search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பில்லூர் 3-வது திட்ட குடிநீர் வினியோகம்: அமைச்சர் உதயநிதி நாளை தொடங்கி வைக்கிறார்
    X

    பில்லூர் 3-வது திட்ட குடிநீர் வினியோகம்: அமைச்சர் உதயநிதி நாளை தொடங்கி வைக்கிறார்

    • ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    • விழாவில் 8 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

    கோவை மாநகரில் 2035-ம் ஆண்டுக்கான மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோகத்துக்காக ரூ.780 கோடி மதிப்பில் பில்லூர் 3-வது கூட்டுக்குடி நீர் திட்டம் கோவை மாநக ராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பில்லூர் 3-வது திட்டத்துக்காக முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூருக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள் புரத்தில் ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டன்மலைக்கு தண்ணீர் செல்கி றது. அங்கு 900 மீட்டர் தூரத்துக்கு சுங்கம் அமைக்கப்பட்டு, பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நாளை (11-ந் தேதி) பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. குடிநீர் வினியோகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் இதற்கான விழா நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பங்கேற்று பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.362.20 கோடி மதிப்பீல் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அன்னூர், சூலூர், அவினாசி ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். விழாவில் 8 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

    இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகிறார். அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    விழா நடைபெறும் மைதானத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால் தற்போது 10 நாள், 12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யும் நிலை உள்ளது. இந்த பில்லூர் திட்டம் தொடங்கினால் தினமும் தண்ணீர் அளிக்கும் நிலை ஏற்படும்.

    கோவையின் மக்கள் தொகை 22 லட்சமாக உள்ளது. இவர்களுக்கு 300 எம்.எல்.டி. தண்ணீர் இருந்தால் தினமும் தண்ணீர் வழங்க முடியும்.

    ஆனால் 300 எம்.எல்.டி. தண்ணீருக்கு மேலாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிச்சி பகுதிக்கு 8 எம்.எல்.டி. கவுண்டம் பாளையம் பகுதிக்கு 22 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்படுகிறது.

    மேலும் பில்லூர்-2 திட்டத்தின் கீழ் மாவட்ட த்திற்கு மொத்தம் 125 எம்.எல்.டி. கிடைக்கும் நிலையில் நகராட்சிக்கு 3 எம்.எல்.டி. மட்டுமே வழங்கி வருகிறோம். பில்லூர் 2 திட்டத்தில் நகராட்சிக்கு 125 எம்.எல்.டி. தண்ணீர் வருகிறது. எனவே பில்லூர் 3-வது திட்டம் வந்தால் மாநகரில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை தினமும் வழங்க முடியும். இத்திட்டத்தை உடனடியாக கோவைக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×