search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குபோட்டு தற்கொலை
    X

    பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குபோட்டு தற்கொலை

    • சேலத்தில் பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • ஜீவானந்தம் மது குடித்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகன் ஜீவானந்தம் (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜீவானந்தம் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். அதனால் மனமுடைந்த மாணவன் வீட்டுக்குள் சென்று தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை பெற்றோர் காப்பாற்றி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் பரிதாபமாக இறந்தார். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×