திருப்பரங்குன்றம் கோவிலில் சுற்றி திரிந்த வங்கதேச வாலிபர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் - சிவசேனா வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியை கைது செய்த போலீசார் நடவடிக்கையை சிவசேனா வரவேற்கிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

 திருப்பூர் :

சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2-6-2023 அன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் சுப்பிரமணியசுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்துகொண்டிருந்த நேரத்தில் அப்பகுதியில் இந்திய வரைபடத்துடன் சுற்றி திரிந்த வங்கதேச வாலிபர் காலிமூசா என்பவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் அச்சஉணர்வை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியை கைது செய்த போலீசார் நடவடிக்கையை சிவசேனா வரவேற்கிறது.

மேலும் இதனை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் வங்கதேசத்திலிருந்து காலிமூசா தமிழகத்தில் எப்போது நுழைந்தான்?, இந்திய வரைபடம் எதற்காக வைத்திருந்தான்?, சமூக விரோத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?,திருப்பரங்குன்றம் கோவில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குண்டு வெடிப்பு போன்ற நாசவேலையில் ஈடுபட ஏதேனும் திட்டமிட்டு இருந்தானா? என பல்வேறு கோணத்தில் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com