search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "freedom fighter"

    • விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் படத்திறப்பு விழா நடந்தது.
    • மாணவர் அணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.

    பசும்பொன்

    கமுதியில் முக்குலத்தோர் முன்னேற்ற சங்க நிறுவனர் கீரந்தை வீரபெருமாள்தேவர் தலைமையில் நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் மாயகிருஷ்ணன் ஏற்பாட் டில் தென்னிந்திய விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் சேர்வைகாரர் படத்திறப்பு விழா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரும், முதுகுளத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி.எல்.சசிவர்ணத்தேவர் படத்திறப்பு விழா நடை பெற்றது. அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னதாக கமுதி பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் வாரிசுதாரார்கள், சித்திரங் குடி கிராம மக்கள், கமுதி தாலுகா மறவர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கத்தேவர், முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் செல்லத்தேவர், சாயல்குடி முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் வில்வ துரைத்தேவர் , முது குளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்கத்தின் நிர்வாகிகள் தியாகராஜன், வழக்கறிஞர் குணசேகர பாண்டியன், கடலாடி தாலுகா தேவர் சங்கத்தின் நிர்வாகிகள், பசும்பொன் தேவர் கல்லூரி யின் முன்னாள் மாண வர்கள் சங்கம், மூவேந்தர் பண்பாடு கழகத்தின் நிர்வாகிகள், தேவர் மீடியா அறக்கட்டளை தலைவர் மகேஸ்வரன், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். பார்வர்ட் பிளாக் மாணவர் அணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.

    • சுந்தரலிங்கனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    விடுதலைபோராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசு புது காலனியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தென்மண்டல அமைப்பு செயலாளர் முத்து கருப்பன், மாவட்ட செயலாளர்கள் பிரேம்குமார், தர்மராஜ், தச்சை மண்டல செயலாளர் தங்கவேலு, பாளை ஒன்றிய செயலாளர் பேச்சி பாண்டியன், செல்லையா, முத்துவேல், பாண்டியன், டவுன் நகர செயலாளர் குமார், மானூர் ஒன்றிய செயலாளர் தலைகான் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகண்டபிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க.அகோரம் தலைமை வகித்தார்.
    • பா.ஜ.க மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டம் எருக்கூர் அக்ரஹாரத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் 134-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    நீலகண்டபிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க.அகோரம் தலைமை வகித்தார்.

    சேவாபாரதி மாவட்டத் தலைவர் மும்மூர்த்தி, பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அணி செல்வம், கலை இலக்கிய அணி தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் பேரன் சுப்பிரமணியன் வரவேற்றார். பாஜக மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார்.

    இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமி நாதன், சுதந்திரபோராட்ட வீரர்களின் வாரிசுகளான கடலூர் அஞ்சலை அம்மாளின் பேரன் முத்துக்கு மரன், சாவடி அருணாச்சலம் பிள்ளையின் மருமகள் முத்தம்மாள் சொக்கலிங்கம், ஒட்டப்பிடாரம் மாடசாமியின் கொள்ளுப்பேரன் இசக்கி சங்கர் பாலாஜி, திண்டுக்கல் சிவாஜி பேரவை நிறுவனத் தலைவர் வைரவேல் உள்ளிட்டோர் பேசினர்.

    இதில் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • புராண இதிகாசங்களை பாடல்களாலும், பேச்சாலும் விளக்குவதே கதாகாலட்சேபம்.
    • பழநியில் இருந்து, கிராமிய தெம்மாங்கு கலைக்குழுவினர் திருப்பூரில் கதாகாலட்சேபம் நிகழ்த்தியுள்ளனர்.

    திருப்பூர் :

    தியாகி சுந்தராம்பாளின் வரலாற்றை விவரிக்க ஏதுவாக திருப்பூர் ஆண்டிபாளையம் மண்டலம் பா.ஜ.க. சார்பில், 'கதாகாலட்சேபம்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கோவில்களில் திருவிழாக்களில், கற்றுத்தேர்ந்த விற்பன்னர்களை கொண்டு மகாபாரதம், ராமாயணம் போன்ற புராண இதிகாசங்களை பாடல்களாலும், பேச்சாலும் விளக்குவதே கதாகாலட்சேபம். கிராமிய இசைக்கலைக்கு உயிர்கொடுத்து தியாகிகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் பழநியில் இருந்து, கிராமிய தெம்மாங்கு கலைக்குழுவினர் திருப்பூரில் கதாகாலட்சேபம் நிகழ்த்தியுள்ளனர்.

    எழுச்சியூட்டும் சர்வமத பாடல்களுடன் துவங்கிய கதாகாலட்சேபம், தியாகி சுந்தராம்பாளின் வரலாற்றை விளக்கியும், அவரது பாடல்களை பாடியும் காண்போரை கட்டிப்போட்டது.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை விளக்கும் பாடல்களும், இடையிடையே, ஆடல்பாடலுடன் நிகழ்ந்தது.சினிமா பாடல்களுடன் கலை நிகழ்ச்சி நடத்தும் நிலையில் இருந்து மாறி, பாரம்பரியமான கதாகாலட்சேபம் என்ற பெயரில், சுதந்திர போராட்ட வரலாறுகளை காட்சிகளாகவும், நரம்புகளை முறுக்கேற்றிய பாடல்களாகவும் விளக்கியது திருப்பூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

    • மறந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துசிறப்பிக்கும் முயற்சிகளை சிவசேனா கட்சி செய்து வருகிறது.
    • சிங்கம் செட்டியாரின் 224 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழக முதல் அமைச்சர் முக. ஸ்டாலினுக்கு சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழாகொண்டாட்டங்களை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படிவரலாற்று பக்கங்கள், மறந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துசிறப்பிக்கும் முயற்சிகளை சிவசேனா கட்சி செய்து வருகிறது.அதன்படி நமது தமிழகத்தை சேர்ந்தசுதந்திர போராட்ட வீரரும், தமிழர்களின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சிங்கம் செட்டியாரின் 224 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.ஆங்கிலேயன் கட்டுப்பாட்டில் இருந்தகமுதி கோட்டையில் நெல் உள்ளிட்ட தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதைக் கைப்பறிநம்முடைய மக்களுக்கு விநியோகம் செய்ததால் வெள்ளைக்காரனுடன் மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது‌. அந்த போரின் போது வீர மரணம் அடைந்த சுதந்திர போராட்ட வீரர் சிங்கம் செட்டியாரின் வரலாற்றை புத்தகமாகவெளியிட்டும், மேலும் உலகம் அறியும் வகையில் அவர் வீரமரணம் அடைந்த கமுதியில் மணிமண்டபமும்அமைத்து தரவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • இந்திய தூதரகம் ஈஷ்வர் லால் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
    • ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஈஷ்வர் லால் சிங்கை சந்தித்து பேசி உள்ளார்.

    சிங்கப்பூர் :

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடியவர், ஈஷ்வர் லால் சிங் (வயது 92). இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆவார்.

    இவர் 1943-ல் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, சுபாஷ் சந்திரபோசுடன் உரையாடியவர் ஆவார். இவர் சிங்கப்பூரில் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

    அவருடைய நெருங்கிய உறவினரான மெல்விந்தர் சிங் இதுபற்றி கூறும்போது, "ஈஷ்வர் லால் சிங் மரணத்தை மிகுந்த வேதனையுடன் அறிவிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

    அங்குள்ள இந்திய தூதரகம், ஈஷ்வர் லால் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், கடந்த 2019-ல் சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஈஷ்வர் லால் சிங்கை சந்தித்து பேசி உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

    இந்திய தேசிய ராணுவத்தில் சிங்கப்பூர், மலேசியாவை சேரந்த முக்கிய இனக்குழுக்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நன்றாக படித்து நாட்டையும், குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுவை அரசு சார்பிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கவர்னர் தமிழிசை 75 பள்ளிகளுக்கு செல்ல திட்டமிட்டு, இன்று தொடங்கினார். திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முதலில் வந்தார். அங்கு நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    மாணவி ஒருவர் விடுதலைப்போராட்ட வீரர்களை பற்றி பேசினார். தொடர்ந்து கவர்னர் தமிழிசை விழாவில் பேசியதாவது:-

    75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தாலும், மாணவர்களிடையே தேச பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியதுதான் முதல் கடமை. மாணவர்கள் தன்னம்பிக்கை, திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    தயக்கத்தை உடைத்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்றைய பாடங்களை அன்றைக்கே படிப்பதுதான் நல்லது. ஆசிரியர்கள் தவறை சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். நன்றாக படித்து நாட்டையும், குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும்.

    தாய், தந்தையர் கவனிக்கவில்லை என புகார்கூறக்கூடாது. உங்களுக்கே பொறுப்பு உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வாரம் ஒரு சுதந்திர போராட்ட வீரரை தெரிந்து கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் காந்தியை தெரியும், அவரோடு சுதந்திரத்துக்காக பணியாற்றியவர்களை அறிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாணவிகளுக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பை வழங்கினார். மாணவி ஹரிணி, உங்களை ஈர்த்த தலைவர் யார்? என கேட்டார். இதற்கு பதிலளித்த கவர்னர் தமிழிசை, முதலில் அம்மா, பின் அப்பா, ஆசிரியர்கள், தலைவர்கள். அம்மாவிடமிருந்து அன்பையும், அப்பாவிடமிருந்து எப்படி பேச வேண்டும், படிக்க வேண்டும் என்பதையும், ஆசிரியர்களிடமிருந்து எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

    தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை படிக்கும்போது அதன்மூலம் அவர்களின் அனுபவங்களை கற்றுக்கொண்டேன். நாட்டுக்கு எப்படி உழைக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடியிடம் கற்று வருகிறேன். பெண்கள் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். பாரதியாரின் அச்சமில்லை, அச்சமில்லை என்ற வரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் நிலைப்பாட்டில் வேறாக இருந்தாலும், ஜெயலலிதாவிடமிருந்து துணிச்சல் என்னை ஈர்த்தது என தெரிவித்தார்.

    மாணவி ஷிவானி கோகிலாம்பிகை, உங்களுக்கு படித்த சுதந்திர போராட்ட தலைவர் யார்? என கேட்டார். அதற்கு பதிலளித்த கவர்னர், அனைத்து தலைவர்களையும் பிடிக்கும். காந்தியையும், சுதந்திரத்துக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்தவர்களையும் பிடிக்கும் என்று கூறினார்.

    தொடர்ந்து எக்கோலஸ் ஆங்கில அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு நுழைவு வாயிலில் சுதந்திர போராட்ட வீரர்களின் வேடமணிந்த குழந்தைகள் அவரை வரவேற்றனர். அவர்களிடம் கவர்னர் பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    இதன்பின் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளிக்கு சென்ற கவர்னர், நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். தொடர்ந்து லாஸ்பேட்டை அரங்கசாமி நாயக்கர் நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் கோரிமேடு இந்திராநகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

    • சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மாநில துணை பொது செயலாளர் ஆதிமுத்துக்குமார் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு மறத்தமிழர்சேனை சார்பில் சுதந்திரபோராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் 221-வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.

    மாநில துணை பொது செய லாளர் ஆதிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜவஹர்சிவா, மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்டசெயலாளர் முத்துகுமார், மூவேந்தர் முன்னேற்றகழக மாநில பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் கோட்டூர்சாமி வரவேற்றார். வாளுக்குவேலி உருவபடத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகி மகேந்திரன், அ.ம.மு.க. நகர செயலாளர் மதன், சுகுமாறன், தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், மூவேந்தர் முன்னேற்றகழக வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி, வழக்கறிஞர் விஜயக்குமார், லயன்ஸ் நகரதலைவர் பாலாஜி, நாம்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஆனந்த், காங்கிரஸ் நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கச்சைகட்டி கிளை செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த பயங்கரவாதியை விடுதலைப் போராளியாக சித்தரித்து பாகிஸ்தான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. #Pulwamaattack #Freedomfighter #Pakistanimedia
    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், பாகிஸ்தான் மக்களின் மனநிலையும் நிலைப்பாடும் நமக்கு எதிர்மாறாக உள்ளது.

    இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நாளேடுகளிலும், தொலைக்காட்சி உள்ளிட்ட பிற ஊடகங்களிலும் செய்தி வெளியாகி வருகின்றன.

    நமது உளவுத்துறையினர் உறுதிப்படுத்தி இருப்பதைப்போல் பாகிஸ்தானில் செயல்படும் ‘ஜெய்ஷ்-இ-முஹம்மத்’ பயங்கரவாத அமைப்புக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை சித்தரிப்பாக நிரூபிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான நாளேடான ‘தி நேஷன்’ பத்திரிகை ‘புல்வாமாவில் தாக்குதல் நடத்திய விடுதலைப் போராளி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.



    இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஏற்கனவே ‘ஜெய்ஷ்-இ-முஹம்மத்’ பயங்கரவாத அமைப்பு அறிவித்து, தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரின் பெயர் மற்றும் புகைப்படம் அனைத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும்’ பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் ஊடகங்களின் முயற்சி நிச்சயமாக தோல்வியில்தான் முடியும்.

    புல்வாமா தாக்குதலுக்கான உரிய விலையை பாகிஸ்தான் தந்தே தீர வேண்டும் என நடுநிலையாளர்கள் நம்புகின்றனர். #Pulwamaattack #Freedomfighter #Pakistanimedia
     
    ×