search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவசேனா"

    • உத்தவ் தாக்கரே கட்சி 23 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிப்பு.
    • 48 இடங்களை பிரித்துக் கொள்வதில் மூன்று கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை.

    இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்திற்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய மாநிலமாக கருதப்படுவது மகாராஷ்டிரா மாநிலம். இந்த மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளது.

    மகாராஷ்டிராவில் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று கட்சிகளுக்கு இடையே இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில் "மகாராஷ்டிரா மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த இன்று முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்று கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    மகாராஷ்டிராவில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்கள் தொடர்பாக வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஆலோசனையில் அது சரி செய்யப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே கட்சி 23 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    • விரைவில் கடவுள் ராமரை தங்கள் வேட்பாளராக பா.ஜ.க.வினர் அறிவிப்பார்கள்.
    • ராமர் பெயரில் பெரிய அரசியல் நடத்தப்படுகிறது என சஞ்சய் ராவத் காட்டமாக விமர்சித்தார்.

    மும்பை:

    சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பான கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், இப்போது தேர்தலுக்கு ராமரை தங்கள் வேட்பாளராக மட்டும்தான் பா.ஜ.க. அறிவிக்கவில்லை. விரைவில் அவரை தங்கள் வேட்பாளராகவும் அறிவிப்பார்கள். ராமர் பெயரில் இவ்வளவு பெரிய அரசியல் நடத்தப்படுகிறது என காட்டமாக விமர்சனம் செய்தார்.

    இந்நிலையில், ஷிண்டே பிரிவைச் சேர்ந்த சிவசேனா தலைவர் கிருபாள் துமானே கூறுகையில், வெட்கமின்மைக்கும் ஒரு எல்லை உண்டு. தற்போது ராவணன் மடியில் அமர்ந்திருப்பதால் பா.ஜ.க. மீது வெறுப்பு கொண்ட அவர் இப்போது ராமரையும் வெறுக்க ஆரம்பித்து விட்டார். இந்திய மக்கள் இதைப் பொறுக்க மாட்டார்கள் என ஆவேசத்துடன் தெரிவித்தார்.

    • ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேயிடம் இருந்து சிவசேனா கட்சியை கைப்பற்றிக் கொண்டார்
    • பாலாசாகேப் தாக்கரே உருவாக்கி உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்ததுதான் உண்மையான சிவசேனா- சுலே

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி நிலவி வருகிறது. அதற்கு முன்னதாக சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து, ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றிக் கொண்டார்.

    அம்மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

    என்னைப் பொறுத்தவரையில் பா.ஜனதா கட்சியில் உண்மை பேசும் ஒரே நபர் நிதின் கட்கரிதான். அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரேயொரு சிவசேனாதான். அது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும்போது உத்தவ் தாக்கரேயிடம் பொறுப்பை ஒப்படைத்தார். தற்போது அதன் நகல் உள்ளது. ஆனால் மக்களுக்கு தங்கத்திற்கும், வெண்கலத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    ஒரு பேட்டியின்போது உண்மையான சிவசேனா குறித்து நிதின் கட்கரி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சுப்ரியா சுலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஒரே கட்சி ஆட்சியிலும் உள்ளது. எதிர்க்கட்சியாகவும் செயல்படுகிறது
    • உலகத்தில் இதுபோன்று நான் பார்த்தது இல்லை

    மகாராஷ்டிர மாநிலத்தின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே ஒரு நிகழ்ச்சில் கலந்து கொண்டபோது பேசியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை, கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளன. எதிர்க்கட்சியாகவும் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலை, நம்முடைய மாநிலத்தில் மட்டுமே உள்ளன. உலகில் வேறு எங்கேயும் இல்லை.

    இந்த அபத்தமான, அசிங்கமான அரசியல் நிலையை நான் ஒருபோதும் பார்த்தது இல்லை. சிவசேனா கட்சியின் ஒரு கோஷ்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டி ஆட்சி அதிகாரத்தில் உள்ளன. அந்த கட்சிகளின் மீதமுள்ளவர்கள் எதிர்க்கட்சிகளாக உள்ளனர்.

    இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் சிவசேனா காட்சியில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அதிகமான எம்.எல்.ஏ.-க்களுடன் கட்சியை தன்வசமாக்கினார். கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்பட்டு வரும் அஜித் பவார், 8 எம்.எல்.ஏ.-க்களுடன் ஆட்சியில் இணைந்துள்ளார்.

    • மகாராஷ்டிராவில் பா.ஜனதா, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் கூட்டணி
    • மெகா கூட்டணி என தங்களை அழைக்கும் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் அதிக இடங்களை பிடிக்க திட்டம்

    2024 பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜனதாவும் தங்களது கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதாக கூறி வருகிறது.

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இந்த 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை பிடிப்பதுதான் எங்களின் மெகா கூட்டணியின் இலக்கு என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை பிரித்து அக்கட்சியை தனதாக்கிய ஷிண்டே, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியமைத்தார். இந்த கூட்டணியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி, தனி கோஷ்டியாக திகழும் அஜித் பவார் இணைந்துள்ளார். அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார்.

    2019 தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. பா.ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன குறிப்பிடத்தக்கது.

    • எங்கள் மீது பா.ஜனதா தாக்குதல் நடத்த இதுபோன்ற கருத்துக்கள் அமையக் கூடாது.
    • மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது.

    மும்பை:

    சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் இதுகுறித்து கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர். அவரது அந்த பேச்சை நான் கேள்விப்பட்டேன். யாரும் இதை ஆதரிக்க மாட்டார்கள். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இது தி.மு.க.வின் பார்வையாகவோ அல்லது அவரது தனிப்பட்ட பார்வையாகவோ இருக்கலாம். சுமார் 90 கோடி இந்துக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். மற்ற மதத்தினரும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்த கூடாது.

    நாட்டின் நிலைமை மோசமடையக் கூடாது. எங்கள் மீது பா.ஜனதா தாக்குதல் நடத்த இதுபோன்ற கருத்துக்கள் அமையக் கூடாது. மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது. அவர் எங்களுடன் இணைந்து இருக்கிறார். எனவே இதுபோன்று கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    • கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சரவையில் நீடிக்க கூடாது.
    • தமிழக ஆளுநருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சரவையில் நீடிக்க கூடாது என அறிவித்த தமிழக ஆளுநருக்கு சிவசேனா கட்சியின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.ஒரு அரசாங்க ஊழியர் இது போன்ற ஒரு கிரிமினல் குற்றச்சாட்டில் ஈடுபட்டால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் அவரது பணியை தொடர முடியும் என சட்டம் உள்ளது.

    அது போல செந்தில் பாலாஜி சட்டப்படி சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டும்.ஊழல் செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி என்பது சட்டமன்றத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.இதனை சிவசேனா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.
    • குற்றவாளியை கைது செய்த போலீசார் நடவடிக்கையை சிவசேனா வரவேற்கிறது.

     திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2-6-2023 அன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் சுப்பிரமணியசுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்துகொண்டிருந்த நேரத்தில் அப்பகுதியில் இந்திய வரைபடத்துடன் சுற்றி திரிந்த வங்கதேச வாலிபர் காலிமூசா என்பவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் அச்சஉணர்வை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியை கைது செய்த போலீசார் நடவடிக்கையை சிவசேனா வரவேற்கிறது.

    மேலும் இதனை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் வங்கதேசத்திலிருந்து காலிமூசா தமிழகத்தில் எப்போது நுழைந்தான்?, இந்திய வரைபடம் எதற்காக வைத்திருந்தான்?, சமூக விரோத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?,திருப்பரங்குன்றம் கோவில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குண்டு வெடிப்பு போன்ற நாசவேலையில் ஈடுபட ஏதேனும் திட்டமிட்டு இருந்தானா? என பல்வேறு கோணத்தில் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடியே அவரது தோல்விக்கு காரணமாக இருப்பார்
    • மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும்

    பா.ஜனதா கட்சி இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இரண்டு முறையும் மோடியே பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த முறையும் பா.ஜனதா பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    பா.ஜனதாவின் வெற்றியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கெஜ்ரிவால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக ஆதரவு திரட்டினார். மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜனதாவுக்கு உத்தர பிரதேசம் (62), மத்திய பிரதேசம் (28), பீகார் (17), ராஜஸ்தான் (24), குஜராத் (26), மகாராஷ்டிரா (23) மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளன. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சிதான் காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார். அவர் பா.ஜனதாவை மிகப்பெரிய எதிரியாக கருதுகிறார்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னா, பிரதமராகும் ஆசை எதிர்க்கட்சி தலைவரகளுக்கு இல்லையென்றால், பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என தலையங்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டிய நிலையில் அவரது பொறுமையை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடியுடன் காந்தி குடும்பத்தை சேர்ந்தவருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்ற பிம்பத்தில் இருந்து ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும்.

    கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்தது 2024-ம் ஆண்டுக்கான பா.ஜனதாவின் கெட்ட சகுனம். வரவிருக்கும் மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும். சத்தீஸ்காரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், பா.ஜனதா கட்சியுடன் போட்டியை கடுமையாக்குவார் எனத் தெரிவித்துள்ளது.

    வட இந்தியாவில் ராகுல்காந்தி தன்னந்தனியாக பிரசாரத்தை மேற்கொண்டால், தற்போதைய நிலை காங்கிரஸ் கட்சி மாறலாம். 2024-ம் ஆண்டு பா.ஜனதா தோல்விக்கு மோடியே காரணமாக இருப்பார். அதற்கு அமித் ஷா பங்களிப்பார். மோடி- அமித் ஷா மீது கோபம் உள்ளது. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள் என எழுதியுள்ளது.

    இருந்தாலும், மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. அது அரசியலமைப்பு மற்றும் இந்திய தாயாக இருக்கும். தலைவர் மக்களிடையே இருந்து உருவாகுவார்.

    இலங்கை மன்னர் ராவணனை வீழ்த்த வானர் கூட்டம் உதவியது போல், தற்போது வானர் சேவை அவசியமானது எனத் குறிப்பிட்டுள்ளது.

    • ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர்.
    • அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது.

    மும்பை :

    மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி அரசை கவிழ்த்தார். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரி ஆனார்.

    உத்தவ் தாக்கரே அரசு கவிழும் முன் ஏக்நாத் ஷிண்டே உள்பட சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு அப்போதைய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த மராட்டிய அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கும் அடங்கும். நேற்று முன்தினம் வழக்கில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானம் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் 16 எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட உயிர்பிச்சை தற்காலிகமானது தான். சுப்ரீம் கோர்ட்டு குறிப்பட்ட காலத்தில் தகுதி நீக்க விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. எனவே எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானத்தின் மீது சபாநாயகர் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

    முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் என்னை மீண்டும் முதல்-மந்திரி பதவியில் அமர்த்தி இருக்க முடியும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது எனக்கு திருப்தி அளிக்கிறது. தார்மீக அடிப்படையில் நான் அதை செய்தேன். மக்கள் மன்றத்தை சந்திக்க நான் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு சவால் விடுக்கிறேன்.

    என்னை சட்டசபையில் பலத்தை நிரூபிக்குமாறு கவர்னர் கூறியதே சட்டவிரோதம் என்று கோர்ட்டு கூறியுள்ளது. அப்படியெனில் தற்போது உள்ள அரசு சட்டவிரோதமானது தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உடனிருந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் அனில் பரப் கூறுகையில், "இந்த அரசு சட்டவிரோதமானது என கூறி வருகிறோம். கொறடாவின் பங்கு முக்கியமானது. அந்த நேரத்தில் கொறடாவாக எங்கள் அணியை சேர்ந்த சுனில் பிரபு இருந்தார். எனவே ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர்.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் அதிக காலம் எடுத்து கொள்ளக்கூடாது. அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு குறைந்த நேரம் தான் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ராகுல் நர்வேக்கருக்கு கடிதம் எழுதுவோம்" என்றார்.

    • தேசியவாத காங்கிரஸ் துரோகத்தின் கட்சி.
    • அஜித்பவார், உத்தவ் தாக்கரேவின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவலை அஜித்பவார் மறுத்து வருகிறார்.

    இந்தநிலையில் அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்தால், கூட்டணி அரசில் இருந்து விலகுவோம் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அறிவித்து உள்ளது.

    இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாட் கூறியதாவது:-

    அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி சிவசேனா மற்றும் பா.ஜனதாவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால் அவரை வரவேற்போம். அதே நேரத்தில் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி அல்லது கட்சியின் ஒரு அணியாக (எம்.எல்.ஏ.க்களுடன்) சேர்ந்தால் அது தவறு. அப்படி நடந்தால் நாங்கள் கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவோம். எங்கள் கொள்கை தெளிவானது. தேசியவாத காங்கிரஸ் துரோகத்தின் கட்சி. ஆட்சி அதிகாரத்தில் கூட தேசியவாத காங்கிரசுடன் இருக்க மாட்டோம். பா.ஜனதா, தேசியவாத காங்கிரசை சேர்த்தால் மராட்டியம் அதை விரும்பாது.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்தது பிடிக்கவில்லை என்பதால் தான் நாங்கள் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

    முன்பு சிவசேனாவில் நிலவி வந்தது போல தற்போது தேசியவாத காங்கிரசில் குழப்பம் நிலவி வருகிறது. அஜித்பவார், உத்தவ் தாக்கரேவின் தலைமையை (மகா விகாஸ் கூட்டணி அரசில்) ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேசியவாத காங்கிரசில் நீடிக்கவும் விரும்பவில்லை. அங்கு அவர் சுதந்திரமாக இல்லை என நினைக்கிறேன். அஜித்பவாருக்கு அவரது கட்சி மீதுள்ள அதிருப்திக்கும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள சிவசேனா வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அஜித் பவாரின் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே செல்வது புதிதல்ல. அஜித்பவாரின் மகன் பார்த் பவார் தேர்தலில் தோல்வியை சந்தித்ததில் இருந்து அவர் கட்சி மீது அதிருப்தியில் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் புகார் கடிதமும் அனுப்பியுள்ளார்.
    • மக்கள் நலப்பணி வழங்குவதாக திட்டங்களை அறிவித்துள்ளது.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திய ஜனாதிபதி, மத்திய கலாச்சாரம், பாரம்பரிய மற்றும் தொல்லியல்துறை அமைச்சகத்திற்கும் புகார் கடிதமும் அனுப்பியு ள்ளார் அதில் அவர் கூறியிரு ப்பதாவது:-

    இந்து சமய அறநிலை யதுறை தொடர்ச்சி யாக இந்து திருக்கோ யிலில் உள்ள தங்கத்தையும், சொத்து ககளையும், மக்கள் நலப்பணி வழங்குவதாக திட்டங்களை அறிவித்து ள்ளது இதற்கு சிவசேனா வரவேற்கிறது. ஆனால் அரசு சட்டசபையில் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர., "கடைத்தே ங்காய் எடுத்து வழிபிள்ளை யாருக்கு உடைப்பது" போல் இந்து சமய அறநிலைய துறை சொத்து க்களை தானமாக வழங்குவது கண்டனத்து க்குரியது மேலும் இந்து சமய அறநிலைய சொத்துக்கள், உடமைகளை திருக்கோயில் மேம்பாடுசெய்யவும்., புணரமைக்கவும்., மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்

    அதேநேரத்தில் மத்திய கலாச்சாரம், பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கிஷான் ரெட்டிக்கு தமிழக சிவசேனா கட்சி சார்பில் தொலைபேசி, வாட்ஸ்அப், இமெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு இதுசம்பந்தமாக நடவடிக்க எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

    ×