,385

    விஜய பாஸ்கர் (ம.நீ.ம.) -14,925

    1967-ம் ஆண்டு நடைபெற்ற ராமநாதபுரம் பாராளுமன்றத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் வேட்பாளர் எஸ்.எம்.சரிப் களம் இறக்கப்பட்டார். தராசு சின்னத்தில் போட்டியிட்ட அவர்வெற்றி பெற்றார்.

    கடந்த 52 ஆண்டுகளுக்கு பின்னர் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றுள்ளார்.
    ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    ராமநாதபுரம்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

    ராமநாதபுரம் தொகுதியில் 5 மணி நிலவரப்படி இந்திய யூனியன் முஸ்லிம் லிக் வேட்பாளர் நவாஸ் கனி 1,66,912 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். பாஜக வேட்பாளர்  நயினார் நாகேந்திரன் 1,12,595 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.

    அமமுக வேட்பாளர் ஆனந்த், 47 ஆயிரத்து 82 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரி 16 ஆயிரத்து 243 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விஜயபாஸ்கர் 7 ஆயிரத்து 121 வாக்குகளும் பெற்றிருந்தனர். 
    ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உறுதியான நிலையில் அந்த தொகுதியில் பாரதிய ஜனதாவை வீழ்த்த கமல்ஹாசன் வியூகம் அமைத்து வருகிறார். #MakkalNeedhiMaiam #KamalHassan #Election2019
    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தலைமையில் வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    கமல் கட்சி சார்பில் போட்டியிட இருப்பவர்கள் பற்றி பல்வேறு யூகங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் தென் சென்னையிலோ ராமநாதபுரத்திலோ களம் இறங்கலாம் என்றும் கமீலா நாசர் மத்திய சென்னையிலும் துணைத் தலைவர் மகேந்திரன் பொள்ளாச்சியிலும் களம் இறக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின.

    மத்திய சென்னை பகுதிகளில் கமீலா நாசருக்கு ஓட்டு கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. கமல்ஹாசனுக்காக ராமநாதபுரம் பகுதியில் கட்சி சார்பில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது. வேட்பாளர் தேர்வு பற்றி தலைமை நிர்வாகிகள் கூறும்போது:-

    வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் பல்வேறு ஆலோசனைகள் நடத்தி வருகிறார். அவர் எடுத்துள்ள முடிவுகளில் மிகவும் முக்கியமான ஒன்று பா.ஜனதாவுக்கு கடுமையான போட்டி கொடுத்து அவர்களை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பது. இதற்காக அந்த கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கும் பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளார்.

    பா.ஜனதா கன்னியாகுமரி, சிவகங்கை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. எனவே இந்த 5 தொகுதிகளிலும் கட்சியில் உள்ள பிரபலங்களை களம் இறக்க இருக்கிறோம்.

    ராமநாதபுரத்தில் கமல்ஹாசன் போட்டியிடுவது உறுதி. கோயம்புத்தூரில் துணைத்தலைவர் மகேந்திரன் களம் காண்பார். மற்ற தொகுதிகளில் ஸ்ரீபிரியா, கமீலா நாசர், சினேகன், சுகா, கு.ஞானசம்பந்தம், கோவை சரளா இவர்களில் 3 பேர் களம் இறங்குவார்கள்.



    கமல் கட்சியில் இணையாத அதே நேரத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற பிரபலங்களுடனும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. எனவே நாளை மறுநாள் வெளியாகும் பட்டியலில் சில ஆச்சரியங்கள் இருக்கலாம். ஆனால் பா,ஜனதாவை இங்கே நோட்டாவுக்கு அடுத்த இடத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வோம்.

    பா.ஜனதா மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கமல் கட்சி தொடங்கியதே அ.தி.மு.க அமைச்சர்களை எதிர்த்து தான். ஆனால் சமீப காலமாக பா.ஜனதா தலைவர்கள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். டார்ச் லைட் சின்னம் கிடைத்ததை பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார். பதிலுக்கு கமலும் நோட்டாவால் தொலைந்து போன பா.ஜனதாவை டார்ச் லைட் வைத்து தேடப்போகிறேன் என்றார்.

    இது தொடர்பாக எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுகளை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பா.ஜனதாவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரைத் தேட வேண்டியிருக்கும்“ என பதிவிட்டார். இதுபோன்ற மோதல்களால் கமல் பா.ஜனதாவை வீழ்த்தியே தீருவேன் என்று தீவிரம் காட்டுகிறார்’.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கமல் ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உறுதியான நிலையில் அந்த தொகுதியில் கமல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். குறிப்பாக குடிநீர் பிரச்சினையை கையில் எடுத்து தொகுதி முழுக்க இலவசமாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து அந்த மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

    எப்போதுமே தமிழ் நாட்டின் தண்ணியில்லாக்காடு என்றால் அது ராமநாதபுரம் மாவட்டம்தான். அந்த அளவுக்கு தண்ணீர் பிரச்சினை. கட்சி ஆரம்பிக்கும்போதே, ‘உங்கள் ஊரில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன, ஒரு பட்டியல் கொடுங்கள், அதை சரி செய்ய முயலுங்கள்” என்று கமல் சொன்னார். அதன்படி நாங்கள் இந்த 6 மாதமாக இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறோம்.

    பரமக்குடி தாலுகாவில் சோமநாதபுரம், வெங்கடேஷ்வரா காலனி, குலவிப்பட்டி மற்றும் அண்டக்குடி உள்ளிட்ட 25 கிராமங்களுக்கும் மூன்று நாளுக்கு ஒரு முறை தண்ணீர் லாரி கொண்டு சென்று அவர்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வருகின்றோம்.

    இந்த 6 மாதத்தில் மாவட்டம் முழுவதும் இந்த பணி விரிவடைந்துள்ளது. இது கண்டிப்பாக வாக்குகளாக மாறும். கமல் இங்கு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். இதனை தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். #MakkalNeedhiMaiam #KamalHassan #Election2019
    ×