search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருகே"

    • அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள கன்னி விநாயகர் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பத்மாவதி
    • மோட்டார் சைக்கிளை பத்மாவதி ஓட்டிச்சென்றார். அவர் மகள் தமிழிசை பின்னால் அமர்ந்து இருந்தார்.


    நாகர்கோவில் :அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள கன்னி விநாயகர் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பத்மாவதி (வயது 45). இவரும், இவரது மகள் தமிழிசை (25) என்பவரும் நேற்று மாலை காவல்கிணற்றில் இருந்து தனது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் கன்னி விநாயகர்புரத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பத்மாவதி ஓட்டிச்சென்றார். அவர் மகள் தமிழிசை பின்னால் அமர்ந்து இருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளை டாஸ்மாக் மதுக்கடை அருகில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிரே கிருஷ்ணன்புதூரை சேர்ந்த டூலிப் ஆன்றோ (34) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் பத்மாவதியும், தமிழிசையும் தூக்கி வீசப்பட்டனர். இதற்கிடையில் பின்னால் வந்த வாகனம் ஒன்று பத்மாவதி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பத்மாவதி தனது மகள் தமிழிசை கண் எதிரே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் தமிழிசை புகார் செய்தார். அதன்பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அங்கு அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண பிள்ளை (வயது 55). இவர் குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரைகளை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அவரது மனைவி செல்லம்மாள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் ராமகிருஷ்ண பிள்ளை அனு மதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். உடல்நலம் பாதித்து அவதிப்பட்டதால் வாழ்வில் வெறுப்படைந்து அவர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்து வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமை யில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நாகர்கோவில் :பா.ஜ.க. பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்குகளியக்காவிளை அருகே கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்து வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்தநிலை யில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து செம்மண் கடத்து வதை பார்த்துள்ள னர். அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். ஆனால் போலீசாரை பார்த்த உடன் செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.

    பின்னர் டெம்போவை யும், கிட்டாச்சி எந்திரத்தை யும் பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் செம்மண் கடத்தியதாக பா.ஜ.க.வின் முஞ்சிறை மேற்கு ஒன்றிய தலைவர் விஜில்குமார் மற்றும் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த றோய், மடிச்சல் பகுதியை சேர்ந்த ஆபீஸ், களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


    • தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது எப்படி என்ற கேள்வியும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
    • 7 வயது சிறுவன் மழைநீர் ஓடையில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இரணியல்:

    இரணியல் அருகே வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் மழைநீர் ஓடையில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாலமான மழைநீர் ஓடை கட்டப்பட்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது எப்படி என்ற கேள்வியும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

    இந்த நிலையில் வில்லுக்குறி சந்திப்பில் சுமார் 4 அடி நீளம், 4 அடி உயரம் என கட்டப்பட்ட மழைநீர் ஓடை உள்ளது. ஆனால் இந்த ஓடை தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் வெறும் 1 அடி விட்டம் என தூர்ந்துபோய் கிடக்கிறது. இதனாலேயே தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் கேபிள்கள், குடிநீர் குழாய்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என ஆக்கிரமித்து உள்ள இந்த சிறிய இடைவெளி வழியாகவே சிறுவன் ஆஷிக் அதிர்ஷ்டவசமாக வெளியேறி இருக்கிறான். இந்த மூலையில் சுருங்கிபோய் கிடக்கும் தில்லாலங்கடி மழைநீர் ஓடையை சிலர் சமூக வலைதளத்தில் படம் பிடித்து பரப்பி உள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

    • இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார்.
    • பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    இரணியல்:

    நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 46). நடிகர் விக்ரம் ரசிகர்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்தவர். இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார். பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வில்லுக்குறி தாண்டி தோட்டியோட்டில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட பாலு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலுவின் மனைவி துர்காதேவி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர்.

    • அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளது. இங்கு மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன் பிடித்தொழில் ஆகும். இங்கு 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த கடற்கரை பகுதியில் அடிக்கடி கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இந்த கடல்சீற்றத்தின் போது ஏற்படும் ராட்சத அலையில் நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்கள் சிக்கி கவிழ்ந்து விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் பலியாகும் ஆபத்தான நிலையும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சீற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தூண்டில் வளைவு பாலம் ராட்சத அலையினால் உடைந்து சேதம்அடைந்து விட்டன. இதனால் சேதம் அடைந்த இந்த தூண்டில் வளைவு பாலத்தை சீர மைக்க வேண்டும் என்று இந்த பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தூண்டில் வளைவு பாலம் நீட்டிக்கப் பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தூண்டில் வளைவு பாலத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களை போடாமல் சிறிய கற்களை போட்டு தூண்டில் வளைவு பாலத்தை கடலுக்குள் நேராக அமைக்காமல் வளைவாக அமைத்து வருவதால் மீனவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீ னவர்களின் நாட்டுப்படகு கள் மற்றும் வள்ளங்கள் ராட்சத அலையில் சிக்கி அடிக்கடி கவிழ்ந்து மீனவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் பகுதி மீனவர்கள் கன்னியா குமரி, சின்னமுட்டம் போன்ற பகுதிகளுக்கு தங்களது நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களை கொண்டு சென்று மீன்பிடி தொழில் செய்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே கோவளம் கடற்கரையில் அமைக்கப்படும் தூண்டி வளைவு பாலத்தை தரமாகவும், நீளமாகவும் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கோவளம் பகுதியை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று பொதுப்பணித் துறை கடல் அரிப்பு தடுப்பு கோட்ட பொறியாளர்கள் கோவளம் மீனவர் பிரதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் கோவளம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலத்தை கூடுதலாக 20 மீட்டர் நீளம் நீட்டித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன் பயனாக கோவளம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கம்போல் கோவளம் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
    • இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே நீங்காரவிளை, முளகுமூடு, பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் சினேகா (25) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மது அருந்தி விட்டு வந்து மனைவி சினேகாவிடம் தகராறு செய்வது வழக்கம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்து மனைவி சினேகாவை அடித்து கொடுமை படுத்தி உள்ளார். அவர் தனது 3 பிள்ளைகளையும் அழைத் துக் கொண்டு தன் தந்தை வீட்டுக்கு சென்றார். மனைவி தன்னை விட்டு சென்றதை எண்ணி மன வேதனையில் சுரேஷ் இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறி கம்பியில் தூக்கில் தொங்கி னார்.

    இதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்து சினேகாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து உடனே திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சினேகா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அனிஷை ஆஷிக் றோஸ் கூப்பிட்டுள்ளார்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதி காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் ராஜன் (வயது 35). இவர் வேங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்தி ஆசிரியராக உள்ளார். வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் றோஸ் மகன் ஆஷிக்றோஸ் ஆகியோர் அதே பகுதியில் மரப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆஷிக் றோசின் திருமண செலவுக்காக அனிஷ் தனது கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆஷிக்றோசுக்கு கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அனிஷை ஆஷிக் றோஸ் கூப்பிட்டுள்ளார். இதையடுத்து பணம் வாங்க அனிஷ் மற்றும் அவர் மனைவி டெலிஷா என்பவருமாக சென்றனர். அங்கு பணம் கொடுக்காமல் ஆசிரியர் அனிஷை ஆஷிக் தாக்கியுள்ளார். தடுக்க முயற்சி செய்த அனிஷின் மனைவியை அவதூறாக பேசியுள்ளார். இதில் காயமடைந்த அனிஷ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போன் பார்த்ததை தாயார் திட்டியதால் பரிதாபம்
    • காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே உள்ள மேல ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவப்பிள்ளை. இவரது மகள் நிலா (வயது18).

    இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் அவர் நள்ளிரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த அவரது தாயார் கண்டித்தார். இந்த நிலையில் இன்று காலை நிலா வீட்டின் பின்பகுதியில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், நிலா தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நிலாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர்.
    • கணவன்-மனைவி அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை காலனியை சேர்ந்தவர் கணேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (வயது 38). இவர்களுக்கு 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வகுமாரி அதிக மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார்.

    உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வகுமாரி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயகுமாரி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
    • தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே நான்காம் திட்டுவிளை செறுகோல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது (57). இவர்களுக்கு ஸ்டாலின் ஜோஸ் (23) என்ற மகனும், ஷைனி (28) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஸ்டாலின் ஜோஸ் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். வாரம்தோறும் வீட்டுக்கு வருவது வழக்கம்.

    வீட்டில் செல்வராஜ் அவரது மனைவி செல்வி, மருமகள் பென்சிறோஸ் ஆகியோர் வீட்டில் வசித்து வந்தனர். சமீபகாலமாக செல்வி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன அழுத்ததில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று காலையில் வீட்டின் பின்புற தோட்டத்தில் செல்வி தன் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென பிடித்து உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் செல்வி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரனை மேற்கொண்டனர்.

    மேலும் தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாய் குக்கி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. செல்வியின் கணவர் செல்வராஜ் திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வி தற்கொலை செய்தது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அரவிந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு அடுத்த சூழால் நெய்தவிளை பகுதியை சேர்ந்தவர் விசுவம்பரன். இவரது மகன் அரவிந்த் (வயது 26). இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அரவிந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுதொடர்பாக விசுவம்பரன் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×