search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theeran Chinnamalai"

    • இன்றளவும் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் சிறந்து விளங்குகிறது.
    • வேளாண் குடும்பத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து உயர்ந்துள்ளேன்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூரில் கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமண மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலை திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

    தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்க செயலர் எம்.கே.சேகர் வரவேற்றார். தீரன் சின்னமலை முழு திருவுருவ வெண்கல சிலையை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் திறந்து வைத்து அவர் பேசியதாவது:-

    கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்டவர் தீரன் சின்னமலை. தீரன் சின்னமலையின் வரலாற்று குறிப்புகள் வெளிநாட்டினர் பலர் தங்களின் பயண குறிப்புகளில் குறிப்பிட்டு உள்ளனர். கொங்கு நாட்டின் குறுநில மன்னராக இருந்த தீரன் சின்னமலை ஆட்சியில் அமைதியான வாழ்வும், தொழில், மருத்துவம், வேளாண் பணிகளில் சிறந்து விளங்கியுள்ளது. இன்றளவும் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் சிறந்து விளங்குகிறது.

    வட மாநில மக்கள் கூட கொங்கு மண்டலத்தை நோக்கியே வருகை தருகின்றனர்.கொங்கு மண்ணில் ஆதிக்க மனப்பான்மை எப்போதும் இல்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமும் எப்போதும் இல்லை. வேளாண் குடும்பத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து உயர்ந்துள்ளேன்.

    எனவே, கிராமப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நன்றாக படித்து, வேலை வாய்ப்பு களை பெற்று சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிலை திறப்பு விழா மலரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.சின்ராஜ் வெளியிட முதல் பிரதியை கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் ஆர்.தேவ ராசன் பெற்றுக்கொண்டார்.

    விழா தொகுப்பினை தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவர் வே.சந்திர சேகரன், பொருளர் எஸ்.எம்.தங்கராசு ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த விழாவில் கர்நாடகா மாநில உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை ஆணையர் ஆர். இராமச்சந்திரன், தமிழ்நாடு சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலருமான செ.முத்துசாமி, ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பெருந்துறை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எல்.சென்னியப்பன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் ஜி.அசோகன், தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, காலை 9.30 மணியவில் முளைப்பாலிகை ஊர்வலத்தை கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் உ.தனியரசு தொடக்கி வைத்தார்.

    இந்த ஊர்வலத்தில் வழக்கறிஞர் ஜீ.வி. பிரகாசம் சர்ச்சில், நாகராசன், திருப்பதி கவுண்டர், பொன்.வெங்கடாசலம்சின்னசாமி, தமிழரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தில் நையாண்டி மேள நிகழ்ச்சியும், கேரளா செண்டை மேள நிகழ்சி நடைபெற்றது.

    சிலை திறப்பு விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலா ளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    • தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி மற்றும் பலர் உள்ளனர்.

    அலங்காநல்லூர்

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதன்படி கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் சங்கத்தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொரு ளாளர் சிதம்பர நாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

    சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத் தலைவர் பாலசுப்பிர மணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பாட்டாளி மக்கள் சார்பில் மாவட்ட தலைவர் செல்லம்பட்டி முருகன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரோஜினி, முன்னாள் மாவட்ட தலைவர் அழகுராஜா, ஒன்றிய செயலாளர்கள் முருகன், ஈஸ்வரன் முன்னிலையில் மாவட்ட துணைத்தலைவர் ராமசந்திரன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஒன்றிய செயலாளர் சேது சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர்கள் ஜோதிமுருகன், முத்து கிருஷ்ணன், சேகர், அவைத்தலைவர் அய்யாவு, ஒன்றிய துணைத்தலைவர் முனியசாமி, வர்த்தகர் பிரிவு பெருமாள், மாவட்ட இலக்கிய அணி சேகர், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாலமேடு அய்யாவு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.
    • திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே தனக்கென ஒரு பாதை அமைத்து, இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுக்கும் பெருமலையாக விளங்கிய இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளான வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலை மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் சண்முகம், தங்கராஜ் மற்றும் காமராஜ், மாரப்பன், கோவிந்தன், சுப்பிரமணியம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவார்கள். இதில் திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அலங்காநல்லூர்

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த தினத்தையொட்டி அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர் ஜெயராமன் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    இேதபோன்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×