search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து சமய அறநிலைய சொத்துக்களை கோவில் புணரமைப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - சிவசேனா கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    இந்து சமய அறநிலைய சொத்துக்களை கோவில் புணரமைப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - சிவசேனா கோரிக்கை

    • வசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் புகார் கடிதமும் அனுப்பியுள்ளார்.
    • மக்கள் நலப்பணி வழங்குவதாக திட்டங்களை அறிவித்துள்ளது.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திய ஜனாதிபதி, மத்திய கலாச்சாரம், பாரம்பரிய மற்றும் தொல்லியல்துறை அமைச்சகத்திற்கும் புகார் கடிதமும் அனுப்பியு ள்ளார் அதில் அவர் கூறியிரு ப்பதாவது:-

    இந்து சமய அறநிலை யதுறை தொடர்ச்சி யாக இந்து திருக்கோ யிலில் உள்ள தங்கத்தையும், சொத்து ககளையும், மக்கள் நலப்பணி வழங்குவதாக திட்டங்களை அறிவித்து ள்ளது இதற்கு சிவசேனா வரவேற்கிறது. ஆனால் அரசு சட்டசபையில் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர., "கடைத்தே ங்காய் எடுத்து வழிபிள்ளை யாருக்கு உடைப்பது" போல் இந்து சமய அறநிலைய துறை சொத்து க்களை தானமாக வழங்குவது கண்டனத்து க்குரியது மேலும் இந்து சமய அறநிலைய சொத்துக்கள், உடமைகளை திருக்கோயில் மேம்பாடுசெய்யவும்., புணரமைக்கவும்., மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்

    அதேநேரத்தில் மத்திய கலாச்சாரம், பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கிஷான் ரெட்டிக்கு தமிழக சிவசேனா கட்சி சார்பில் தொலைபேசி, வாட்ஸ்அப், இமெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு இதுசம்பந்தமாக நடவடிக்க எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×