search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    • சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    • குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளில் குடிநீரை பெறுதற்காக பொதுமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய அவலநிலை இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.

    மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 1-வது தெரு, பாலகிருஷ்ண முதலி தெரு, பாலகிருஷ்ண நாயக்கர் தெரு, சீனிவாச பிள்ளை தெரு, சீனிவாச அய்யங்கார் தெரு, வேலு தெரு, கணபதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடப்பதால், அந்த பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதிகளுக்கு தினமும் சுமார் 17 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறோம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக 150 மில்லியன் லிட்டர் குடிநீரை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறுகிறோம்.

    கடந்த ஜனவரி மாதத்தில், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஆற்காடு சாலையில் உள்ள குடிநீர் குழாய் மெட்ரோ ரெயில் பணியின் போது சேதமடைந்தது. அந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் பிரச்சினையை சரி செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சென்னை குடிநீர் வாரியம், சேதம் அடைந்த குழாய்களை சரி செய்தாலும், தண்ணீரின் அழுத்தம் மற்றும் அளவு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாயை பெரியதாக மாற்றுமாறு சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். வெறும் 35 வீடுகள் இருந்த இடத்தில், இப்போது கிட்டத்தட்ட 200 வீடுகள் உள்ளன. இதனால் தண்ணீர் போதவில்லை.

    சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதி மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை சரியாக செலுத்துவதால், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மாதம் வரை பனி, குளிர் இருந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

    சளி, வறட்டு இருமல், தொண்டை வலியுடன் காய்ச்சல் பாதிப்பு ஏற்படு கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல்விட்டாலும் வறட்டு இருமல் ஒரு வாாரம் வரை தாக்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சளி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை பெறுவதை காண முடிகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு கை-கால் வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    பெரும்பாலானவர்கள் முதலில் சளி, இருமலால் பாதிக்கப்பட்டு பின்னர் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து உஷ்ணம் அதிகமாக உள்ள நிலையில் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பதன் மூலம் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்.

    இந்த காய்ச்சல் பாதிப்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. மேலும் தற்போது கொசுக்கள் பெருகி வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

    கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகக் கூடிய இந்த காலத்தில் நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மழைநீர் கால்வாய்களில் விடப்படும் கழிவுநீர் மூலம் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

    மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் கொசுக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடிக்கிறது.

    இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளி தேர்வு காலத்தில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, பருவ நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளிர்சாதனை பெட்டியில் வைத்து குடிநீரை அருந்தக் கூடாது. ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சமையலை உண்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்றனர்.

    • கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
    • 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான் காடு, நரசிமேடு, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் தவித்து வரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

    இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பேருந்துகளும், 5 வேன்களும், 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003-ம் ஆண்டு நெம்மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கூடுதலாக ரூ.1516.82 கோடி செலவில் 2-வது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தினமும் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மிகப்பெரிய குழாய்கள் அங்கு பதிக்கப்பட்டு வந்தது. உவர்நீரை வெளியேற்றும் குழாயும் கடலில் பதிக்கப்பட்டன. இது மட்டுமின்றி சோழிங்கநல்லூரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கம் மற்றும் 48 கி.மீ. தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு முன்பு பரீட்சார்த்த முறையில் சோதனை ஓட்டமும் தொடங்கியது.

    சோழிங்கநல்லூர், உள்ள கரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் உயர் அதிகாரிகள் நெம்மேலிக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலையின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இதனால் வருகிற 24-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.

    இதன்மூலம் தென்சென்னையில் பல்லாவரம் வரை 12 பகுதிகளை சேர்ந்த 9 லட்சம் மக்களுக்கு கடல் குடிநீர் வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை 2026-ல் முடிக்க பணிகள் விரைவுப்ப டுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலும் அதிகரித்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி.

    இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஏரியால் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ஏரிக்கு மேட்டூர் நீர், கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மழை காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து காட்டாறுகள் மூலம் நீர் ஏரிக்கு தண்ணீர் வரும். தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலும் அதிகரித்துள்ளது.

    இந்தச் சூழலில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 40.30 அடியாக உள்ளது.

    அதே நேரத்தில், தற்போது ஏரிக்கு நீர் வரும் 9 அடி உள்ள கீழணையில், 2.7 அடியாக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.

    தற்போது சென்னைக்கு விநாடிக்கு 48 கனஅடியும், பாசனத்துக்கு விநாடிக்கு 100 கன அடியும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இது போல அனுப்பி வைக்கப்பட்டால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்துவிடும். இதனால் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதை நிறுத்தும் நிலை ஏற்படும்.

    • ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    • விழாவில் 8 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

    கோவை மாநகரில் 2035-ம் ஆண்டுக்கான மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோகத்துக்காக ரூ.780 கோடி மதிப்பில் பில்லூர் 3-வது கூட்டுக்குடி நீர் திட்டம் கோவை மாநக ராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பில்லூர் 3-வது திட்டத்துக்காக முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூருக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள் புரத்தில் ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டன்மலைக்கு தண்ணீர் செல்கி றது. அங்கு 900 மீட்டர் தூரத்துக்கு சுங்கம் அமைக்கப்பட்டு, பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நாளை (11-ந் தேதி) பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. குடிநீர் வினியோகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் இதற்கான விழா நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பங்கேற்று பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.362.20 கோடி மதிப்பீல் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அன்னூர், சூலூர், அவினாசி ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். விழாவில் 8 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

    இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகிறார். அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    விழா நடைபெறும் மைதானத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால் தற்போது 10 நாள், 12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யும் நிலை உள்ளது. இந்த பில்லூர் திட்டம் தொடங்கினால் தினமும் தண்ணீர் அளிக்கும் நிலை ஏற்படும்.

    கோவையின் மக்கள் தொகை 22 லட்சமாக உள்ளது. இவர்களுக்கு 300 எம்.எல்.டி. தண்ணீர் இருந்தால் தினமும் தண்ணீர் வழங்க முடியும்.

    ஆனால் 300 எம்.எல்.டி. தண்ணீருக்கு மேலாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிச்சி பகுதிக்கு 8 எம்.எல்.டி. கவுண்டம் பாளையம் பகுதிக்கு 22 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்படுகிறது.

    மேலும் பில்லூர்-2 திட்டத்தின் கீழ் மாவட்ட த்திற்கு மொத்தம் 125 எம்.எல்.டி. கிடைக்கும் நிலையில் நகராட்சிக்கு 3 எம்.எல்.டி. மட்டுமே வழங்கி வருகிறோம். பில்லூர் 2 திட்டத்தில் நகராட்சிக்கு 125 எம்.எல்.டி. தண்ணீர் வருகிறது. எனவே பில்லூர் 3-வது திட்டம் வந்தால் மாநகரில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை தினமும் வழங்க முடியும். இத்திட்டத்தை உடனடியாக கோவைக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சரவர வினியோகிக்கபப்டவில்லை என தெரிகிறது.
    • ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் திடீரென்று ஆலங்குடி சாலையில் திரண்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காந்தி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சரவர வினியோகிக்கபப்டவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இன்று காலையும் குடிநீர் சரிவர வரவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் இன்று காலை திடீரென்று ஆலங்குடி சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனர்.

    இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
    • மொத்த கொள்ளளவான 3645மில்லியன் கன அடியில், 3271 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூந்தமல்லி:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து 8 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 622 கன அடியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.59 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645மில்லியன் கன அடியில், 3271 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    சென்னை மக்களின் கோடைகால தண்ணீர் தேவைகளை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 622 அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் பராமரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.
    • குடிநீா் வாரியத்தின் குடிநீா்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டுக்கு இலவசமாக குடிநீா் வழங்கப்படும்.

    சென்னை:

    பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகத்தைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்களை சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.

    இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

    "சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 044-45674567 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம். தெருநடைகள், குடிநீா் வாரியத்தின் குடிநீா்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டுக்கு இலவச மாக குடிநீா் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 285 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 21.23 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 2916 டி.எம்.சி. ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 609 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 3000 கன அடியாக உள்ளது மேலும் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 285 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மொத்தமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3285 கன அடியாக உள்ளது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • வடகிழக்குப் பருவமழையின் போது நாள் ஒன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 1000 எம்.எல்.டிக்கு மேலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக் கப்பட்டு குடிநீரின் தரம் ஆய்வகம் மூலம் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில் வடகிழக்குப் பருவமழையின் போது நாள் ஒன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    குடிநீர் வினியோக நிலையங்களில் குடிநீரில் தேவையான அளவு பிளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் சேர்த்து வழங்கப்படுகிறது.

    குடிநீர் வினியோக நிலையங்களில் பெரிய நீர் உறிஞ்சும் எந்திரங்கள் மற்றும் சிறிய நீர் உறிஞ்சும் மற்றும் ஜெனரேட்டர்களைக் கொண்டு தேங்கும் மழைநீர் இறைக்கப்படுகிறது.

    குடிநீர் வினியோக நிலையங்களிலும் கழிவுநீரிறைக்கும் நிலையங்களிலும் மணல் மூட்டைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பாக புகார்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இம்மையத்தை தொடர்பு கொள்வதற்கு பொதுமக்கள் 044-45674567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916-ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    • முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகளில் மக்களுக்கு வங்கி மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    ரேசன் கடைகள் மூலம் கூடுதல் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக கே-ஸ்டோர்கள் என மறுபெயரிடவும் கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கே-ஸ்டோர்கள் தொடங்கப்பட்ட பிறகு அதன் மூலமாக ரூ10ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகள், பயன்பாட்டு பில் செலுத்துதல் (மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்பட), 5கிலோ எடையுள்ள சிறிய எல்.பி.ஜி. சிலிண்டர்கள், சபரி மற்றும் மில்மா தயாரிப்புகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு கிடைக்கும்.

    இந்நிலையில் ரேசன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். மாநில நீர்ப்பாசன துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.

    இந்த தண்ணீர் பாட்டில் வெளிச்சந்தையில் இது ரூ15 வரை விற்கப்படுகிறது. சபரிமலை சீசனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு அறிமுகப்படுததப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளிலும் தண்ணீர்பாட்டில் விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ×