என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harassing girl"

    • போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    • விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    பல்லடம்:

    திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் குமார் (வயது 34). இவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவினாசிபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் டீ மாஸ்டர் குமாரை கைது செய்தனர்.

    இதே போல் வடக்கு அவினாசிபாளையம் வேலம்பட்டியைச் சேர்ந்த மகேஷ் குமார் (28) மற்றும் சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் குட்டி என்ற சிரஞ்சீவி (19) ஆகியோரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் மகேஷ்குமார் மற்றும் குட்டி என்கிற சிரஞ்சீவி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் நெல்லையப்ப புரத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 45),  கூலித்தொழிலாளி. இவர் வீட்டின் அருகே வசிக்கும் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார்  ஜெயபிரகாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது  ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோர் அவதூறாக திட்டியதாக தெரிகிறது. 

    இது குறித்து  பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

    இதில் ஜெயபிரகாஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீ சார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
    ×