search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore-Rameswaram train"

    • நீண்ட காலமாக பயணிகள் வலியுறுத்தும் ெரயில்கள் கூட இயக்கப்படாமல் உள்ளது.
    • உடுமலை சுற்றுப்பகுதி பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    உடுமலை : 

    திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட பிறகு கூடுதல் ெரயில் சேவை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து பகுதி மக்களும் இருந்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக நீண்ட காலமாக பயணிகள் வலியுறுத்தும் ெரயில்கள் கூட இயக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, ராமேஸ்வரத்துக்கு ெரயில் சேவையை மீண்டும் செயல்படுத்த உடுமலை சுற்றுப்பகுதி பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இது குறித்து ெரயில் பயணிகள் சார்பில் தெற்கு ெரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை - பொள்ளாச்சி - திண்டுக்கல் மீட்டர் கேஜ் வழித்தடத்தில் ஆங்கிலேயர் காலத்திலேயே கோவை - ராமேஸ்வரம் ெரயில் இயக்கப்பட்டு அதிகப்படியான மக்கள் அச்சேவையை பயன்படுத்தி வந்தனர். இந்த ெரயிலை தினசரி விரைவு ெரயிலாக கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை வழியாக உடனடியாக இயக்க வேண்டும்.

    சேலம் ெரயில்வே கோட்டம் சார்பில் தெற்கு ெரயில்வேக்கு, ராமேஸ்வரம் தினசரி விரைவு ெரயிலை இயக்குவது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆன்மிக பக்தர்கள் மற்றும் வணிகர்களுக்கு இந்த ெரயில் மிக பயனுள்ளதாக இருக்கும். திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் பகுதியிலிருந்தும், கோவை - ராமேஸ்வரம் ெரயிலை இயக்க அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இது குறித்து மக்கள் பிரதிநிதிகள் சார்பிலும், தெற்கு ெரயில்வேக்கு பல முறை மனு அனுப்பியுள்ளனர். எனவே விரைவில், ராமேஸ்வரம் ெரயிலை இயக்கி பல ஆயிரக்கணக்கான பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ரெயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள், பக்தர்கள், வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    • மும்பையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் பக்தர்கள் பின்னர் ராமேஸ்வரத்திற்கு ரெயிலில் பயணித்து வந்தனர்.

    திருப்பூர் :

    ேகாவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஏற்கனவே ரெயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது.அந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள், பக்தர்கள் , வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவை வந்த ரெயில்வே நிலைக்குழு தலைவர்ராதாமோகன் சிங்கை சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கோவை-ராமேஸ்வரம் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அப்போது அங்கிருந்த நிலைக்குழு உறுப்பினரும், சிவசேனா கட்சியை சேர்ந்த மும்பை தெற்கு தொகுதி எம்.பி.யுமான அர்விந்த் சாவந்த் , அந்த ரெயில் வடமாநில பக்தர்களுக்கு பெரிதும் பயன் அளித்து வந்தது. மும்பையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் பக்தர்கள் பின்னர் ராமேஸ்வரத்திற்கு ரெயிலில் பயணித்து வந்தனர். எனவே அதனை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது பக்தர்கள் , பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    ×