தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை

தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை
Published on

அலங்காநல்லூர்

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த தினத்தையொட்டி அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர் ஜெயராமன் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

இேதபோன்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com