என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ration shop"
- முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகளில் மக்களுக்கு வங்கி மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
ரேசன் கடைகள் மூலம் கூடுதல் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக கே-ஸ்டோர்கள் என மறுபெயரிடவும் கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே-ஸ்டோர்கள் தொடங்கப்பட்ட பிறகு அதன் மூலமாக ரூ10ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகள், பயன்பாட்டு பில் செலுத்துதல் (மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்பட), 5கிலோ எடையுள்ள சிறிய எல்.பி.ஜி. சிலிண்டர்கள், சபரி மற்றும் மில்மா தயாரிப்புகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு கிடைக்கும்.
இந்நிலையில் ரேசன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். மாநில நீர்ப்பாசன துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.
இந்த தண்ணீர் பாட்டில் வெளிச்சந்தையில் இது ரூ15 வரை விற்கப்படுகிறது. சபரிமலை சீசனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு அறிமுகப்படுததப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளிலும் தண்ணீர்பாட்டில் விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மாத்தூர் திருக்கை ரேஷன் கடையினை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறும் போது, தமிழ்நாடு முதல்- அமைச்சர் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அத்தியாவசிய உணவு ப்பொ ருட்கள் தங்குதடை யின்றியும் தரமாக வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அதனடிப்படையில், செஞ்சி வட்டம், மாத்தூர் திருக்கை ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோ கம் செய்யப்ப ட்டு வருவதை பார்வையி ட்டதுடன், இந்நியாய விலைக்கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை விவரம், நடப்பு மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொரு ட்களின் விவரம் மற்றும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்து ம், அத்தியாவசியப் பொருட்க ளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நியாய விலைகடைக்கு வருகை தந்த குடும்ப அட்டைதாரர்களிடம் அத்தி யாவ சியப்பொரு ட்கள் முறை யாக கிடைக்கப்பெ றுகிறதா எனவும், தரமாக உள்ளதா எனவும், பொருட்களின் தரத்தில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனடியாக மாற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இந்த ஆய்வின்போது, ரூ.13,975 மதிப்பிலான 55 கிலோ அரிசியும், ரூ.620 மதிப்பிலான 6 கிலோ துவரம்பருப்பும், ரூ.350 மதிப்பிலான 7 கிலோ சர்க்கரை கூடுதலாகவும், ரூ.21 மதிப்பிலான பாமா யில் 1 லிட்டர் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, ரேஷன் கடை பணியாளருக்கு ரூ.14,875 அபராதம் விதிக்கப்பட்டு, துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபு ரியும் ரேஷன் கடை பணியா ளர்கள் மாற்றுப்பணி அல்லது துறை ரீதியாக பணிக்கு செல்லும் போது அறிவிப்பு பலகையில் கைப்பேசி எண் மற்றும் பணிக்கு செல்லும் விவரம் குறித்து எழுதி வைத்திட வேண்டும் என கலெக்டர் பழனிதெரிவித்தார்.ஆய்வின்போது, செஞ்சி வருவாய் தாசில்தார் ஏழுமலை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.9.76 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது.
- ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து ஊராட்சிக்குட்பட்ட மறக்குடியில் ரேஷன் கடை இல்லாமல் இருந்தது. இதனால் கிராம மக்கள் ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டனர். அதன்படி அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.9.76 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சித்ரா வரவேற்றார். இதில் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் இசககி, ஊர் பிரமுகர்கள் வீரபாண்டி, கணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிறு விடுமுறை இல்லை
- அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள வலியுறுத்தல்
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வருகிற 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் இயங்கும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பொருட்களையும் வழங்கும் வகையில், அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள ரேசன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படடுள்ளது.
- அன்னயோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக பெறப்படும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- கடந்த 2-ந்தேதியில் இருந்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் ரேசன் கடைகளில் முன்னுரிமை குடும்ப அட்டைகள், அன்னயோஜனா குடும்ப அட்டைகளுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ முதல் 35 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு சிலர் இலவச அரிசியை பெறுவது இல்லை. அந்த அரிசி முறைகேடாக வெளி மார்க்கெட்டுக்கு செல்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தற்போது புதிய உத்தரவு அனைத்து ரேசன் கடை பணியாளர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி முன்னுரிமை, அன்னயோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக பெறப்படும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது குடும்பத்தில் ஒருவரின் ஆதார் எண் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளது. இனி குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் எண்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2-ந்தேதியில் இருந்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதன்மூலம் இலவச அரிசி பெற்ற குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் இறந்தவர்கள், அரிசின் சலுகையை பெறாதவர்கள் விவரம் தெரியவரும். இதனால் அரசு வழங்கும் இலவச அரிசி விரயம் ஆகாமல் தடுப்பதோடு முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் ஆதார் பதிவு அவசியமாக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறும்போது, "இறந்தவர்கள் விவரங்களை கூறி பெயரை நீக்குவது இல்லை. சிலர் இலவச அரிசியை வாங்குவது இல்லை. ஆனால் அவர்களின் பெயரில் அரிசி வாங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க அனைவரின் ஆதார் எண்களையும் பதிவு செய்ய கூறுகிறோம். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வந்து பதிவு செய்து அரிசி, கோதுமையை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.
கடந்த மாதத்தில் இருந்து ரேசன் கடைகளில் ரேசன் பொருட்களை வாங்குவதற்கு யு.பி.ஐ. பணம் செலுத்தும் முறை நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது. ரேசன் கடைகளில் உள்ள யு.பி.ஐ. எண்ணை பொதுமக்கள் தங்கள் செல்போனில் ஸ்கேனிங் செய்து பணம் செலுத்தலாம். இந்த வசதி சென்னையில் ஒவ்வொரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது.
- நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகள் உணவைத் தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்புகளுக்கு வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள முத்தநாடு எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த கரடிகள் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தன. பின்னர் அங்கிருந்த உணவுப்பொருட்களை தின்று சூறையாடி விட்டுச் சென்றனர். நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
கதவுகளில் பாதுகாப்பை ஏற்படுத்த இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், கரடிகளுக்கு பிடித்த உணவுகளான எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பான அறைகளில் வைக்கவும் கிராம மக்களுக்கு உத்தரவிட்டனர். மீண்டும் கரடி வந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பெண்களுக்கு சுகாதார வளாக பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
- புதிதாக கட்டப்பட்ட 15 ரேசன் கடை கட்டடத்தை தவிர மற்ற கடைகளில் சுகாதார வளாக வசதி இல்லை.
பல்லடம்:
பல்லடம் வட்டாரத்தில் 141 பகுதி நேர, மற்றும் முழு நேர ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ரேஷன் கடைகளில் போதுமான சுகாதார வளாக வசதி இல்லாததால் பணியாளர்கள் பெரும் அவதிப்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:-
பல்லடம் பகுதியில் 141 பகுதி நேர, மற்றும் முழு நேர ரேசன் கடைகள் உள்ளது. இதில் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். இந்த நிலையில், தற்போது புதிதாக கட்டப்பட்ட 15 ரேசன் கடை கட்டடத்தை தவிர மற்ற கடைகளில் சுகாதார வளாக வசதி இல்லை. இதனால் கடை ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பெரும் அவதிப்படுகின்றோம்.
அதிலும் பெண்களுக்கு சுகாதார வளாக பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே அனைத்து ரேசன் கடைகளிலும் சுகாதார வளாக வசதி செய்து தர வேண்டும்.மேலும் பொதுவிநியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும்.நியாய விலை கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டும்.
ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் மளிகை பொருட்கள் தரமானதாகவும், காலாவதி ஆகாத பொருட்களாக அனுப்ப வேண்டும். ரேசன் கடைகளில் இணையதள வசதியை மேம்படுத்தி சர்வர் பிரச்சனை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது.
- ரேஷன் கடைகளில் இருந்த விரல் ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
திருப்பூர்,:
தமிழக ரேஷன் கடைகளில் பிற மாநிலத்தவருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் கீழ் தமிழக கார்டுதாரர்கள், எந்த மாநில ரேஷன் கடையிலும் அரிசி, கோதுமை வாங்கலாம். தமிழக ரேஷன் கடைகளில் பிற மாநில கார்டுதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்ய, தமிழகத்தை சேர்ந்த கார்டுதாரர்களின் வீடுகளில் இந்தாண்டு ஜூலையில் விண்ணப்பம் வழங்கியது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் விண்ணப்பதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டன.
இதற்கு ரேஷன் கடைகளில் இருந்த விரல் ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அதனால் அம்மாத இறுதியில் பிற மாநிலத்தவருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஆகஸ்டில் இருந்து மீண்டும் பொருட்கள் வழங்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் பல கடைகளில் பிற மாநிலத்தவருக்கு ரேஷன் பொருட்களை வழங்க ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், பிற மாநிலத்தவருக்கு வழங்குவதற்கு ஏற்ப கூடுதலாக பொருட்களை அனுப்புவதில்லை. அதனால் அவர்களுக்கு வினியோகிக்க முடிவதில்லை என்றனர்.
உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மிகவும் ஏழ்மையில் உள்ளதால், ரேஷன் கார்டை குடும்பத்தினரிடம் வழங்கி விட்டு வந்துள்ளனர். இதனால் பலர் தமிழகத்தில் பொருட்களை வாங்குவதில்லை.ஜூலையில் 381, ஆகஸ்டில் 615,இம்மாதத்தில் 90 பேர் பொருட்களை வாங்கியுள்ளனர். பிற மாநிலத்தவருக்கு பொருட்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.
- மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.
சென்னை:
ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30-க்கும், பாமாயில் பாக்கெட் ரூ.25 -க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.25-க்கும் விற்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரர்களுக்கு பாதி விலையில் இந்த பொருட்கள் கொடுக்கப்படுகிறது.
தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி மற்றும் கோதுமையை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து, ரேசன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.
தற்போது மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.
இது வரஇருக்கிற தேர்தலில் எதிரொலிக்க கூடும் என்பதால் மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.
இதற்காக தீபாவளி பண்டிகையின்போது ரேசனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கலாமா? என்று பரிசீலித்து வருகிறது.
இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில் 6 கோடி லிட்டர் பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.