search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North"

    • கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .
    • அவர்களை பாதுகாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பரமத்தி, பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கந்தம்பாளையம், கபிலர்மலை, சோழசிராமணி, பாண்டமங்கலம், வெங்கரை, கொளக்கட்டுபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள், செங்கல் சேம்பர்கள், வெல்லஉற்பத்தி ஆலைகள் ,கிரானைட் மற்றும் டைல்ஸ் பதிக்கும் வேலை, மற்றும் பல்வேறு தொழில்களில் வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களுக்கு எதிரான செயல்கள் நடப்பது போன்ற தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சம் ஏற்பட்டு சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அவர்கள் பணியாற்றும் தொழில்களால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அவர்களை பாதுகாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க மாநில இணை செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வதந்தி பரவி வருவதால் வெளி மாநிலத்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களை தேங்காய் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் அழைத்து உங்களுக்கு முழு பாதுகாப்பு நாங்கள் அளிக்கிறோம். வதந்திங்களை நம்ப வேண்டாம் என எங்கள் சார்பாகவும் பரமத்திவேலூர் போலீசார்சார்பாகவும் நேரில் அழைத்து பேசினோம்.

    அதனால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதை தற்போது நிறுத்தி உள்ளனர். மேலும் இங்கிருந்து விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற வெளிமாநிலத்தினர் திரும்பி வருவது குறித்து அச்சத்தில் உள்ளனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வதந்திகளை நம்ப வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என தெரிவித்தோம்.

    மேலும் பரமத்தி வேலூர் தாலுகாவில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால் வெளிமாநிலத்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பரமத்திவேலூர் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கூறும்போது, வெளி மாநில தொழிலாளர்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு காரணங்களை கூறி காலி செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும்.வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    மேற்கு வங்காளம் நடியா மாவட்டம் சோனக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஒபர்னாசிங் (வயது 36). இவரது முதல் கணவர் திலிப் சிங் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய 3 மகள்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இதேபோல் ஜெந்துசிங் (26) என்பவரின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கும் 3 மகன்கள் உள்ளனர்.

    இதனையடுத்து ஒபர்னாசிங்கும், ஜெந்துசிங்கும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக இருந்து வருகின்றனர். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுமேட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 2 பேரும் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒபர்னாசிங் முதல் கணவரின் மகள்களுக்கு ரூ.15 ஆயிரம் அனுப்ப பணம் கேட்டு உள்ளனர். ஜெந்துசிங் இப்போது பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் உடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பீகார் மாநிலம் நிர்பூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் ராம் (வயது 42). இவரும் இவருடைய அண்ணன் தினேஷ் ராம் என்பவரும் பெருந்துறை, சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு உமேஷ் ராம் தொழிலாளர்கள் தங்கம் அறைக்கு வந்துள்ளார். பின்னர் இரவு சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.

    உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் பெருசு ராய் மாவட்டம் கிசான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்சர்மா (40). இவர் ஈரோடு, நசியனூர் ரோடு கைகாட்டிவலசில் உள்ள கிளாஸ் கம்பெனியில் கார்பென்டராக வேலை பார்த்து அங்கேயே தங்கியிருந்து வந்தார். சுனில் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் ரோட்டோரம் இருந்த கல் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சுனில் சர்மா நிலைதடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் மூச்சு திணறி, பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனில்சர்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறையில் வடமாநில வாலிபருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    • திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஒடிசா மாநிலம் சுபமபூர் பகுதியை சேர்ந்தவர் அண்டயாமி சாகு (21). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினருடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் வேலைக்காக வந்தார்.

    அங்கு உறவினர் தங்கியிருந்த அறையில் தங்கி வேலை தேடி வந்தார். இந்நிலையில் அண்டயாமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு நிலைமை மோசமானதால் அவரை பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×