search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுராந்தகம் ஏரி"

    • மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
    • உத்திரமேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி, இந்த ஏரியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

    ஏரி தூர்வாரும் பணி 50 சதவீதம் நிறைவுற்று தற்போது மழை பெய்து வருவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வந்தவாசி, செய்யார், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செய்யாற்றில் இருந்தும் உத்திரமேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஏரியில் கட்டுமான பணியின் காரணமாக ஏரியின் கரையை உடைத்து நீர் கிளியாற்றின் வழியாகவும் வெளியேற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பரவலாக கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு 1000 மி.கன அடி நீர் வருகிறது. தற்பொழுது, விநாடிக்கு 750 மில்லியன் கன அடி நீர் வெளியேறி கிளியாற்றின் வழியாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து உள்ளது.

    அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றியிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடுப்பளவு நீரில் தங்களது வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உத்திர மேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி, இந்த ஏரியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

    ஏரிதூர்வாரும் பணி 50 சதவீதம் நிறைவுற்று தற்போது மழை பெய்து வருவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வந்தவாசி, செய்யார், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செய்யாற்றில் இருந்தும் உத்திர மேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஏரியில் கட்டுமான பணியின் காரணமாக ஏரியின் கரையை உடைத்து நீர் கிளியாற்றின் வழியாகவும் வெளியேற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பரவலாக கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு 1000 மி.கன அடி நீர் வருகிறது. தற்பொழுது, விநாடிக்கு 750 மில்லியன் கனஅடி நீர் வெளியேறி கிளியாற்றின் வழியாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து உள்ளது.

    அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றியிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடுப்பளவு நீரில் தங்களது வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×