search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர்"

    • கடந்த 3 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கால்வாய் வழியாக செல்லும் நீர் வழியோர கிராமங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்த உதவியது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கடந்த மாதம் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கும் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி முதல் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்கு தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் வருகிற 26-ந் தேதி வரை முறை வைத்து திறக்கப்படும் என்பதால் ஆற்றின் கரையோரமுள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீரால் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    100க்கும் மேற்பட்ட சிறிய குளங்கள் நிரம்பியது. மேலும் கால்வாய் வழியாக செல்லும் நீர் வழியோர கிராமங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்த உதவியது. இதனால் இறவை பாசனம் மேம்பட்டது.

    தற்போதும் பெரியாறு, வைகை அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் அணையின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வைகை அணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முன் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளை கைது செய்தனர்.

    வைகை அணையின் நீர் மட்டம் 65.26 அடியாக உள்ளது. வரத்து 1978 கன அடி. திறப்பு 1869 கன அடி. இருப்பு 4687 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 135.90 அடி. வரத்து 928 கன அடி. திறப்பு 1500 கன அடி. இருப்பு 6093 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 56.10 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. இருப்பு 457 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.47 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 93 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த மாதம் 3 ஆம் தேதி முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்று முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடைவித்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல் மற்றும் வெள்ளக்கவி பகுதிகளில் மழை பொழிவு முற்றிலும் இல்லாமல் காணப்பட்டது. இருந்தபோதும் அருவிக்கு வரும் நீர் வரத்து சற்று குறைந்து வந்தது. கடந்த 3 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று 42-வது நாளாக தொடர்வதாக தேவதானப்பட்டி வனத்துறையினர் அறிவித்துள்ளனர். 

    • கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராட குவிந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராட குவிந்தனர்.

    இன்று காலை முதலே அருவி கரைகளில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணி களின் வருகை அதி கரித்ததன் காரணமாக அருவிக் கரைகளில் அமைந்துள்ள கடைகளில் பழங்கள் உணவுப் பொருட்களின் விற்பனை யானது அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
    • தண்ணீர் கேனில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பவானி:

    பீகார் மாநிலம் கைத்வா லியா மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் என்கிற அருன்பாகத் (வயது 32). இவரது மனைவி சாந்தினி தேவி. இவர்களுக்கு மனிஷா குமாரி (11) மற்றும் போன்பி குமாரி என்ற ஒன்றை வயது பெண் குழந்தையும் உள்ளது. அருன்பாகத் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவ ட்டம் சித்தோடு அடுத்த பூம்புகார் தெருவில் வசித்து வருகிறார்.

    இவர் கொங்கம்பாளையம்-கங்காபுரம் ரோட்டில் உள்ள ஒரு பிராசசிங் மில்லில் கடந்த 5 வருடமாக லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அருண் பாகத் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

    மூத்த மகள் பள்ளிக்கு சென்றுவிட்டார். வீட்டில் சாந்தினிதேவி மற்றும் அவரது ஒன்றை வயது குழந்தை சோன்பிகுமாரி மட்டும் இருந்தனர். பின்னர் சாந்தினிதேவி வீட்டில் தூங்கி உள்ளார். குழந்தை சோன்பி குமாரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது.

    திடீரென தூக்கம் கலைந்து எழுந்த சாந்தினிதேவி வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரைத் தேடினார். பின்னர் வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தார்.

    அப்போது பாத்திரங்கள் கழுவதற்காக தண்ணீர் ஊற்றி வைத்திருந்த ப்ளூ கலர் தண்ணீர் வாளிக்குள் குழந்தை சோன்பிகுமாரி தலைகீழாக தண்ணீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சித்தோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் கேனில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.
    • குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நீத்து (வயது21). அவர் திருச்சூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு திருமணமாகாத நிலையில், நீத்து கர்ப்பமாகியதாக தெரிகிறது.

    இருந்தபோதிலும் காதலர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீத்துவுக்கு சுமத்ரா பகுதியில் உள்ள வீட்டில் வைத்து குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

    ஆனால் அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தையின் மூக்கில் தண்ணீர் புகுந்ததால் மூச்சு திணறி இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தபடி இருந்திருக்கிறார். இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதால், தனது குழந்தையை கொன்றதை நீத்து ஒப்புக்கொண்டார்.

    அவர் தனது குழந்தையின் முகத்தில் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். திருசூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை நீத்து காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் நீத்து கர்ப்பமாகி இருக்கிறார். அதன்பிறகும் இருவரும் திருமணம் செய்யாமலேயே இருந்தனர்.

    இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்திருக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் வீட்டில் வைத்தே குழந்தை பெற்றெடுத்து கொன்றிருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.

    • மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
    • உத்திரமேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி, இந்த ஏரியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

    ஏரி தூர்வாரும் பணி 50 சதவீதம் நிறைவுற்று தற்போது மழை பெய்து வருவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வந்தவாசி, செய்யார், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செய்யாற்றில் இருந்தும் உத்திரமேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஏரியில் கட்டுமான பணியின் காரணமாக ஏரியின் கரையை உடைத்து நீர் கிளியாற்றின் வழியாகவும் வெளியேற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பரவலாக கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு 1000 மி.கன அடி நீர் வருகிறது. தற்பொழுது, விநாடிக்கு 750 மில்லியன் கன அடி நீர் வெளியேறி கிளியாற்றின் வழியாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து உள்ளது.

    அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றியிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடுப்பளவு நீரில் தங்களது வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.
    • நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து வெளிவரும் தண்ணீரால் வல்லூர் தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிகிறது. அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.

    இந்த தடுப்பணையில் இருந்து வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து நீச்சலடித்தும், டைவ் அடித்தும், குளித்தும் குதூகலமடைந்துள்ளனர். இந்த அணைக்கட்டில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் வழியே எண்ணூர் கடலுக்கு செல்ல உள்ளது. கனமழையால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் வல்லூர் அணைக்கட்டு உள்ளிட்ட நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பொன்னேரி ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம் அணைக் கட்டில் இருந்து 900 கன அடி வெளியேறும் மழை நீர் பழவேற்காட்டில் கடலில் கலக்கின்றன. பெய்து வரும் மழையினால் பொன்னேரி பகுதிகளில் 28 வார்டுகளில் மழைநீர் தேங்கியும் பொன்னேரி- மீஞ்சூர் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற முடியாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.

    பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமி நகர், ஏ ஏ எம் நகர், பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.

    • உத்திர மேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி, இந்த ஏரியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

    ஏரிதூர்வாரும் பணி 50 சதவீதம் நிறைவுற்று தற்போது மழை பெய்து வருவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வந்தவாசி, செய்யார், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செய்யாற்றில் இருந்தும் உத்திர மேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஏரியில் கட்டுமான பணியின் காரணமாக ஏரியின் கரையை உடைத்து நீர் கிளியாற்றின் வழியாகவும் வெளியேற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பரவலாக கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு 1000 மி.கன அடி நீர் வருகிறது. தற்பொழுது, விநாடிக்கு 750 மில்லியன் கனஅடி நீர் வெளியேறி கிளியாற்றின் வழியாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து உள்ளது.

    அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றியிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடுப்பளவு நீரில் தங்களது வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயத்திற்கு வைகை ஆற்றிலும், பெரியாறு கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    • அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு தரப்பினர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளது. பெரியாறு பாசன கால்வாயின் தண்ணீரை நம்பி இங்கு 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. ஒருபோக பாசன பகுதியான இங்கு வருடந்தோறும் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி பெரியாறு கால்வாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பெரியாறு மற்றும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்திற்கு வைகை ஆற்றிலும், பெரியாறு கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் 80 சதவீத விவசாயம் பெரியாறு பாசன கால்வாய் மூலம் நடந்து வருகிறது. தற்போது மதுரை மாவட்டம் பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்வாயின் கடை மடை பகுதியான மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் தங்கள் பகுதிக்கு மட்டும் அதிகாரிகள் தண்ணீர் திறக்காமல் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது.

    மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்க தலைவர் முருகன் தலைமையில் விவசாயிகள் அரசு அதிகாரிகளை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் மேலூரில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    பெரியாறு கால்வாய் தண்ணீரை நம்பி பயிரிட்டு உள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஒரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்தது.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தொடர் கோரிக்கையை வலியுறுத்தி மேலூரில் இன்று (27-ந்தேதி) கடையடைப்பு மற்றும் முற்றுகை போராட்டம் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்தனர். இதற்குமேலூர் வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு தரப்பினர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி மேலூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலூர் பஸ் நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல சரக்கு, நகை, ஜவுளிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தினசரி மார்க்கெட்டும் இன்று செயல்படவில்லை. 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர். கடையடைப்பு போராட்டத்தால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று காலை யூனியன் அலுவலகம் எதிரே உள்ள மூவேந்தர் பண்பாட்டு கழக திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்.

    அவர்கள் அங்கிருந்து பேரணியாக பொதுப் பணித்துறை அலுவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிராகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோஷமிட்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தண்ணீரை பீச்சியடிக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.

    • வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
    • புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா விஸ்வநாதபேரி கிராமம் பாகம் 1-ஐ சேர்ந்த வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இக்கண்மாய் மூலம் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வெளியே செல்லக்கூடிய கலிங்கல் மடை அருகே 5 அடி ஆழத்தில் மண் திருடப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர், வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், ராஜபாளையம் மேல்வைப்பாறு நீர் நிலை கோட்டம் உதவி பொறியாளர், காவல் துறையினர் ஆகியோருக்கு, வழிவழி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பாக சங்கத் தலைவர் க.சிவசுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி. வெங்க டேசன், பொதுப்பணித்துறை சார்பில் இளநிலை பொறியாளர் கண்ணன், வருவாய் துறை சார்பில் சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அது சம்பந்தமான அறிக்கையை தங்களுடைய மேலதிகாரி களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவு
    • மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பறக்கின் கால் பகுதியில் கிடந்த கழிவுகளை அகற்றினர்.

    நாகர்கோவில், நவ.14-

    நாகர்கோவில் மாநகராட்சி 26-வது வார்டு இடலாக்குடி பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாயுடு ஆஸ்பத்திரி பின்புறம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாயில் புதர்கள் மண்டி, குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் தேங்கி தண்ணீர் சீராக செல்லவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அந்த கால்வாயை மேயர் மகேஷ் பார்வை யிட்டார். கால்வாயில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்றி, தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார். பறக்கின்கால் பகுதியில் குப்பைகள் நிரம்பி சுகாதார சீர்கேடாக காணப்பட்டதோடு, மதுபாட்டில்களும் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தது. அவற்றை உடனே அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பறக்கின் கால் பகுதியில் கிடந்த கழிவுகளை அகற்றினர்.

    நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட பள்ளவிளை, சானல்கரை பகுதியில் ரூ. 59 லட்சம் மதிப்பீட்டிலும், 6 -வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டிலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், உதவி பொறியாளர் ராஜ சீலி, சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, பகவதி பெருமாள், தொழில் நுட்ப உதவியாளர் பத்மநாபன், வடக்கு மண்டல தலைவர் ஜவஹர், கவுன்சிலர்கள் அமல செல்வன், சொர்ணதாய், பகுதி செயலாளர் ஷேக்மீரான், வட்ட செயலாளர்கள் பிரபாகரன், பீட்டர் ரெமிஜூஷ், எம்.கே.ராஜன், சாகுல், அன்சாரி மற்றும் பகுதி செயலாளர்கள் துரை, ஷேக்மீரான், தொண்டரணி ராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • 3 அணைகளில் இருந்து 830 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • 2000 குளங்கள் நிரம்பி வழிகிறது

    நாகர்கோவில், நவ.14-

    குமரி மாவட்டத்தில் தினமும் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழு வதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவில், முள்ளங்கினாவிளை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. கன மழை குறைந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யுள்ளது. இதனால் பேச்சிப் பாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கோதையாறு, குழித்துறை யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந் துள்ளது. தண்ணீர் வரத்து குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவி யில் ஆனந்த குளியலிட்டனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.80 அடியாக உள்ளது. அணைக்கு 365 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது.

    அணைக்கு 361 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 280 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.51 அடியாக உள்ளது.

    அணைக்கு 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 830 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழி கிறது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே நடவு பணி நடைபெற்ற நிலையில் பூதப்பாண்டி, அருமநல்லூர், சுசீந்திரத்தின் ஒரு சில பகுதிகளில் நடவு பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    விவசாயிகளுக்கு தேவை யான உரங்களை தங்குதடை யின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயி களுக்கு தேவையான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    • குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் நேற்று சாரல் அடித்தது.

    புறநகர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. அங்கு 22 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் அங்கு விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.

    நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்கிறது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 41.60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நம்பியாறு அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 93.40 அடியையும், சேர்வலாறு அணை 107.87 அடியையும் எட்டியுள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 104 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 64.20 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்த வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் நீர் இருப்பு 76 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் 8 அடி நீர் உயர்ந்தால் அணை நிரம்பிவிடும். அந்த அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 73.50 அடியாக உள்ளது. அங்கு 216 கனடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இருப்பதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்துள்ளனர். மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    ×