என் மலர்
நீங்கள் தேடியது "ration shop"
- தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காங்கயம் :
காங்கயம் சென்னிமலை சாலை கச்சேரி பகுதியில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என். தனபால் வரவேற்று பேசி கூட்டத்தை தொடங்கிவைத்தார். செயலாளர் சக்திவேல் சங்கத்தின் ஓராண்டு கால செயல்பாடுகளை விரிவாக கூறினார். பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும், தேங்காய் உலர் கலங்களுக்கு போதிய விலையில் தேங்காய் கிடைக்காததாலும், தேங்காய் எண்ணை அரவை ஆலைகளுக்கு போதிய விலையில் கொப்பரை கிடைக்காததாலும் தேங்காய் எண்ணையை பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழகஅரசை வலியுறுத்த வேண்டுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள் , நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- ரேஷன் கடையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னூர்,
அன்னூர் வட்டத்தில், அன்னூர்-மேட்டுப்பா ளையம் ஊராட்சி உள்ளது. கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே நியாய விலைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நியாயவிலைக்கடையின் கீழ் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கக்கூடிய மலிவு விலை பொருட்கள் (அரிசி, பருப்பு, சக்கரை) பொங்கல் பரிசு, சமையல் எரிவாயு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.இந்த கடைக்கு மாதந்தோறும் கிராமத்தைச் சுற்றி உள்ள மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
மக்கள் அதிகமாக வந்து செல்லும், நியாய விலைக்கடையில், அதன் மேல் சுவர்கள் விரிசல் விட்ட வண்ணம் உள்ளது. தற்சமயம் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக சேதாரம் இன்னும் அதிகமாகும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் பட்சத்தில், மழைக்காலங்களில் ஏதேனும் நீர்க்கசிவு அல்லது மேற்கூரை இடிந்து விழுந்தால் பெரும் அசம்பாவதங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
மேலும் அங்கு இருக்கும் பொருட்களும் சேதமாகி, அத்தியாசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனை சீர் செய்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் ஊரா ட்சியில் வேலை விஷயமாக வரும் பொது மக்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்து கூறுவதற்கு இந்த கட்டிடத்தின் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே இங்கு இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடையை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாதுடையாளர்குளத்தில் 240-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
- தினமும் வெகு தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்க செல்வதால் சிரமமாக உள்ளது.
நெல்லை:
சேரன்மகாதேவி தாலுகா மலையன்குளம் ஊராட்சி மாதுடையார்குளம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டையுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களின் ரேஷன் அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாக கூறினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்ப தாவது:-
மாதுடையாளர்குளத்தில் 240-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் எங்கள் பகுதியில் ரேஷன் கடைகள் இல்லை. இதனால் நாங்கள் பொருட்கள் வாங்க 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலையன்குளத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
தினமும் வெகு தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்க செல்வதால் சிரமமாக உள்ளது. எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தோம். அப்போது சேரன்மகாதேவி தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் தற்காலிக ரேஷன் கடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.
அதன் பேரில் தற்காலிகமாக கடை அமைக்க எங்கள் கிராமத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தோம். ஆனால் இதுவரை எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தரவில்லை. உடனடியாக எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது" என்று கூறினார்.
- டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை மத்திய மந்திரி பியூஸ் கோயல் பாராட்டியிருந்தார்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல், "பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.
திமுகவினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது" என்று கூறினார்.
இந்நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய மந்திரி பியூஸ் கோயல், நாங்கள் தரமான அரிசியை தருகிறோம், மாநிலத்தில் தரமில்லாத அரிசி தருவதாக குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அவர்கள் கொடுப்பதே, எப்படி தரமில்லாததாகப் போகும். 12 அரிசி ஆலைகள் மூலம் தரமான அரிசியை, அரசு வழங்கி வருகிறது. 4 அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது.
பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை மத்திய மந்திரி பியூஸ் கோயல் பாராட்டியிருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம், சென்னை தியாகராய நகரில் நியாயவிலை கடைகளை ஆய்வு செய்த மத்திய மந்திரி அஸ்வினி குமார் செளபே, உணவுப்பொருட்கள் தரமாக வழங்கப்படுவதாக கூறினார்.
நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்யாமலேயே, பொருளைப் பார்க்காமலேயே தரமில்லை என மத்திய மந்திரி கூறியிருப்பது எங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பீரோ உடைக்காமல் நூதன திருட்டு
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அடுத்த வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள பொன்னுரங்கன் மகன் விநாயகம் (வயது 34) இவருடைய மனைவி சங்கரி இவர் ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சங்கரி ரேசன் கடைக்கு சென்றார். பின்னர் அவருடைய கணவர் வீட்டை வெளி பக்கமாக தாழ்பால் போட்டுவிட்டு விநாயகம் வீட்டு பொருட்கள் வாங்க வெளியே சென்று உள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் மாடியின் மீது ஏறி உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்க நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்த சங்கரி வீடு மற்றும் பீரோ திறந்த இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் கதவு மற்றும் பீரோ உடை க்கப்படாமல் திருடுபோய் உள்ளதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
- கிருஷ்ணசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்துபாளையத்தில் செயல்பட்டு வரும் ரேசன் கடைக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு, வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார்.பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பல்லடம் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ம.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், மற்றும் வடுகபாளையம் ஊராட்சி துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசன்,ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரேசன் கடையில் கலெக்டர் சோதனை நடத்தினார்.
- இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் ராம்கோ கூட்டுறவு சங்கம் மூலம் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார். நியாயவிலைக் கடையில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டார். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பொருட்கள் வரப்பெற்றுள்ளதா? என பதிவேடுகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், ஒவ்வொரு நியாய விலைக்கடைகளில் அங்குள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்கள் இருப்பதை கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். அதே போல் வழங்கும் உணவுப் பொருட்களின் அளவு சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் காலதாமதமின்றி வழங்குவதை கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.
- தேவராஜி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- 50 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மோட்டூர் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் பால் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜி. ஜி. ஆனந்தன் வரவேற்றார். ஆம்பூர் எம்எல்ஏ ஏ.சி. வில்வநாதன், மாவட்ட கவுன்சிலரும், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி. கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன், மத்திய ஒன்றிய செயலாளர் உமா கன்ரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சின்ன மோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட 3புளியமரத்து வட்டம் பகுதியில் 50 ஆண்டு காலமாக கோரிக்கையை ஏற்று ரேசன் கடையை 250 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் நேற்று திறந்து வைத்தார்.
மேலும் இதே பகுதியில் விவசாய தொழில் செய்து வரும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்க வை மாடுகள் வளர்த்து வருகின்றனர். இதனால் பால் உற்பத்தி செய்து நீண்ட தூரம் சென்று பால் ஊற்றி வருகின்றனர்.
இதனால் பால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பால் கொள்முதல் நிலையத்தையும் நேற்று தேவராஜி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் சி. சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் சிவப்பிரகாசம், விற்பனையாளர் சேகர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- சங்ககிரி ஒன்றியத்தில் ரேசன்கடைகளில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு செய்தார்.
- அங்கன்வாடி பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் ஆர்.டி.ஓ. கேட்டறிந்தார்.
சங்ககிரி:
சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, எம்ஜிஆர் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆர்.டி.ஓ. சௌம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கன்வாடி பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் கேட்ட றிந்தார். பின்னர், அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் விவரங்கள் கேட்டறிந்து, உணவை சாப்பிட்டு பார்த்தார்.
அதனையடுத்து அங்கு குடிநீர் வசதி உடனடியாக செய்து தருவதாக அங்கன்வாடி பணியாளர்களிடம் ஆர்டிஓ கூறினார். இதனைத் தொடர்ந்து கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளியில் குழந்தைகள் தங்கும் வசதிகள், பராமரிப்புகள் குறித்து கேட்டு அறிந்தார்.
புதூர் பகுதியில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்தார். அனைத்து பொருட்களும் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ. முத்து, கிழக்கு ஆர்.ஐ .,ராஜு, வி.ஏ.ஓ., முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டான்டிவிளை கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையில் வாரம் ஒரு நாள் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
- கூடுதலாக மேலும் ஒருநாள் பொருட்கள் வழங்க வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர்
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டான்டிவிளை கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையில் வாரம் ஒரு நாள் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
மாலைமலரில் செய்தி
இந்நிலையில் கூடுதலாக மேலும் ஒருநாள் பொருட்கள் வழங்க வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர். இது தொடர்பாக கடந்த 9-ந்தேதி மாலை மலரில் செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வாரத்தில் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க பரிந்துரை செய்தார். அதன்படி தற்போது செவ்வாய், வியாழன் என வாரத்தில் 2 நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அமைச்சருக்கு நன்றி
இதனை சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கித் தலைவர் அறவாழி பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பட்டான்டிவிளை தி.மு.க. கிளை செயலாளர் தளபதி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பட்டான்டிவிளை ஊர் பொதுமக்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
- வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
- சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிய ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிய ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் சாந்தி, கள அலுவலர், பொது விநியோக திட்டம் சார்பதிவாளர் செல்வகணேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள், துணைத்தலைவர் கிளைச்செயலாளர் பாண்டி, தென்மலை கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






