search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    • ஈரோட்டில் அடமானம் வைத்த வாலிபர் நகையை மீட்ட பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
    • தற்கொலை செய்ய முடிவெடுத்த வாலிபர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு ராம்நகர் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (37). இவரது மனைவி சவுந்தர்யா (30). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி 2 பேரும் தறிப்பட்டையில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து பணத்தை செலவழித்து உள்ளார்.

    இதனையடுத்து அடமானம் வைத்த நகையை மீட்ட பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே சரவணன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இருவரும் தூங்க சென்று விட்டனர். பின்னர் தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    அப்போது அவரது மகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    உடனே சவுந்தர்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×