search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகிரி"

    • சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக கலைவாணர் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    • ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக சங்கரன்கோவில் கலைவாணர் கலைக் குழு வினரின் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் பிலோமினா, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், தலையாரி அழகராஜா, தலைமை காவலர் ஸ்ரீதர கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதுபோன்று ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன், செயல் அலுவலர் சுதா, துணைத் தலைவர் குறிஞ்சி மகேஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முப்பிடாதியை கண்டவுடன் டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி விட்டு வாகனத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
    • தப்பி ஓடிய தங்கமலை, கனகராஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி ஊருக்கு மேற்கே உள்ள வழிவழி கண்மாய் பகுதியை மேல்வைப்பாறு வடிநில பிரிவு உதவி பொறியாளர் முப்பிடாதி பார்வையிட சென்றார்.

    அனுமதி இன்றி மண் அள்ளினார்

    அப்போது, கண்மாயில் தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் கனகராஜ் (வயது 35) என்பவர் பொக்லைன் எந்திரம் மூலமாக மண் அள்ளி, தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரத்தை சேர்ந்த தங்கமலை ( 45) என்பவர் ஓட்டி வந்த டிராக்டரில் கொட்டி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

    உதவி பொறியாளர் முப்பிடாதியை கண்டவுடன் டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி விட்டு வாகனத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து உதவி பொறியாளர் முப்பிடாதி சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    வழக்குப்பதிவு

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தார். புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் நேரில் சென்று பார்வையிட்டு இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்தார்.

    தப்பி ஓடிய தங்கமலை, கனகராஜ் ஆகியோரையும் பொக்லைன் எந்திரத்தையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
    • புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா விஸ்வநாதபேரி கிராமம் பாகம் 1-ஐ சேர்ந்த வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இக்கண்மாய் மூலம் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வெளியே செல்லக்கூடிய கலிங்கல் மடை அருகே 5 அடி ஆழத்தில் மண் திருடப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர், வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், ராஜபாளையம் மேல்வைப்பாறு நீர் நிலை கோட்டம் உதவி பொறியாளர், காவல் துறையினர் ஆகியோருக்கு, வழிவழி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பாக சங்கத் தலைவர் க.சிவசுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி. வெங்க டேசன், பொதுப்பணித்துறை சார்பில் இளநிலை பொறியாளர் கண்ணன், வருவாய் துறை சார்பில் சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அது சம்பந்தமான அறிக்கையை தங்களுடைய மேலதிகாரி களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • விழாவையொட்டி தினமும் அன்னதானம் மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.
    • சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 13 -ந்தேதி கந்த சஷ்டி விழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு, சுவாமி சப்பர வீதிஉலா வருதல் நடைபெற்றது. தினமும் அன்னதானம் மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.

    கந்த சஷ்டி முக்கிய நாளான நேற்று மாலையில் சூரனை வதம் செய்வதற்காக குதிரை வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் நகரின் மேலரத வீதியில் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்கமுகம் கொண்ட சூரனையும், இறுதியில் ஏழாம் திருநாள் மண்டபம் முன்பாக சூரபத்மனையும் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் என்ற சின்னத்தம்பியார் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    இதபோல் சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், தென்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
    • வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

    சிவகிரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா மறைந்ததை யொட்டி சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு மீண்டும் கலையரங்கம் வந்து அடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சிவசுப்பிர மணியன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்தையா பாண்டியன், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமல்ராஜ், சுப்பிரமணியன், சுப்புலட்சுமி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மற்றும் பலர் கலந்து கொண்டு இரங்கல் கூட்டத்தில் பேசினர். வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.இதில் வாசுதேவநல்லூர் பேரூர் தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பாலசுப்பிரமணிய சுவாமி, முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
    • நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலையில் யாகசாலை பூஜையை தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கும், முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் சுவாமி நான்கு ரதவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்ப த்தினர் செய்து வருகின்றனர்.

    • கனமழையால் சிவகிரி தாலுகா பகுதியில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.
    • இடிந்து விழுந்த வீடுகளில் உரிமையாளர்களுக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் காசோலைகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா பகுதிகளிலும், சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியிலும் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் சிவகிரி தாலுகா பகுதியில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.

    சிவகிரி அண்ணா தெற்கு தெருவை சேர்ந்த சேர்வாரன் மகன் மாரியப்பன், சிவகிரி அருகே தாருகாபுரம் மடத்து தெருவை சேர்ந்த கோபி மகன் குருசாமி, தேசியம்பட்டி என்ற நாரணாபுரம் கலைஞர் புது காலனி தெருவை சேர்ந்த பிள்ளையார் மகன் கருப்பசாமி, தென்மலை பஞ்சாயத்து ஏ.சுப்பிரமணியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்லையா மகன் சாலமன், ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அம்மையப்பன் மனைவி ராமலட்சுமி, சிவகிரி பாலகணேசன் தெருவை சேர்ந்த இசக்கி ராஜ் மனைவி ஆறுமுகத்தாள் ஆகிய 6 வீடுகள் கனமழையால் இடிந்து விழுந்து சேதமாயின.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், தலை மையிடத்து துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் சிவகிரி சுந்தரி, வாசுதேவநல்லூர் ராசாத்தி, கூடலூர் கோபால கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் மற்றும் உதவியாளர் அழகராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனமழையால் இடிந்து விழுந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    மழையால் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கு முழு நிவாரண உதவி தொகையாக ரூ.5 ஆயிரம், பகுதி நிவாரணத் தொகையாக ரூ.4ஆயிரம், இதற்கான தொகைக்கு காசோலையாக சம்பந்தப்பட்டவர்களிடம் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் காசோலைகளை வழங்கினார். அப்போது சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் உடன இருந்தனர்.

    • விழாவில் ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளையும் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்க அலுவலகத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கும், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் சித்தானந்தம், பத்மாவதி அம்மாள் குடும்பத்தின் சார்பாகவும், சுப்பிரமணியபுரம் இசக்கிசெல்வம் குடும்பத்தின் சார்பாகவும், புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கினார். சங்கத்தலைவர் தவமணி, பொருளாளர் தமிழரசன், பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, மாணவ - மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிவகிரியில் 24 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெற்றது.
    • ராஜா எம்.எல்.ஏ., சீனிவாசன், டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முகாமினை பார்வையிட்டனர்.

    சிவகிரி:

    சிவகிரியில் 24 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இரட்டை பதிவுகள் நீக்குதல், பெயர் திருத்தம் முகாம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது முனியாண்டி, கார்த்திக், நல்லசிவம், 24 பூத் முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தென்மலையில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43.98 லட்சம் மதிப்பீட்டில் ஏ.சுப்ரமணியாபுரம் முதல் தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய துணைச்செயலாளர் குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவராணி, ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர்கள் குருசாமி, ராஜகோபால், கிரகதுரை, குருசாமி, கருப்பையா, உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உணவகங்கள், கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • சுமார் 100 கிலோ பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு, சப் இன்ஸ்பெக்டர் சஜிவ் ஆகியோர் தலைமையில், அனைத்து உணவகங்களிலும், கடைகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 100 கிலோ பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின்போது சிவகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின் ராஜாசிங், சுகாதார மேற்பார்வையாளர்கள் குமார், இசக்கி, பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தேவர் சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி சாமி, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் மருதப்பன், மாவட்ட மருத்துவர் அணி மணிகண்டன், நல்லசிவம், கார்த்திக், வீரமணி, தங்கராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மருது பாண்டியன், துணை செயலாளர் முனியாண்டி, முத்தையா, வீரமணி, வார்டு கவுன்சிலர்கள் ரத்தினராஜ், முத்துலட்சுமி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×