என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி பாலியல் தொல்லை"

    • திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    திருவண்ணாமலை:

    போளூர் அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45), கூலி தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி அவரது வீட்டிற்கு டி.வி. பார்க்க வந்த 4 வயதுடைய சிறுமியிடம் ஏழுமலை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.

    வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பாட்டி சிறுமியை தேடி சென்றார். அப்போது நடந்த சம்பவம் குறித்து சிறுமி அவரது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார்.

    இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

    அப்போது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஏழுமலைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ஏழுமலையை போலீசார் வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • சிறுமி பலத்த காயம் அடைந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டு குளம் அருகே உள்ள எலஞ்சியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவரது மாமா முறை உறவினரான 63 வயது மதிக்கத்தக்கவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அந்த சிறுமி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் புகார் கூறிய சிறுமி, தனது வீட்டின் பின்புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு புகார் கூறப்பட்ட ரப்பர் தோட்ட தொழிலாளியான அவரது உறவினர் வந்துள்ளார்.

    அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை கத்தியால் குத்தினார். இதில் சிறுமி பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனை கண்டதும் தொழிலாளி அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட தொழிலாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டவர், அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் முத்துவேலை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவிபுதூர் கிராமத்தை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரது மகன் முத்துவேல் (வயது 20). டிரைவர். இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் முத்துவேலை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    • விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    பல்லடம்:

    திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் குமார் (வயது 34). இவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவினாசிபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் டீ மாஸ்டர் குமாரை கைது செய்தனர்.

    இதே போல் வடக்கு அவினாசிபாளையம் வேலம்பட்டியைச் சேர்ந்த மகேஷ் குமார் (28) மற்றும் சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் குட்டி என்ற சிரஞ்சீவி (19) ஆகியோரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் மகேஷ்குமார் மற்றும் குட்டி என்கிற சிரஞ்சீவி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×