என் மலர்
நீங்கள் தேடியது "மாவீரன் அழகுமுத்துக்கோன்"
- இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது.
- மாவீரன் அழகு முத்துக்கோனின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய விடுதலைக்காக அவர் நடத்திய போர்களையும், அவர் செய்த தியாகங்களையும் நினைவுகூர்கிறேன். வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.
இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது ஆகும். ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்து விட்ட சூழலில், மன்னிப்புக் கேட்டு வரி செலுத்த ஒப்புக்கொண்டால், உயிரையும், நிலத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து, பீரங்கியின் வாயில் வைத்து சுடப்படும் தண்டனையை மகிழ்வுடன் ஏற்ற மாவீரன் அவர். அவரின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம். அவரது வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக்கோன்.
- வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசியவர் மாவீரர் அழகுமுத்துக்கோன்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக்கோன். தாய் நிலத்தின் உரிமை காக்க, அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர்.
வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன்.
- எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன். மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், ரவிச்சந்திரன், மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
#WATCH | Tamil Nadu Chief Minister M K Stalin pays tribute to freedom fighter Maveeran Alagumuthu Kone on the latter's birth anniversary, in Chennai.(Source: TN DIPR) pic.twitter.com/uIFkUzXPL4
— ANI (@ANI) July 11, 2024
- உயிரே போனாலும் மன்னிப்பும் கேட்க மாட்டேன்; வரியும் செலுத்த மாட்டேன் என்று முழங்கிவர் வீரன் அழகுமுத்துக்கோன்.
- வீரன் அழகுமுத்துக்கோனின் வீரமும், தன்மானமும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை.
சென்னை:
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில்,
ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் போரிட்ட கட்டாலங்குளம் சீமையின் மன்னன் மாவீரன் வீரன் அழகுமுத்துக்கோனின் 304-ஆம் பிறந்தநாள் இன்று.
பெத்தநாயக்கனூர் கோட்டை போரில் வீழ்த்தப்பட்ட நிலையில், மன்னிப்புக் கேட்டு, வரி செலுத்தினால் உயிர் பிழைக்கலாம் என்று ஆங்கிலேயர்கள் நிபந்தனை விதித்த நிலையில், உயிரே போனாலும் மன்னிப்பும் கேட்க மாட்டேன்; வரியும் செலுத்த மாட்டேன் என்று முழங்கி பீரங்கி குண்டுகளுக்கு தமது மார்புகளைக் காட்டி உயிர்த்தியாகம் செய்த மாவீரர் அவர். அவருடைய வீரமும், தன்மானமும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை. தமிழரின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த வீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
வீரன் அழகுமுத்துக் கோனின் 302-ஆம் பிறந்தநாளில்அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்!ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் போரிட்ட கட்டாலங்குளம் சீமையின் மன்னன் மாவீரன் வீரன் அழகுமுத்துக்கோனின் 304-ஆம் பிறந்தநாள் இன்று. பெத்தநாயக்கனூர் கோட்டை போரில் வீழ்த்தப்பட்ட…
— Dr S RAMADOSS (@drramadoss) July 11, 2024






