search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்க"

    பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க 45-ம் ஆண்டு பேரவை கூட்டம் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

     பரமத்தி வேலூரில் 4 ரோடுக்கு அருகில் வெற்றிலை ஏல மார்க்கெட் உள்ளது. அதில் வெற்றிலை விவசாயிகளுடைய வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. மேலும் வியாபாரிகள் மிக அதிகமாக கமிஷன் எடுத்து கொள்கிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு பரமத்திவேலூரில் வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஏற்படுத்தி நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.

     இச்சங்கம் 1977 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொழுது பொத்தனூரில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது . பின்னர் அது சிறுமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டது .அதன் பின்னர் கோவை வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.அதனால் விவசாயிகளுக்கு எந்தவித பலனுமில்லை. 

    முந்தைய அரசு இருக்கூர் கிராமத்தில் உள்ள ஏழு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள். அதனை செயல்படுத்தாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அந்த இடத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை நிறுவி செயல்படுத்த வேண்டும். 

    தமிழ்நாடு அரசு வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் பெரும்பாலும் குத்தகை விவசாயிகள் .அவர்களுக்கு உகந்த வகையில் பயிர் கடன் கிடைக்க வழிவகை செய்யுமாறு மாநில அரசை இப்பேரவை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

     கூட்டத்தில் 50 பேர் கொண்ட புதிய பொதுக்குழு உறுப்பினர்களும், அதில் 15 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்கு மேடு பகுதியை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பால் இரு தரப்பினருக்கும் மோதல்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). இவருக்கும் லட்சுமாயூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (45) என்பவருக்கும் இடையே நில பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டபோது அந்த இடம் குணசேகரனுக்கு சொந்தமான இடம் என்பதால் அவர் நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக சூர்யா தரப்பினருக்கும் குணசேகரன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் இரு தரப்பயும் சேர்ந்த காளியப்பன்,  அப்புக்குட்டி, சேகர், செல்வம், மாதையன்,   சூர்யா, தாயம்மாள், சத்யா,  நஞ்சப்பன்,  சேட்டு, குருசாமி ஆகிய 11 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×