search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sangakiri"

    • சங்ககிரி ஒன்றியத்தில் ரேசன்கடைகளில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு செய்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் ஆர்.டி.ஓ. கேட்டறிந்தார்.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, எம்ஜிஆர் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆர்.டி.ஓ. சௌம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கன்வாடி பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் கேட்ட றிந்தார். பின்னர், அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் விவரங்கள் கேட்டறிந்து, உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    அதனையடுத்து அங்கு குடிநீர் வசதி உடனடியாக செய்து தருவதாக அங்கன்வாடி பணியாளர்களிடம் ஆர்டிஓ கூறினார். இதனைத் தொடர்ந்து கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளியில் குழந்தைகள் தங்கும் வசதிகள், பராமரிப்புகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    புதூர் பகுதியில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்தார். அனைத்து பொருட்களும் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ. முத்து, கிழக்கு ஆர்.ஐ .,ராஜு, வி.ஏ.ஓ., முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×