என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.37லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி-அங்கன்வாடி மையம், ரேசன் கடை தொடக்கம்
Byமாலை மலர்31 May 2022 7:20 AM GMT (Updated: 31 May 2022 9:57 AM GMT)
ரூ.37லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி-அங்கன்வாடி மையம், ரேசன் கடை அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 1லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் பெரிச்சி வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், அவை தலைவர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு தலைவர் முத்தையன், குழந்தைகள் நலதிட்ட அலுவலர் உஷாராணி, ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மியநாயக்கண்பட்டி கிராமத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.20 மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
ஆதனூர் ஊராட்சியில் ரூ.14.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உணவு தானிய கிடங்கினை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா செந்தில்குமார், ஊராட்சி செயலர் மாணிக்கம், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மருது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X