search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்குபோட்டு"

    • மது அருந்தும் பழக்கமுடைய வினோத்குமாருக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
    • அதனால் தான் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு மாதத்தவணை செலுத்த தனது தந்தை கோவிந்தராஜிடம் பணம் கேட்டுள்ளார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் வேட்டைக்காரன் கோயில் மேற்கு கரடு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (23).

    இவர் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள ஒரு பீட்சா, பர்கர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    மது அருந்தும் பழக்கமுடைய வினோத்குமாருக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    இதற்காக அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக வினோத்குமார் வேலைக்கு செல்லவில்லை. அதனால் தான் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு மாதத்தவணை செலுத்த தனது தந்தை கோவிந்தராஜிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் ஒரு வாரத்தில் தருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் சாப்பிட்டு விட்டு தூங்க செல்வதாக தனது தாயாரிடம் கூறி சென்ற வினோத்குமார் படுக்கை அறைக்குள் சென்று சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.

    சற்று நேரம் கழித்து அதை பார்த்த அவரது தாயார் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வினோத்குமாரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே வினோத்குமார் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து வினோத்குமாரின் தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • யாகோபு குடும்பத்தை கவனிக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
    • விமலா தனது மகனுடன் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விமலா (49). இவரது கணவர் யாகோபு (54).

    இந்நிலையில் யாகோபு குடும்பத்தை கவனிக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

    இதனால் விமலா தனது மகனுடன் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    யாகோபு தங்களது பழைய வீடு இருக்கும் வெள்ளோடு சி.எஸ்.ஐ. காலனியில் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் விமலாவை போன் மூலமாக தொடர்பு கொண்ட யாகோபுவின் சகோதரர் சி.எஸ்.ஐ. காலனியில் உள்ள அவர்களது பழைய வீட்டில் யாகோபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மனைவி விமலா அளித்த புகாரின் பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பழனிசாமி மின் விசிறியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள திங்களூர் அடுத்த திருக்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவருக்கு திரு மணமாகி அன்னக்கொடி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.

    இவர் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று பழனிசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவ ர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து பழனிசாமியின் மனைவி அன்னக்கொடி கோபித்து கொண்டு மகள்க ளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் பழனிசாமியின் வீடு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீடு உள் பக்கமாக மூடி இருந்தது.

    வீட்டிக் கதவை தள்ளி திறந்து பார்த்த போது அங்கு பழனிசாமி மின் விசிறியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுதாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    ஆனால் செல்லும் வழியில் சுதாகரன் இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அடுத்துள்ள ஏமகண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 46). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இவரது தங்கை கல்யாணி யுடன் தங்கி வசித்து வந்தார். திருமணம் ஆகாமல் உடல் நிலை சரியில்லாமல் அவதி பட்டு வருகிறோம் என ராணி வேதனை அடைந்து வந்தார்.

    இந்நிலையில் கல்யாணி வேலைக்கு சென்று விட்டார். ராணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

    கல்யாணியின் மகன் மணிகண்டன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு மூடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த அவர் மேலே ஏறி பார்த்தார். அப்போது ராணி தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இத குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராணியின் உடலை கைப்பற்றி கொடு முடி அரசு மருத்துவமனைக்கு பிரேதசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
    • பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்தபோது குஞ்சான் வீட்டில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மூங்கில் பாளையம் பகுதி சேர்ந்தவர் குஞ்சான் வயது 65. இவர் தனது மனைவி சென்னியம்மாள், மகள் பூங்கொடி, மருமகன் பாண்டியராஜ் மற்றும் பேத்திகளுடன் குடியிருந்து வருகிறார். இவரும் இவர் மனைவியும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களாக குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடித்து அளவுக்கு அதிகமாக முடித்துவிட்டு போதையில் வந்த குஞ்சான் குடும்பத்தாரிடம் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.

    இதை கண்ட அவரது மனைவி சத்தம் போடாமல் போய் தூங்குங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டார். இரவு அவரது மருமகன் பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்தபோது குஞ்சான் வீட்டில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    உடனே அவரை இறக்கி ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குஞ்சான் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மின் விசிறி மாட்டும் கொக்கியில், துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் ரூபினா கதுன் தொங்கியவாறு இருந்துள்ளார்.
    • இது குறித்து தந்தை ருலமின் காஸி அளித்த புகாரின்பேரில் திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் ருலமின் காஸி (40).

    இவர் தனது மனைவி ரூப்சனா, மூத்த மகள் ரூபினா கதுன் (16), இளைய மகள் ரீனா கதுன் ஆகியோ ருடன் ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள சின்ன வீரசங்கிலி பகுதியில் வசித்து அங்குள்ள கோழிப் பண்ணை ஒன்றில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ருலமின் காஸி அவரது மனைவி மற்றும் 2-வது மகள் ஆகியோருடன் விஜயமங்கலம் சந்தைக்கு பொருள்கள் வாங்க சென்று விட்டார். மூத்த மகள் ரூபினா கதுன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

    சந்தைக்கு சென்றவர்கள் இரவு சுமார் 8 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளனர். மூடப்பட்டிருந்த கதவை திறந்து பார்த்தபோது, மின் விசிறி மாட்டும் கொக்கியில், துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் ரூபினா கதுன் தொங்கியவாறு இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரூபினா கதுனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து தந்தை ருலமின் காஸி அளித்த புகாரின்பேரில் திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமாமகேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மேலும் இது குறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த பறைக்காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. அவரது மனைவி உமாமகேஸ்வரி (36). இவர்களுக்கு திருமண மாகி 6 வருடங்கள் ஆகிறது. இன்னும் இவர்களுக்கு குழந்தை இல்லை. உமா மகேஸ்வரி இதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு உமா மகேஸ்வரி மலையம்பாளையம் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவர் கர்ப்பம் இல்லை என முடிவு வந்தது. இதனால் உமா மகேஸ்வரி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமாமகேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வரப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உமாமகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
    • கே.என்.பாளையம் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அருகே ஒரு இடத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    டி.என்.பாளையம், செப். 16-

    கோபிசெட்டி பாளையத்தை அடுத்த நாகர்பாளையம் ரோடு, கந்தசாமி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). பி .எஸ்.சி. பட்டதாரி. பிரகாஷ் சரியாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.


    இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது உறவி னர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    பிரகாசை உறவினர்கள், பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்த நிலையில் கே.என்.பாளையம் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அருகே ஒரு இடத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு தாமரைசெல்வி அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
    • இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கணபதி நகரை சேர்ந்தவர் நவீன் என்ற நவீன்குமார்(30). கூலி தொழிலாளி. இவருக்கு தாமரைசெல்வி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா்.

    நவீன்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு தாமரைசெல்வி அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இந்நிலையில் நவீன்குமார் தாமரை செல்வியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

    அதற்கு அவர் எப்போது குடிப்பழக்கத்தை கைவிடு வீர்களோ அப்போதுதான் வருவேன் என்று கூறினார். இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • வாழ்வதை விட செத்து விடலாம் என புலம்பி கொண்டு இருந்த பழனிசாமி கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமி புரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 78). இவர் கடந்த 40 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் நோய் பாதிப்பால் அவரது கால் விரல்களும் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அவதி பட்டு வந்தார். இதனால் வாழ்வதை விட செத்து விடலாம் என புலம்பி கொண்டு இருந்தார். அவருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூர் நாயக்கர் வீதியை சேர்ந்த ரங்கநாயக்கர் மகன் சித்தராஜ்(19). லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். சித்தராஜ்க்கு கடந்த 3 மாதங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்தது.

    இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. கடந்த 4-ந் தேதி இரவு கடுமையான வயிற்று வலி காரணமாக வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, சித்தராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×