search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்குபோட்டு"

    • மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    மேற்கு வங்காளம் நடியா மாவட்டம் சோனக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஒபர்னாசிங் (வயது 36). இவரது முதல் கணவர் திலிப் சிங் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய 3 மகள்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இதேபோல் ஜெந்துசிங் (26) என்பவரின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கும் 3 மகன்கள் உள்ளனர்.

    இதனையடுத்து ஒபர்னாசிங்கும், ஜெந்துசிங்கும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக இருந்து வருகின்றனர். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுமேட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 2 பேரும் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒபர்னாசிங் முதல் கணவரின் மகள்களுக்கு ரூ.15 ஆயிரம் அனுப்ப பணம் கேட்டு உள்ளனர். ஜெந்துசிங் இப்போது பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் உடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • குடும்பத்த–கராறு காரணமாகவே தங்கராசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • தற்கொலை செய்து கொண்ட ெதாழிலாளி உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோபி:

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதிநகரை சேர்ந்தவர் தங்கராஜ்(43). கூலி தொழிலாளி. இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ரகுபதி, அஸ்விந்த் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    தங்கராஜூக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜூவிற்கும் அவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து ஈஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். ரகுபதி, அஸ்விந்த் பள்ளிக்கு சென்று விட்டனர்.

    பின்னர் மாலை பள்ளியில் இருந்து ரகுபதியும், அஸ்விந்தும் வீட்டிற்கு வந்த போது வீட்டில் தங்கராஜ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிய–டைந்தனர்.

    அதைத்தொடர்ந்து தங்கராசுவின் உடலை கோபி போலீசாருக்கு தெரியாமல் எரித்துவிட அவரது உறவினர்கள் முயற்சி செய்து தங்கராசு–வின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கோபிசெட்டி–பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அதில் குடும்பத்த–கராறு காரணமாகவே தங்கராசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து தங்கராசுவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனை–க்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட ெதாழிலாளி உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஈரோட்டில் அடமானம் வைத்த வாலிபர் நகையை மீட்ட பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
    • தற்கொலை செய்ய முடிவெடுத்த வாலிபர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு ராம்நகர் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (37). இவரது மனைவி சவுந்தர்யா (30). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி 2 பேரும் தறிப்பட்டையில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து பணத்தை செலவழித்து உள்ளார்.

    இதனையடுத்து அடமானம் வைத்த நகையை மீட்ட பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே சரவணன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இருவரும் தூங்க சென்று விட்டனர். பின்னர் தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    அப்போது அவரது மகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    உடனே சவுந்தர்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அறையில் இளங்கோ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சடைந்தார்.
    • இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெள்ளன்கோவில் காமராஜ் நகரை சேர்ந்த வீரன் மகன் கேசவன்(21). இவர் அவரது தந்தை டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவரது நண்பரை பார்த்து விட்டு வந்து வீட்டில் அவரது அம்மாவின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கேசவனை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கேசவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதன்பேரில் சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரையை சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்திவேல்(27). இவர் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பூங்கம்பள்ளியில் அவரது மனைவி, குழந்தையுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சக்திவேலுக்கு மது பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் மதுப்பழக்கத்தை விட முடியாமல் மனவேதனையில் இருந்த சக்திவேல் சம்பவத்தன்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை மீட்டு கோவையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார்.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு பெரியசேமூர் கனிராவுத்தர்குளம், காந்திநகரை சேர்ந்தவர் இளங்கோ (19). இவர் காரைவாய்க்கால் பகுதியில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் சி.ஏ. படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த இளங்கோ செல்போனில் சிறிது நேரம் யாரிடமோ பேசிவிட்டு சாப்பிடாமல் தூங்க சென்று விட்டார். அதிகாலை இளங்கோவின் மாமனார் எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் இளங்கோ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சடைந்தார்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நந்தகோபால் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை ஈரோடு ரோடு வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் நந்தகோபால் (வயது 21). ஆட்டோ டிரைவர். கடந்த 6 மாதமாக நந்தகோபால் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தான் செத்து போவேன் என்று கூறி தூக்குமாட்டிக்கொள்வதாக மிரட்டியுள்ளார்.

    இதனை கண்ட அவரது தந்தை ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் நந்தகோபால் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். பின்னர் வீரன் அவரை சமாதானப்படுத்தி விட்டு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது நந்தகோபால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    இதனை பார்த்த அவர் உடனடியாக நந்தகோபாலை கீழே இறக்கி ஆட்டோவில் ஏற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் நந்தகோபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மொடக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் கேபிள் கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவரது மனைவி கோகிலா. இவர்கள் பெருந்துறையில் கேபிள் கடை வைத்து நடத்தி வந்தனர்.

    கார்த்திகேயனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்அவர் தனது பெற்றோரிடம் சொத்தில் பங்கு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். கடன் தொல்லையால் கார்த்திகேயன் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் வண்ணாம் பாறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மனைவியுடன் வந்து தங்கி இருந்ததார். இதையடுத்து கோகிலா அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த கார்த்திகேயன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலத்தில் பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • ஜீவானந்தம் மது குடித்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகன் ஜீவானந்தம் (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜீவானந்தம் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். அதனால் மனமுடைந்த மாணவன் வீட்டுக்குள் சென்று தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை பெற்றோர் காப்பாற்றி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் பரிதாபமாக இறந்தார். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே தங்கை கணவருடன் வாழாமல் வீட்டுக்கு வந்ததால் சோகத்தில் அண்ணன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து அகிலனின் தாய் ரீட்டா அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் அகிலன் (25). இவரது சகோதரி உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலை வீட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் நீலகிரியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் கணவருடன் சேர்ந்து வாழாமல் கடந்த 14-ந் தேதி காஞ்சிக்கோவிலில் உள்ள தனது தாய் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட அகிலன் சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொ லைக்கு முயன்றுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அகிலனின் தாய் ரீட்டா அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இதய பிரச்சனை காரணமாக முதியவர் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எண்ணமங்கலம் செல்லாம்பாளையம் மேலூரை சேர்ந்தவர் கந்தசாமி(80). இவருக்கு இதய பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கந்தசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.

    சம்பவதன்று வீட்டில் இருந்து வெளியேறி வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அங்கு அவரது லுங்கியால் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து பர்கூர் போலீசார் விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்த மிஷின் ஆப்பரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (38). தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நிர்மலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நிர்மலின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு காட்டுப்புதூர் திருமண விழாவிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது நிர்மல் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் நிர்மல் வரும் வழியிலேயே இறந்து–விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனை திருப்பி செலுத்த முடியாததால் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
    • இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி பொன்னி நகர், முதல் வீதியை சேர்ந்தவர் அசோக் (30). ஆக்டிக் டிரைவர். இவரது மனைவி லலிதா (27). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சொந்த வீடு கட்டுவதற்காக அசோக் வங்கி ஒன்றில் கடன் பெற்றிருந்தார்.

    அதற்கு முறையாக லோன் கட்டி வந்து இருந்த போது கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாததால் அவரால் வங்கியில் லோனை குறிப்பிட்ட நேரத்திற்கு கட்ட முடியவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஊருக்கு சென்றிருந்த லலிதா தனது அம்மாவுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள் அறையில் அசோக் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அசோக்கை மீட்டு சிகிச்சை க்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அசோக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன விரக்தியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நம்பியூர் அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (21). அதே பகுதியில் தனது பாட்டியின் வீட்டில் தங்கி மரம் ஏறும் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் தனது தாயார் ராசாத்தியுடன் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நீண்ட நேரமாக சாப்பிட வராததால் பாட்டி ராமாத்தாள் கார்த்திக்கை சாப்பிட கூப்பிட சென்று பார்த்த பொழுது கார்த்திக் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து ராமாத்தாள் உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம் தகவல் சொல்லி கார்த்திகை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக கூறினர்.

    அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து கார்த்திக்கின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×