search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sembarambakkam Lake"

    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
    • மொத்த கொள்ளளவான 3645மில்லியன் கன அடியில், 3271 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூந்தமல்லி:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து 8 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 622 கன அடியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.59 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645மில்லியன் கன அடியில், 3271 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    சென்னை மக்களின் கோடைகால தண்ணீர் தேவைகளை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 622 அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் பராமரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4200 கன அடியாக அதிகரித்தது.
    • ஏரியை பார்க்க பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பூந்தமல்லி:

    வங்ககடலில் உருவான மாண்டஸ்புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த பின்னரும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 3645 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஏரியில் இருந்து கடந்த 9-ந்தேதி முதல் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை புறநகர் பகுதியில் மீண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிககு 2,046 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது.

    இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22.43 அடியை எட்டியது. மேலும் தண்ணீர் இருப்பு 3,184 மில்லியன் கன அடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்ததையடுத்து பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பை 1000 கன அடியாக உயர்த்த மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இன்று காலை உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதற்கிடையே செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டும் நிலை ஏற்பட்டது. வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகபட்சமாக 23 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

    இன்று காலை முதல் தொடர்ந்து புறநகர் பகுதிகளில் கன மழை கொட்டி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரத்து 407 கன அடியாக அதிகரித்தது.

    இதைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி எரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மீண்டும் அறிவித்தார்.

    அதன்படி இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட் டது. மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வருகிறது.

    ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அடையாறு ஆற்றுகரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சிறுகளத்தூர், வழுதிலம்பேடு, திருநீர்மலை, அனகா புத்தூர் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கி றது. ஏற்கனவே கடந்த மாதம் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தபோது 2 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் நீர்வரத்து 4200 அடியாக உயாந்தது. இதையடுத்து நீர் திறப்பு 3000 கன அடியாக உயர்த்தப்பட்டது. 

    தொடர்ந்து பெய்து வரும் மழைகாரணமாக அடையாறு ஆற்றில் தண்ணீர் வெள்ளம் போல் செல்கிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரி நீர் கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது சிறு களத்தூர் அருகே குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தண்ணீர் செல்லும். இதனால் அப்பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டு சிறுகளத்தூர், நத்தம்பேடு, அமரம்பேடு, சோமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படும்.

    தற்போது சிறுகளத்தூர் பகுதியில் பாலம் கட்டப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்பு இல்லை. எனினும் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில், ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்படும். தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம் என்றார்.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23அடியை நெருங்கி உள்ளதால் ஏரி தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியை பார்க்க பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று அதிகாரிகள் அறி வுறுத்தி உள்ளனர். மேலும் ஏரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    • மழையின் அளவையும், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தையும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்கீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில், தற்போது 20.15 அடி தண்ணீர் உள்ளது. நீர் வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் உள்ளது.

    மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2641 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இதனால் மழையின் அளவையும், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தையும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்கீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    சென்னையில் இன்றும், நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:


    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.30 அடியை எட்டியுள்ளது (மொத்த உயரம் 24 அடி).

    இந்த நிலையில் சென்னையில் இன்றும், நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று 1000 கன அடியாக இருந்த உபரி நீர் திறப்பு இன்று 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஏரிக்கு 405 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் 2934 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது (மொத்த கொள்ளளவு 3,645 மி.கஅடி).

    சில நாட்களாக பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் கூடுதல் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #ChembarambakkamLake
    சென்னை:

    சென்னை மாநகரில் உள்ள 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர 24,712 தெருக்குழாய்கள் உள்ளன. இதற்கு தேவையான குடிநீர் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் 4 ஏரிகளும் ஓரளவு நிரம்பின. இதன் காரணமாக தற்போது இந்த ஏரிகளில் மொத்தம் 977 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளில் இருந்து மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.

    புழல் ஏரியில் 577 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 386 மில்லியன் கனஅடியும், பூண்டி ஏரியில் 13 மில்லியன் கனஅடியும் தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியில் 1 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்கமுடியாத நிலையில் வறண்டு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 1 கன அடியும், புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 61 கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து வினாடிக்கு 35 கனஅடி வீதமும் குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் மையம் மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் குடிநீர் வினியோகம் சமாளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருகிறது. பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 61 மில்லி மீட்டரும், புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லி மீட்டர் அளவும் மழை பெய்தது.

    இந்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் கூடுதல் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #ChembarambakkamLake
    2015-ம் ஆண்டில் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியால் வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு மனிதத் தவறே காரணம் என்று தமிழக அரசு மீது இந்திய கணக்காய்வு அறிக்கையில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்வது குறித்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை (2016-ம் ஆண்டு மார்ச் வரை) நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2015-ம் ஆண்டில் சென்னை, புறநகரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 289 பேர் பலியானதோடு, 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அனைத்து வகை போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு சென்னை பல நாட்கள் முடங்கியது.

    கட்டுப்பாடு இல்லாத வகையில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளால் வெள்ள நீரின் எளிதான ஓட்டம் தடைபட்டு, சென்னையை மூழ்கடித்தது.

    மழைநீர் வடிகாலுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பாதாள சாக்கடைத் திட்டங்கள் பல பகுதியில் இல்லை. எனவே மழைநீர் வடிகால் அமைப்பில் கழிவுநீர் கலந்து அதை அடைத்துக்கொள்வது சாதாரண நிகழ்வாக இருந்தது.

    சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) இரண்டாவது பெருந்திட்டத்தின் மூலம், நீர்வழிகளை ஒட்டியுள்ள கட்டுமானங்களை முறைப்படுத்துவதற்காக வெள்ளத் தாழ் நிலங்களை வரையறை செய்ய முயலவில்லை. இதனால் ஆற்றின் கரைகளில் பெரும் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன.

    வேளாண், நகர்ப்புறம் அல்லாத மற்றும் திறந்தவெளி பொழுதுபோக்கு மண்டலங்களில் இருந்து நில பயன்பாட்டை பிற மண்டலங்களுக்கு மாற்றுவதன் மூலம் கட்டுமானங்களை சி.எம்.டி.ஏ. தாராளமாக அனுமதித்தது. அதுபோன்ற அனுமதியற்ற கட்டுமானங்களும் நீர்நிலைகளைச் சுருக்கி, 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பெருமளவு நீர் தேங்க வழிவகுத்துவிட்டது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேல்மடையில் இரண்டு புதிய நீர்த் தேக்கங்களை அரசு உருவாக்கவில்லை. கொசஸ்தலை ஆற்றுக்கு குறுக்கே கூடுதல் நீர் சேமிப்புப் பணி சரியாக திட்டமிடப்படவில்லை. இவற்றால் நீர் சேகரிப்பு மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு நிறைவேறவில்லை.

    ஏரிகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக 2007-ம் ஆண்டில் சட்டம் இயற்றிய போதிலும், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் ஏரிகளின் சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வந்தது.

    பருவமழை தொடங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணியை தொடங்கவில்லை. மழைகாலத்துக்கு முன்பே நிதியை ஒதுக்க அரசு அக்கறை கொள்ளவில்லை.

    செம்பரம்பாக்கம் ஏரி மிகப் பெரிய ஒன்று. அதன் நீர்த்தேக்கம், நீர்வரத்து பற்றிய அறிவியல் பூர்வமான முன்னறிவிப்பு அமைப்பும், வெள்ளம் பற்றிய முன்னறிவிப்பு அமைப்பும் இருக்கவில்லை. இது மத்திய நீர் ஆணையத்தின் விதிகளுக்கு முரணானது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அவசரகால செயல் திட்டம் இல்லாத நிலையில், நீர்த் தேக்கத்தில் இருந்து வெளியேறிய நீரின் அளவு, வரும் நீரின் அளவைவிட அதிகமாக இருந்ததால், அடையாறில் விடப்பட்ட நீரின் அளவு வரைமுறைப்படுத்தப்படவில்லை. ஏரியின் நீர், முழு கொள்ளளவு மட்டத்துக்கு வைக்கப்படவில்லை.

    செம்பரம்பாக்கம் கரையை ஒட்டிய பகுதியில் சட்டத்துக்கு முரணாக அனுமதிக்கப்பட்ட தனியார் நிலத்தை நீரில் மூழ்காமல் பாதுகாக்க நீர் ஆதாரத் துறை விரும்பியதால் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.க்கு பதிலாக 3.481 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டது.

    கூடுதலாக 0.268 டி.எம்.சி. நீரை சேமிக்கும் வாய்ப்பு இருந்ததை பார்க்கும்போது, நீர் வெளியேற்றத்தை 6 மணிநேரத்துக்கு 12 ஆயிரம் கன அடி என்ற அளவில் வைத்திருக்க முடியும். ஆனால் 20 ஆயிரத்து 960 கன அடி முதல் 29 ஆயிரம் கன அடி வரை வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.

    வெள்ள நீர் வெளியேற்றத்தை உயர்த்தாமல் இருந்திருந்தால் 0.266 டி.எம்.சி. கூடுதல் அளவு நீரை நீர்த் தேக்கத்தில் வைத்திருக்க முடியும். அப்போதுகூட, முழுக்கொள்ளளவை எட்டியிருக்காது. வெளியேறும் நீரின் அளவு, வரத்து நீரின் அளவைவிட அதிகமாக இருந்ததால், அந்த வெள்ள சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவே கருத முடியும்.

    21 மணிநேரத்துக்கு நீர் வரத்தைவிட அதிகமாக 29 ஆயிரம் கன அடி என்ற வீதத்தில் நீரை வரைமுறையற்றபடி வெளியேற்றியதன் மூலம் மனிதனால் வெள்ளப் பேரழிவு உருவாகியது.

    எனவே, நீர் நிலைகள் மீதான கட்டுமானத்தை குறைக்க, வெள்ள சமவெளி மண்டல பற்றிய சட்டத்தை இயற்றவேண்டும். நீர்நிலைப் பகுதியில் நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டிட அனுமதி வழங்கக்கூடாது.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவை. பேரிடர் மேலாண்மைக்கான ஒரு நிறுவன கட்டமைப்பை நிதி தன்னாட்சியுடன் அரசு உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை கணக்காய்வு தலைவர் (பொது மற்றும் சமூகப்பிரிவு தணிக்கை) தேவிகா நாயர், கணக்காய்வு தலைவர் திருப்பதி வெங்கடசாமி ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நிதிநிலை மீதான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கையில், 2015-16-ல் ரூ.32 ஆயிரத்து 627 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை 2016-17-ல் ரூ.56 ஆயிரத்து 170 கோடியாக அதிகரித்துள்ளது. இது 72.16 சதவீதம் உயர்வு ஆகும்.

    சட்டப்படி உருவாக்கப்பட்ட கழகங்கள், அரசு நிறுவனங்கள், கூட்டு பங்கு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் அரசு ரூ.29 ஆயிரத்து 811 கோடி முதலீடு செய்திருந்தது. முதலீடுகளில் இருந்து அரசு பெற்ற சராசரி வருமானம், 2012-13-ல் 0.20 சதவீதமாக இருந்து, 2016-17-ல் 0.62 சதவீதமாக உயர்ந்த போதிலும், முதலீடுகளில் இருந்து பெறப்பட்ட வருமானம் மிக குறைவாக இருந்தது. 2015-16-ம் ஆண்டு முடிவில் தமிழக அரசுக்கு ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 30 கோடியாக இருந்த நிலுவையில் உள்ள நிதி பொறுப்புகள் 2016-17-ம் ஆண்டு இறுதியில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தேவைக்கு அதிகமாக அளித்த மருந்துகளின் தேவை பட்டியல் மற்றும் கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணி கழகத்தின் தோல்வியால் மருந்துகள் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு காலாவதியானதால் ரூ.16.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சிறைச்சாலைகளுக்கு செல்போன் ‘ஜாமர்’ (தடுப்பான்களை) கொள்முதல் செய்வதில் அளவு கடந்த காலதாமதத்தினால் ரூ.81.36 லட்சம் தவிர்த்திருக்கக்கூடிய கூடுதல் செலவு ஏற்பட்டது.

    அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமானத்தை தொடங்குவதற்கு முன்னரே நிதி ஆதாரங்களை உறுதி செய்துகொள்ள சென்னை பல்கலைக் கழகம் தவறியதன் விளைவாக ஒப்பந்ததாரரின் தொகை செலுத்த இயலாததால், பணி நிறுத்தப்பட்ட கட்டிடத்தின் கட்டுமானத்தில் செலவிடப்பட்ட ரூ.22.79 கோடி பலனற்றதானது.

    நாங்கள் தாக்கல் செய்த அறிக்கையை பொது கணக்கு குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு ஆய்வு மற்றும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கேட்கும் ஆதாரங்களை நாங்கள் வழங்குவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    ×