search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராவணன் மடியில் அமர்ந்துள்ளார் சஞ்சய் ராவத்: சிவசேனா தலைவர் ஆவேசம்
    X

    ராவணன் மடியில் அமர்ந்துள்ளார் சஞ்சய் ராவத்: சிவசேனா தலைவர் ஆவேசம்

    • விரைவில் கடவுள் ராமரை தங்கள் வேட்பாளராக பா.ஜ.க.வினர் அறிவிப்பார்கள்.
    • ராமர் பெயரில் பெரிய அரசியல் நடத்தப்படுகிறது என சஞ்சய் ராவத் காட்டமாக விமர்சித்தார்.

    மும்பை:

    சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பான கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், இப்போது தேர்தலுக்கு ராமரை தங்கள் வேட்பாளராக மட்டும்தான் பா.ஜ.க. அறிவிக்கவில்லை. விரைவில் அவரை தங்கள் வேட்பாளராகவும் அறிவிப்பார்கள். ராமர் பெயரில் இவ்வளவு பெரிய அரசியல் நடத்தப்படுகிறது என காட்டமாக விமர்சனம் செய்தார்.

    இந்நிலையில், ஷிண்டே பிரிவைச் சேர்ந்த சிவசேனா தலைவர் கிருபாள் துமானே கூறுகையில், வெட்கமின்மைக்கும் ஒரு எல்லை உண்டு. தற்போது ராவணன் மடியில் அமர்ந்திருப்பதால் பா.ஜ.க. மீது வெறுப்பு கொண்ட அவர் இப்போது ராமரையும் வெறுக்க ஆரம்பித்து விட்டார். இந்திய மக்கள் இதைப் பொறுக்க மாட்டார்கள் என ஆவேசத்துடன் தெரிவித்தார்.

    Next Story
    ×