search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "operator"

    • எச்.டி.பாக்ஸ் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
    • எச்.டி., பாக்ஸ் வருகைக்குப்பின், மாவட்டம் முழுவதும் ஏராளமானோர், அரசு கேபிள் டிவி., ஆபரேட்டராக இணைவர்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அரசு கேபிள் டி.வி., நிறுவன பிரிவினர் கூறியதாவது:-

    அரசு கேபிள் இணைப்புகளுக்கு எஸ்.டி.,க்கு (ஸ்டேன்டர்ட் டெபனிஷன்) பதில் எச்.டி.,(ைஹ டெபனிஷன்) செட்டாப் பாக்ஸ் வழங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் எச்.டி., பாக்ஸ் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆபரேட்டர்கள், தாங்கள் வசூலிக்கும் சந்தாவில் இணைப்பு ஒன்றுக்கு தற்போது ரூ.82.50 மட்டும் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்தினால் போதும். எச்.டி., பாக்ஸ் வருகைக்குப்பின், மாவட்டம் முழுவதும் ஏராளமானோர், அரசு கேபிள் டிவி., ஆபரேட்டராக இணைவர். தற்போது முதலே பலரும் ஆபரேட்டராக இணைவதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர். கேபிள் இணைப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

    அரசு கேபிள் ஆபரேட்டராக விரும்புவோர், முகவரி, சேவை வழங்க உள்ள விவரங்களுடன் ஆதார் போன்ற ஆவணங்களை இணைத்து மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில் விண்ணப்பித்து போஸ்டல் லைசென்ஸ் பெறவேண்டும். தொடர்ந்துtactv.inஎன்கிற இணையதளத்தில் உரிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பிக்கவேண்டும். உரிய டெபாசிட் தொகை செலுத்தவேண்டும். அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டராக அங்கீகரித்து லைசென்ஸ் வழங்குவர் என்றனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்த மிஷின் ஆப்பரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (38). தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நிர்மலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நிர்மலின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு காட்டுப்புதூர் திருமண விழாவிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது நிர்மல் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் நிர்மல் வரும் வழியிலேயே இறந்து–விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×