search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shiva sena"

    • வசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் புகார் கடிதமும் அனுப்பியுள்ளார்.
    • மக்கள் நலப்பணி வழங்குவதாக திட்டங்களை அறிவித்துள்ளது.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திய ஜனாதிபதி, மத்திய கலாச்சாரம், பாரம்பரிய மற்றும் தொல்லியல்துறை அமைச்சகத்திற்கும் புகார் கடிதமும் அனுப்பியு ள்ளார் அதில் அவர் கூறியிரு ப்பதாவது:-

    இந்து சமய அறநிலை யதுறை தொடர்ச்சி யாக இந்து திருக்கோ யிலில் உள்ள தங்கத்தையும், சொத்து ககளையும், மக்கள் நலப்பணி வழங்குவதாக திட்டங்களை அறிவித்து ள்ளது இதற்கு சிவசேனா வரவேற்கிறது. ஆனால் அரசு சட்டசபையில் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர., "கடைத்தே ங்காய் எடுத்து வழிபிள்ளை யாருக்கு உடைப்பது" போல் இந்து சமய அறநிலைய துறை சொத்து க்களை தானமாக வழங்குவது கண்டனத்து க்குரியது மேலும் இந்து சமய அறநிலைய சொத்துக்கள், உடமைகளை திருக்கோயில் மேம்பாடுசெய்யவும்., புணரமைக்கவும்., மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்

    அதேநேரத்தில் மத்திய கலாச்சாரம், பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கிஷான் ரெட்டிக்கு தமிழக சிவசேனா கட்சி சார்பில் தொலைபேசி, வாட்ஸ்அப், இமெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு இதுசம்பந்தமாக நடவடிக்க எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

    • ரெயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள், பக்தர்கள், வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    • மும்பையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் பக்தர்கள் பின்னர் ராமேஸ்வரத்திற்கு ரெயிலில் பயணித்து வந்தனர்.

    திருப்பூர் :

    ேகாவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஏற்கனவே ரெயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது.அந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள், பக்தர்கள் , வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவை வந்த ரெயில்வே நிலைக்குழு தலைவர்ராதாமோகன் சிங்கை சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கோவை-ராமேஸ்வரம் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அப்போது அங்கிருந்த நிலைக்குழு உறுப்பினரும், சிவசேனா கட்சியை சேர்ந்த மும்பை தெற்கு தொகுதி எம்.பி.யுமான அர்விந்த் சாவந்த் , அந்த ரெயில் வடமாநில பக்தர்களுக்கு பெரிதும் பயன் அளித்து வந்தது. மும்பையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் பக்தர்கள் பின்னர் ராமேஸ்வரத்திற்கு ரெயிலில் பயணித்து வந்தனர். எனவே அதனை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது பக்தர்கள் , பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    • மறந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துசிறப்பிக்கும் முயற்சிகளை சிவசேனா கட்சி செய்து வருகிறது.
    • சிங்கம் செட்டியாரின் 224 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழக முதல் அமைச்சர் முக. ஸ்டாலினுக்கு சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழாகொண்டாட்டங்களை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படிவரலாற்று பக்கங்கள், மறந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துசிறப்பிக்கும் முயற்சிகளை சிவசேனா கட்சி செய்து வருகிறது.அதன்படி நமது தமிழகத்தை சேர்ந்தசுதந்திர போராட்ட வீரரும், தமிழர்களின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சிங்கம் செட்டியாரின் 224 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.ஆங்கிலேயன் கட்டுப்பாட்டில் இருந்தகமுதி கோட்டையில் நெல் உள்ளிட்ட தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதைக் கைப்பறிநம்முடைய மக்களுக்கு விநியோகம் செய்ததால் வெள்ளைக்காரனுடன் மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது‌. அந்த போரின் போது வீர மரணம் அடைந்த சுதந்திர போராட்ட வீரர் சிங்கம் செட்டியாரின் வரலாற்றை புத்தகமாகவெளியிட்டும், மேலும் உலகம் அறியும் வகையில் அவர் வீரமரணம் அடைந்த கமுதியில் மணிமண்டபமும்அமைத்து தரவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, தேர்தல் அரசியலை பா.ஜ.க கையில் எடுத்துள்ளதாக சிவசேனா சாடியுள்ளது. #ShivsenaslamsBJP
    மும்பை:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க அமைத்து இருந்த கூட்டணியை சமீபத்தில் முறித்துவிட்டு ஆட்சியை கவிழ்த்தது. இதன்மூலம் தற்போது ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்று தொண்டர்களிடையே உரை நிகழ்த்தினார்.

    இதுதொடர்பாக பேசிய சிவசேனா, 2014-ல் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க தான் தாமாக முன்வந்து கூட்டணி அமைத்ததாகவும், இப்போது அந்த முகமூடியை கலைத்துவிட்டு, தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.



    பா.ஜ.க.வின் இதுபோன்ற சதிவேலைகளால் மக்கள் சோர்ந்து விட்டதாகவும், உண்மையை பேச யாராவது பா.ஜ.க.வுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சிவசேனா சாடியுள்ளது.

    ‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சிகள் இல்லை என்றும் பயங்கரவாதம் அதிகரித்து விட்டதாகவும் கூறும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா, 3 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது ஏன் கேள்வி எழுப்பவில்லை? 3 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது எந்தப் பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்காமல், மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, தற்போது கூட்டணியை முறித்தபின் குற்றம் சாட்டுகிறது’ என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது. #ShivsenaslamsBJP
    ×