search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

    • கடனை திருப்பி செலுத்த முடியாததால் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
    • இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி பொன்னி நகர், முதல் வீதியை சேர்ந்தவர் அசோக் (30). ஆக்டிக் டிரைவர். இவரது மனைவி லலிதா (27). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சொந்த வீடு கட்டுவதற்காக அசோக் வங்கி ஒன்றில் கடன் பெற்றிருந்தார்.

    அதற்கு முறையாக லோன் கட்டி வந்து இருந்த போது கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாததால் அவரால் வங்கியில் லோனை குறிப்பிட்ட நேரத்திற்கு கட்ட முடியவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஊருக்கு சென்றிருந்த லலிதா தனது அம்மாவுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள் அறையில் அசோக் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அசோக்கை மீட்டு சிகிச்சை க்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அசோக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன விரக்தியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×