என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker"

    பணகுடி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணகுடி:

     நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழி சாலையில் இருந்து தண்டையார் குளம் செல்வதற்கு பிரிவு சாலை உள்ளது. இன்று காலை இந்த பிரிவு சாலையில் கீழ்புறம் இருந்து பணகுடி ஊருக்கு கரையடி காலனியை சேர்ந்த தொழிலாளி ஹரிகிருஷ்ணன் ( வயது 60)  என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
     இதில் ஹரி கிருஷ்ணன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் விரைந்து சென்று ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை பணகுடி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையம் அருகே தொழிலாளியை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே சானார்பாளையத்தில் வசிப்பவர் மாரிமுத்து(வயது 50) கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்  ராஜசேகரன்( 43).

     மாரிமுத்து, ராஜசேகரனுக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார்.  பின்னர் அதை  மாரிமுத்து  திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த  ராஜசேகரன் தகாத வார்த்தையால் பேசி மது பாட்டிலை உடைத்து  மாரிமுத்துவை நெற்றி, பின் தலை, இடது நெஞ்சு, ஆகிய இடங்களில் குத்தியதாக தெரிகிறது. 

    இதில் மாரிமுத்து பலத்த காயம் ஏற்பட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார்  ராஜசேகரனை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ் (வயது 30). கட்டிட கூலி தொழிலாளி. 

    இவர் தனது மொபட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி திடீரென மொபட்  மீது மோதியது. இதில்  சுரேஷ் பலத்த காயமடைந்தார். 

    இதையடுத்து அவர் குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்ததில் லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த (சுரேஷ் 45), என்பது தெரியவந்தது. லாரி டிரைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கொளத்தூர் அருகே யானை தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி படுகாயடைந்தார்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). 

    இவர் ஆடு மேய்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். நேற்று லக்கம்பட்டி கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த ரங்க போ என் கார்டு அருகே வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் வீடு திரும்பி வரும்போது ஒரு ஆண் யானை ஒன்று பின்பக்கமாக வந்து தந்தத்தால் கோவிந்தனை முதுகில் குத்தியது. 

    இதனால் மிரண்டு போன அவர் சுதாரித்துக்கொண்டு வனப்பகுதியில் இருந்து யானையிடம் தப்பி கிராமத்துக்கு வந்தார். கிராம மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக கோவிந்தனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கபிலர்மலை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது27), கட்டிட தொழிலாளி.இவரது மனைவி சூர்யா (23). பாபு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் பாபுவின் சொந்த ஊரான பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளைத்தூரில் தனது பெரியப்பா வீடு அருகே வாடகை வீடு எடுத்து கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்தனர். 

    கடந்த 1-ந் தேதி பாபுவின் மனைவி சூர்யா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த போது தனது கணவர் வீட்டில் துப்பட்டாவால் தொங்கிக்கொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    பின்னர் அவரை  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாபு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தகவல்‌ அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் நெல்லையப்ப புரத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 45),  கூலித்தொழிலாளி. இவர் வீட்டின் அருகே வசிக்கும் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார்  ஜெயபிரகாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது  ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோர் அவதூறாக திட்டியதாக தெரிகிறது. 

    இது குறித்து  பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

    இதில் ஜெயபிரகாஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீ சார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர் அருகே உள்ள கண்மாயில் தொழிலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 23). தொழிலாளியான இவர் நேற்றிரவு கே.மேட்டுப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தி னர் பெருமாள்சாமியை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. 

    இந்த நிலையில் பெருமாள்சாமி கே.மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கண்மாயில் பிணமாக கிடந்தார். அருகிலேயே அவரது மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    பெருமாள்சாமி விபத்தில் இறந்தாரா? அல்லது வேறுஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • மதுரையில் கட்டுமான தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    செல்லூர், போஸ் வீதியை சேர்ந்தவர் குரு (55). கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை இவர் தாகூர்நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலையில் ஈடுபட்ட போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • நெல்லையில் தொழிலாளி உள்பட 2 பேர் திடீரென இறந்தனர்.
    • ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

    நெல்லை:

    தச்சநல்லூர் அருகே உள்ள அழகனேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 39). கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று பேட்டை கோடீஸ்வரன்நகர் பகுதியில் ஒரு வீட்டில் காங்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென ெநஞ்சு வலிப்பதாக கூறிய அவர் மயங்கி விழுந்தார். உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முகமது சுல்தான்(25). இவர் அங்குள்ள சிக்கன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டில் படுத்து தூங்கியவர் வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

    அவரது உறவினர்கள் அவரை எழுப்ப முயன்றபோது அவர் இறந்தது தெரியவந்தது.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, அவரது மகன் அஜித்குமாரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி முத்து.இவர்களது மகன் அஜித்குமார்.

    விருதுநகர் தெப்பம் பகுதியில் முனியாண்டி மனைவி முத்து ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்த சவுந்தரராஜன் (48) என்பவருக்கு தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் முத்து ரூ. 3லட்சம் கடன் வாங்கி கொடுத்தார். கடந்த சில மாதங்களாக சவுந்தர்ராஜன் வட்டி பணத்தை கொடுக்கவில்லை.

    இது தொடர்பாக பேச, சவுந்தர்ராஜன் நேற்று முத்து வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த முனியாண்டி, மகன் அஜித்குமார் ஆகியோர் கடன் தொடர்பாக வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த தந்தை-மகன் 2 பேரும் சவுந்தர்ராஜனை சரமாரியாக அடித்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சவுந்தர்ராஜன் இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த கொலை தொடர்பாக சின்னமூப்பம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சமயன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, அவரது மகன் அஜித்குமாரை கைது செய்தனர்.

    ×