என் மலர்
நீங்கள் தேடியது "worker"
- மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார்.
- பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.
பரமத்தி வேலூர்:
தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் தற்பொழுது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதி யில் தங்கி தையல் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலை யில் இரவு வெங்கடேஷ் மணியனூர் பிரிவில் உள்ள டீக்கடைக்குச் சென்று அங்கு டீ குடித்துவிட்டு தான் தங்கி உள்ள அறைக்கு செல்வ தற்காக பரமத்தி வேலூர்-திருச்செங்கோடு சாலை, மணியனூர் செய்யாம்பா ளையம் பிரிவு சாலை அருகே ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அச்சாலையில் மோட்டார் சைக்கிள்ளில் அதிவேகமாக வந்த திருச்செங்கோடு பன்னீர் குத்தி பாளையம் பகுதியை சேர்ந்த தங்கமணி என்ப வரது மகன் பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதில் வெங்கடேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நல்லூர் போலீஸ் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- ஏற்காட்டிற்கு கட்டிட பணிக்காக டிப்பர் லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
- கருப்பூர் கரும்பாலை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது, லட்சுமி(32) என்பவர் திடீரென சாலையை கடந்தார்.
கருப்பூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர், சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 42), டிரைவர். இவர், ஓமலூரில் இருந்து ஏற்காட்டிற்கு கட்டிட பணிக்காக டிப்பர் லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
இந்த செங்கல் பாரத்தின் மீது கூலி தொழிலாளிகளான ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (31), மாட்டுக்காரன் புதூரை சேர்ந்த மதியழகன் (22) ஆகிய அமர்ந்து சென்றனர்.
கருப்பூர் கரும்பாலை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது, லட்சுமி(32) என்பவர் திடீரென சாலையை கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் முருகேசன் பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த பிக்அப் வாகனம், டிப்பர் லாரி மீது மோதியது. இதில் செங்கல் மீது அமர்ந்திருந்த ராஜா, மதியழகன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதியழகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் சாலையின் குறுக்கே சென்ற லட்சுமியும் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார்.
- ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.
ஏற்காடு:
சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் திரும்பி கொண்டிருந்தார்.
ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.
இந்த நிலையில் இன்று காலை, நடைபயிற்சிக்கு வந்த சிலர், ரமேஷை பார்த்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ரமேஷை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
பள்ளத்தில் விழுந்ததில் அவருக்கு இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர்-கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவாரம்பட்டி சிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 36). இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷ பவுடரை கரைத்து குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாலசுப்பிர மணியம் மனைவி சங்கரேஸ்வரி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாலிபர்
ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மவுண்ட் சீயோன் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ஈஸ்வரன் (26). வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இவரை அரசுத் தேர்வு பயிற்சி வகுப்புக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈஸ்வரனின் உறவினர் மாரியப்பன் தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சபீன் ராஜா மற்றும் அவரது நண்பரான சிவக்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தெருவில் வேகமாக சென்றுள்ளனர்.
- அதனை கண்ட சுகுமார் குழந்தைகள் உள்ள இடத்தில் ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் என்று கண்டித்துள்ளார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுகுமார் (30), சென்ட்ரிங் தொழிலாளி.
இதே பகுதியில் பாரதி நகரை சேர்ந்த சபீன் ராஜா (25) என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சபீன் ராஜா மற்றும் அவரது நண்பரான சிவக்குமார் (25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் செல்வராஜ புரத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது அவர்கள் தெருவில் வேகமாக சென்றுள்ளனர். அதனை கண்ட சுகுமார் குழந்தைகள் உள்ள இடத்தில் ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் என்று கண்டித்துள்ளார்.
இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு மீண்டும் அங்கு வந்த சபீன் ராஜா, சிவக்குமார் ஆகியோர் சுகுமாரிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது சபீன் ராஜா கத்தியால் தாக்கியதில் சுகுமாருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் கூடினர்.
அப்போது சபீன் ராஜாவும், சிவக்குமாரும் சுகுமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த படி அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் சுகுமார் காயல்பட்டினம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சபீன் ராஜா, சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
- கடந்த 24-ந் தேதி காலை வெற்றிலை கொடிக்காலுக்கு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- ராஜா வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்ப தாக பரமத்திவேலூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் நல்லாட்சி (வயது 74), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி காலை வெற்றிலை கொடிக்காலுக்கு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன நல்லாட்சியை அவரது மகன்கள் செந்தில்குமார், பார்த்திபன் ஆகியோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பரமத்திவேலூரில் இருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள வாஞ்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள ராஜா வாய்க்காலில் அடை யாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்ப தாக பரமத்திவேலூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜா வாய்க்காலில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நல்லாட்சி என்பது தெரிய வந்தது.
கூலி வேலைக்கு சென்ற நல்லாட்சி, வீட்டிற்கு திரும்பு கையில் ராஜா வாய்க்கால் கரையில் நடந்து சென்றார். அப்போது வாய்க்கால் கரையோரத்தில் கீழே விழுந்து கிடந்த தேங்காயை எடுக்க முயன்ற போது, திடீ ரென எதிர்பாராத விதமாக மயங்கி ராஜா வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் மேலே வரமுடியாமல் தத்தளித்த நல்லாட்சி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோ தனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தபோலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளி திடீரென இறந்தார்.
- முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள அச்சம் தவிர்த்தான் கீழத்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி(வயது28). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது அவ ருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொழிலாளி மர்மமாக இறந்தார்.
- லூர்துராஜ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவரது மகன் லூர்துராஜ்(வயது36). அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவரது முதல் மனைவி சில வருடங் களுக்கு முன்பு இறந்து விட்டார். இதை யடுத்து லூர்துராஜ், பிரியங்கா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் லூர்து ராஜ் மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படு கிறது. இதில் பிரியங்கா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று லூர்து ராஜ் அதே பகுதியில் உள்ள ரோட்டில் கை, கால்களில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து லூர்துராஜ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்நிலையம் எதிரில் உள்ள கடைக்கு செல்வதற்காக வெளியே வந்தார்.
- திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவாரூர்:
கரூர் மாவட்டம் பாப்பாபட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர், திருவாரூரில் தங்கி இருந்து கோவில் கட்டுமான பணி செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர் திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து பஸ்நிலையம் எதிரில் உள்ள கடைக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சக்திவேல் மீது மோதியது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவாரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மயங்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55), தச்சு வேலை பார்த்து வந்தார். சம்ப வத்தன்று வேலை நிமிர்த்த மாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த ராஜேந்திரன் அங்குள்ள நகராட்சி கழிவறை அருகே மயங்கி கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.