search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ் தாக்கரே"

    • மத்திய மந்திரி அமித்ஷாவை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேரில் சந்தித்தார்.
    • இதனால் மக்களவை தேர்தலில் பாஜக-மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே உடனிருந்தார்.

    இந்தச் சந்திப்பின் மூலம் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த கூட்டணி உறுதியானால் மகராஷ்டிர தலைநகர் மும்பையில் போட்டியிட நவநிர்மாண் சேனாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு மும்பை தொகுதியில் குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது. சிவசேனாவில் இருந்து பிரிந்த பிறகு நவநிர்மாண் சேனாவால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

    • ஒரே கட்சி ஆட்சியிலும் உள்ளது. எதிர்க்கட்சியாகவும் செயல்படுகிறது
    • உலகத்தில் இதுபோன்று நான் பார்த்தது இல்லை

    மகாராஷ்டிர மாநிலத்தின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே ஒரு நிகழ்ச்சில் கலந்து கொண்டபோது பேசியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை, கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளன. எதிர்க்கட்சியாகவும் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலை, நம்முடைய மாநிலத்தில் மட்டுமே உள்ளன. உலகில் வேறு எங்கேயும் இல்லை.

    இந்த அபத்தமான, அசிங்கமான அரசியல் நிலையை நான் ஒருபோதும் பார்த்தது இல்லை. சிவசேனா கட்சியின் ஒரு கோஷ்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டி ஆட்சி அதிகாரத்தில் உள்ளன. அந்த கட்சிகளின் மீதமுள்ளவர்கள் எதிர்க்கட்சிகளாக உள்ளனர்.

    இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் சிவசேனா காட்சியில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அதிகமான எம்.எல்.ஏ.-க்களுடன் கட்சியை தன்வசமாக்கினார். கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்பட்டு வரும் அஜித் பவார், 8 எம்.எல்.ஏ.-க்களுடன் ஆட்சியில் இணைந்துள்ளார்.

    • அந்தேரி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்றது.
    • இந்த விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

    மும்பை:

    அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவேண்டாம் என பா.ஜ.க. துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேட்டு கொண்டு இருந்தார்.

    இதற்கிடையே, அந்தேரி கிழக்கு தொகுதியில் நிறுத்தி இருந்த வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்றது. இதையடுத்து பா.ஜ.க. சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த முர்ஜி பட்டேல் அதை திரும்ப பெற்றார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்ற விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், நேர்மறையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டு இருப்பது அவசியமாகும். இதுபோன்ற நல்ல கலாச்சாரம் பரவ நவநிர்மாண் சேனா எப்போதும் ஆதரவாக இருக்கும். எனது கோரிக்கைக்கு செவி கொடுத்தற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

    • அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

    மும்பை:

    ராஜ் தாக்கரே ஆதரவு அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கேவுக்கு ராஜ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள கடிதத்தில், மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தலில் நவநிர்மாண் சேனா போட்டியிடாது. எனவே நீங்களும் இடைத்தேர்தலில் ருதுஜா லட்கேவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மறைந்த ரமேஷ் லட்கேவின் அரசியல் பயணம், வளர்ச்சியை நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர்.
    • சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பை :

    ராஜ் தாக்கரேயை அவரது வீட்டுக்கு சென்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார். இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    சிவசேனா கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்தது. இதில் ஷிண்டே அணி, பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவையும் கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்கள் ராஜ் தாக்கரேயை சந்தித்து இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முதல்-மந்திாி ஏக்நாத் ஷிண்டே தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு சென்றார். விநாயகர் சதுர்த்தியையொட்டி முதல்-மந்திரி, ராஜ்தாக்கரே வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    எனினும் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ராஜ்தாக்கரேயும் சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர் ஆவார். சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே தாதரில் உள்ள சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மனோகர் ஜோஷி வீட்டுக்கும் ஏக்நாத் ஷிண்டே சென்று அவரை சந்தித்தார்.

    ×