search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே  புதிய ரேசன் கடை திறப்பு
    X

    புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.


    வாசுதேவநல்லூர் அருகே புதிய ரேசன் கடை திறப்பு

    • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
    • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிய ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிய ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் சாந்தி, கள அலுவலர், பொது விநியோக திட்டம் சார்பதிவாளர் செல்வகணேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள், துணைத்தலைவர் கிளைச்செயலாளர் பாண்டி, தென்மலை கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×