search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் படத்திறப்பு விழா
    X

    விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் படத்திறப்பு விழா நடந்தது.

    விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் படத்திறப்பு விழா

    • விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் படத்திறப்பு விழா நடந்தது.
    • மாணவர் அணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.

    பசும்பொன்

    கமுதியில் முக்குலத்தோர் முன்னேற்ற சங்க நிறுவனர் கீரந்தை வீரபெருமாள்தேவர் தலைமையில் நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் மாயகிருஷ்ணன் ஏற்பாட் டில் தென்னிந்திய விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் சேர்வைகாரர் படத்திறப்பு விழா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரும், முதுகுளத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி.எல்.சசிவர்ணத்தேவர் படத்திறப்பு விழா நடை பெற்றது. அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னதாக கமுதி பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் வாரிசுதாரார்கள், சித்திரங் குடி கிராம மக்கள், கமுதி தாலுகா மறவர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கத்தேவர், முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் செல்லத்தேவர், சாயல்குடி முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் வில்வ துரைத்தேவர் , முது குளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்கத்தின் நிர்வாகிகள் தியாகராஜன், வழக்கறிஞர் குணசேகர பாண்டியன், கடலாடி தாலுகா தேவர் சங்கத்தின் நிர்வாகிகள், பசும்பொன் தேவர் கல்லூரி யின் முன்னாள் மாண வர்கள் சங்கம், மூவேந்தர் பண்பாடு கழகத்தின் நிர்வாகிகள், தேவர் மீடியா அறக்கட்டளை தலைவர் மகேஸ்வரன், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். பார்வர்ட் பிளாக் மாணவர் அணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×