search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடை ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம், நகை கொள்ளை
    X

    ரேசன் கடை ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம், நகை கொள்ளை

    • பீரோ உடைக்காமல் நூதன திருட்டு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள பொன்னுரங்கன் மகன் விநாயகம் (வயது 34) இவருடைய மனைவி சங்கரி இவர் ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் சங்கரி ரேசன் கடைக்கு சென்றார். பின்னர் அவருடைய கணவர் வீட்டை வெளி பக்கமாக தாழ்பால் போட்டுவிட்டு விநாயகம் வீட்டு பொருட்கள் வாங்க வெளியே சென்று உள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் மாடியின் மீது ஏறி உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்க நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    அதன் பின்னர் வீட்டிற்கு வந்த சங்கரி வீடு மற்றும் பீரோ திறந்த இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் கதவு மற்றும் பீரோ உடை க்கப்படாமல் திருடுபோய் உள்ளதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×