search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தட்டுப்பாடு"

    • சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    • குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளில் குடிநீரை பெறுதற்காக பொதுமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய அவலநிலை இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.

    மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 1-வது தெரு, பாலகிருஷ்ண முதலி தெரு, பாலகிருஷ்ண நாயக்கர் தெரு, சீனிவாச பிள்ளை தெரு, சீனிவாச அய்யங்கார் தெரு, வேலு தெரு, கணபதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடப்பதால், அந்த பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதிகளுக்கு தினமும் சுமார் 17 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறோம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக 150 மில்லியன் லிட்டர் குடிநீரை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறுகிறோம்.

    கடந்த ஜனவரி மாதத்தில், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஆற்காடு சாலையில் உள்ள குடிநீர் குழாய் மெட்ரோ ரெயில் பணியின் போது சேதமடைந்தது. அந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் பிரச்சினையை சரி செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சென்னை குடிநீர் வாரியம், சேதம் அடைந்த குழாய்களை சரி செய்தாலும், தண்ணீரின் அழுத்தம் மற்றும் அளவு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாயை பெரியதாக மாற்றுமாறு சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். வெறும் 35 வீடுகள் இருந்த இடத்தில், இப்போது கிட்டத்தட்ட 200 வீடுகள் உள்ளன. இதனால் தண்ணீர் போதவில்லை.

    சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதி மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை சரியாக செலுத்துவதால், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால் விலை மிகவும் குறைவாக இருப்பதாக பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
    • பசும்பால் பாக்கெட் விலையும் பச்சை நிற பாக்கெட் விலையும் ஒன்றாக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தினமும் ஆவின் பால் 16 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது. ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா மற்றும் பசும்பால் என பல்வேறு வகைகளாக தரம் பிரித்து வினியோகிக்கப்படுகிறது.

    தனியார் பாலைவிட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் கடைகளில் உடனடியாக விற்பனை ஆகிவிடுகிறது. குறிப்பாக பச்சை நிற கவரில் உள்ள பால் 4.5 சத வீத கொழுப்புச் சத்துடன் வழங்கப்படுகிறது.

    இந்த பால் ஆவின் விற்பனை முகவர்களிடம் அரை லிட்டர் ரூ.22-க்கு கிடைக்கிறது. கடைகளில் ரூ.23-க்கு விற்கப்படுகிறது.

    ஆவினில் தயாரித்து வினியோகிக்கப்படும் மற்ற பால்களைவிட பச்சை நிற பால் விலை மிகவும் குறைவாக இருப்பதாக பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இதர ஆவின் பால் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு மார்க்கெட்டில் சரி சமமான வினியோக முறையை கொண்டு வருவதில் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பச்சை பால் மட்டுமே அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டதால் மற்ற பால் தயாரிப்புகள் பாதிக்கக் கூடும் என்பதால் அனைத்து பால் பாக்கெட் வகைகளையும் சீராக சமமான அளவு வினியோகிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் ஆவின் நிர்வாகம் இறங்கி உள்ளது.

    அதன் ஒரு பகுதியான பச்சை பால் பாக்கெட் உற்பத்தியை 10 சதவீதம் குறைத்து பசும்பால் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரித்து சென்னையில் வினியோகம் செய்து வருகிறது.

    பசும்பால் பாக்கெட் விலையும் பச்சை நிற பாக்கெட் விலையும் ஒன்றாக உள்ளது. ஆனால் ஒரு சதவீதம் கொழுப்புச்சத்து பசும்பாலில் குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த சில மாதங்களாக பச்சை நிறபால் தட்டுப்பாடாக இருந்த நிலையில் இன்று 30 சதவீதம் பால் வினியோகத்தை குறைத்துள்ளதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

    எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் ஆவின் நிர்வாகம் பச்சை நிறபால் பாக்கெட் வினியோகத்தை குறைத்திருப்பது பால் முகவர்களுக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்துகிறது. பசும்பால் பாக்கெட்டுகளை வலுக்கட்டாயமாக விற்பனை செய்ய கூறுவதால் பால் முகவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • 5 கிலோமீட்டர் தாண்டி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
    • தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தோனிரவு, ஜமீலாபாத், செஞ்சியம்மன் நகர், உட்பட்ட கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் தண்ணீர் உப்பாக காணப்படுவதால் வீடுகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பொன்னேரி அடுத்த அரசூர் ஏரியில் இருந்து 15 கிலோமீட்டர் குழாய் மூலம் பழவேற்காடு கீழ்நிலைத் தொட்டியில் சேமிக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தெரு குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீர் அனுப்பப்படுகின்றன.

    அவ்வாறு செல்லும் குடிநீர் சரியாக வராததால் குடிநீரின்றி மக்கள், அதிக விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்கியும் மற்றும் 15 கிலோமீட்டர் தாண்டி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

    அப்பகுதி மக்கள் குடி தண்ணிக்காக பெரிதும் அவதிப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் ஆறாக ஓடியது.
    • நிர்வாகம் ஊழியர்கள் கவனித்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு பாலாற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிக்குட்பட்ட 9,10-வது வார்டு பகுதி மேடான இடம் ஆகும். அதிக அழுத்தத்தில் தண்ணீர் வரும் போது குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. பெரியநத்தம், தட்டான்லை பகுதி, காட்டான் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இந்த பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் ஆறாக ஓடியது. இதனை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடி க்கை எடுப்ப தில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். உடைந்த குழாயை சரிசெய்ய 3 நாட்கள் வரை ஆவதால் குடிநீருக்கு கஷ்டப்படும் நிலை நீடித்து வருவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பழைய குழாய்களை அகற்றி விட்டு அனைத்து வார்டுகளிலும் தரமான குடிநீர் குழாய்கள் மற்றும் பழவேலி பாலாற்று பகுதியில் உள்ள நீர் இறைக்கும் எந்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நிர்வாகம் ஊழியர்கள் கவனித்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில நாட்களாக பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
    • நெல்லை ஆவினுக்கு கூட்டுறவு பால்பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக ஆவின் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் கலந்து பேசி தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்திலும் சில நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    நெல்லை மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நெல்லை ரெட்டியார்பட்டியில் இயங்கி வருகிறது. இங்கிருந்து தான் நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்ட ஆவினில் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆவின் முகவர்களுக்கு பாதி அளவே பால் சப்ளை செய்யப்படுவதாகவும், கடந்த சில தினங்களாக அனைத்து அளவு பாக்கெட்டுகளும் தட்டுப்பாட்டில் இருந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இங்கிருந்து தினமும் கடைகளுக்கு ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளும், வீடுகளுக்கு பச்சை நிற பாக்கெட்டுகளும் விற்பனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால் சில நாட்களாக பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த தட்டுப்பாட்டை போக்குவதற்காக நாளை முதல் 'கவ் மில்க்' என்ற பெயரில் புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பாக்கெட் 500 மில்லி அதிகபட்ச விலையாக ரூ.22.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆவின் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நெல்லை ஆவினுக்கு கூட்டுறவு பால்பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நெல்லை மாவட்டத்தில் 36 ஆயிரம் லிட்டர் பால், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் லிட்டர் பால் என மொத்தம் 76 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 85 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் தேவைப்படுகிறது.

    தற்போது கொள்முதல் வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு காரணம் தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலை நிர்ணயித்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்கின்றனர். ஆவினில் இருந்து லிட்டர் ரூ.33 முதல் 38 வரை தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் தனியார் நிறுவனங்கள் லிட்டர் ரூ.40 முதல் 42 வரை கொள்முதல் செய்வதால் பால் உற்பத்தியாளர்கள் அவர்களை நாடி செல்கின்றனர். இதனால் ஆவினில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    வழக்கமாக பச்சை நிற பாக்கெட்டு ஒன்று விற்பனை செய்வதன் மூலம் ஆவினுக்கு ரூ.2 நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்யவே கவ் மில்க் என்ற பெயரில் புதிதாக பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்ய உள்ளோம். இதன்மூலம் தட்டுப்பாடு தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ஆவின் பால் ஏஜெண்ட்டுகள் கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பச்சை நிற பாக்கெட்டுகளில் கொழுப்பு 4.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதனை லிட்டர் ரூ.46-க்கு விற்பனை செய்து வந்தோம். ஆனால் தற்போது தட்டுப்பாட்டினால் கவ் மில்க் என்பதை 3.5 சதவீதம் கொழுப்புடன் அறிமுகப்படுத்தி லிட்டர் ரூ.45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதனால் வீடுகளில் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவோர், டீக்கடைக்காரர்கள் ஆவின் பால் வாங்குவதை நிறுத்தி வருகின்றனர். பேட் அளவு அதிகமாக இருந்தால் கூடுதலாக தண்ணீர் சேர்த்து டீ போட்டு கொள்ள முடியும். ஆனால் கவ் மில்க்கில் பேட் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அதில் குறைந்த அளவே தண்ணீர் சேர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 கால்நடை மருத்துவமனைகளும், 15-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவமனைகளும் உள்ளன. இவை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு கோழி நாய் உள்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இந்த நிலையில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட ஒன்றியங்களில் சில வாரங்களாக வெறிநாய் தடுப்பூசி இல்லை. ஊசி போட நாயுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 5 கால்நடை மருத்துவமனைகளும், 15-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவமனைகளும் உள்ளன.

    இவை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு கோழி நாய் உள்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முக்கியமாக மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், கோமாரி தடுப்பூசி, வயிற்றில் உள்ள புழுக்களை நீக்க மருந்து, வெறி நாய் கடி தடுப்பூசி ஆகியவை குறிப்பிட்ட இடைவெளியில் போடப்படுகிறது.

    இந்த நிலையில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட ஒன்றியங்களில் சில வாரங்களாக வெறிநாய் தடுப்பூசி இல்லை. ஊசி போட நாயுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    சிறப்பு முகாமில் வெறிநாய் தடுப்பூசி அனைத்தும் போடப்பட்டுவிட்டது என்றும், இனிமேல் வந்தால் தான் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே தேவையான தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • உழவு எந்திரம் மற்றும் நிலக்கடலை விதை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு.
    • நிலக்கடலை விதைக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், குருங்குளம், வெட்டிக்காடு, திருவோணம், ஊரணிபுரம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் 50 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெறும்.

    கார்த்திகை மாத பருவத்தில் நிலக்கடலை விதைக்க வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

    தற்போது மானாவாரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், நிலத்தை உழவு செய்வது, அடியுரம் இடுவது, சமன்படுத்துவது, நிலக் கடலையை வாங்கி அதிலிருந்து விதையை உடைத்து எடுப்பது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறனர்.

    மானாவாரி பகுதியில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் நிலக்கடலை விதைப்புப் பணியில் ஈடுபடுவதால் உழவு இயந்திரம் மற்றும் நிலக்கடலை விதை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நிலக்கடலை விதையின் விலையும் அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து மருங்குளம் விவசாயிகள் கூறும் போது:-

    மானாவாரி பகுதியில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை விதைத்தால் மகசூல் நன்றாக இருக்கும் என்பதால் அதிக பரப்பளவில் கடலை விதைப்பில் ஈடுபடுவோம்.

    தற்போது இந்த பட்டத்தில் மழையும் பரவலாக பெய்துள்ளதால் இதனை பயன்படுத்தி நிலக்கடலை விதைக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் போதிய அளவு நிலக்கடலை விதை இல்லாததால் புதுக்கோட்டை, அரியலூர் போன்ற மாவட்டங்களில் சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்கி வர வேண்டி உள்ளது.

    எனவே இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான நிலக்கடலை விதையை வேளாண்மை துறை சார்பில் வழங்க வேண்டும்.

    மேலும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நிலக்கடலை விதைக்கும் எந்திரங்களை அதிக அளவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதுடன் துறை சார்பில் வாடகைக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • மழை பெய்ததால் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலையில் உள்ளது.
    • குருவை சாகுபடியில் யூரியா தட்டுப்பாடு அதிகம் இருந்த காரணத்தினால் மகசூல் பாதிப்பு.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் கோட்டா ட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது.

    பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். இதுகுறித்து அனைத்து துறை அதிகாரியு டன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர்உறுதி அளித்தார்.

    பின்பு வெளியே வந்துவிவ சாயிகள் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு நிலவறது ஆடுகிறது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் நடவு நட்ட பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலையில் உள்ளது.

    பயிர்களுக்கு யூரியா மற்றும் பொட்டாஷ் தட்டுப்பாடாக உள்ளதால் உரம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறோம்.

    அதேபோல் குருவை சாகுபடியில் யூரியா தட்டுப்பாடு அதிகம் இருந்த காரணத்தினால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது.

    சில கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் இல்லா ததால் பட்டா சிட்டா வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

    எனவே இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் உரம் தட்டுப்பாட்டை போக்கும் வரை வகையில் மத்திய மாநில அரசு நடவடி க்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • விதை நெல், உரம், பூச்சிக்கொள்ளி மருந்து போன்றவை தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும்.
    • வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆக்குதல்.

    கும்பகோணம்:

    பாட்டாளி மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கும்பகோணத்தி–ல்நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்த. கண்ணன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ஜோதிராஜ்,மாநில செயற்குழு போதை கேசவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் கிளைகள் தோறும் கொடியேற்றுதல், பொறுப்பாளர்கள் செயல்பாடுகள் மற்றும் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில்அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆக்குதல் போன்ற கட்சி வளர்ச்சி குறித்து மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.

    கூட்டத்தில் கும்பகோணம் மாநகருக்கு வருகை தந்து பொதுக்கூ–ட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அன்புமணிராமதாஸ் வரவேற்று,சிறப்பாக பொதுக்குழு கூட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாமக , வன்னியர் சங்க, உழவர் பேரியக்க மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர் கிளை ,அணி பொறுப்பா–ளர்களுக்கு நன்றி தெரித்துகொள்கிறது.

    தஞ்சை வடக்கு மாவட்ட பாமகவிற்கு மாநில, மாவட்ட பொறுப்புகள் வழங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு நன்றி தெரிவிப்பது ர்டு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றுவது.

    தஞ்சை டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம், பூச்சிக்கொள்ளிகள் , மருந்து போன்றவை தட்டுபாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்திற்கு வக்கீல் ராஜசேகர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் சுந்தரம்,பாலகுரு, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் அணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
    • குமரி மாவட்டத்தில் தொடரும் சம்பவம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள், 55 பேரூராட்சி கள் 4 நகராட்சிகள், ஒரு மாந கராட்சி உள்ளது. இங்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு தற்போது அச்சுறுத்தலாக உள்ளது தெருநாய்கள். இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. நாகர்கோவில் மாநகரை பொறுத்த மட்டில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் தெரு வீதிகளிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன.

    இவற்றை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேசன்கள் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் நாய்களின் தொல்லை குறைந்த பாடில்லை. கிராமப்புறங்க ளிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    இந்த நாய்கள் தெருக்க ளில் செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கும் சம்பவங்கள் தினமும் நடந்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நாய் கடிக்கு அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர மும் தடுப்பூசி செலுத்த ப்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாய் கடிக்கு செலுத்தப்படும் தடுப்பூசி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டிய நிலையில் உள்ளனர். மாவட்ட எல்லை பகுதியிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை வந்து தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது இங்கும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி 7 நாட்கள் கழித்த பிறகு 2-வது தடுப்பூசி, 21 நாட்கள் கழித்த பிறகு 3-வது தடுப்பூசி என 7 தடுப்பூசிகள் நாய்க்கடிக்கு செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.

    ஆனால் இங்கு போதுமான தடுப்பூசி இல்லாத தால் பொதுமக்கள் தற்பொழுது பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நாய்க்கடி தடுப்பூசியை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்த நடவடிக்கை எடுப்பதுடன் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தங்கு தடை இன்றி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இதுவரை பயிர் காப்பீடு இழப்பீடு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவில்லை.
    • உரத்தட்டுப்பாட்டை போக்கி விலையை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசா யிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அடகு வைக்கப்பட்ட பித்தளை குடங்களுடன் வந்து திடீரென கலெக்டர் இடம் முறையிட்டனர் .

    கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    இது குறித்து கக்கரை சுகுமாறன் கூறும்போது, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது.

    மகசூல் இல்லை என தெரிந்தும் 2021-22-ம் ஆண்டுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அண்டா, குண்டா அடகு வைத்து பிரிமியம் தொகை கட்டினார்கள்.

    ஆனால் அடகு வைத்த பொருட்கள் ஏலம் போனது தான் மிச்சம். இதுவரை பயிர் காப்பீடு இழப்பீடு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவில்லை. உடனே பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும்.

    வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயத்திற்கான யூரியா உரம் தட்டுப்பாட்டில் உள்ளது.

    உரம் தட்டுப்பா ட்டை போக்கி விலையை குறைக்க வேண்டும்.

    நெல் குவிண்டால் விலை ரூ.2500-ம், கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ.4000 விலையை அறிவிக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. 2022-23-ம் ஆண்டுக்கான சம்பவ பருவத்திற்கு கூட்டுறவு கடன் உடனே வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மேற்கண்ட கோரி க்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கோரி என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணி த்தோம்.

    அடகு வைத்தது தான் மிச்சம் என்பதை வலியுறுத்தி பித்தளை பாத்திரம், பித்தளை குடத்துடன் வந்தோம் என்றார்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முத்திரைத்தாள் விற்கப்படுகிறது.
    • இ-ஸ்டாம்பிங் என்ற மின்னணு முத்திரைதாள் கட்டணத்தை செலுத்தும் முறையும் அமலில் உள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் பதிவு துறையின் கீழ், 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பதிவுத்துறை அலுவலகத்தில் சொத்து கிரயம் செய்வதற்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் ஆகிய மதிப்புள்ள முத்திரைத்தாள் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் (ஸ்டாம்ப் வெண்டர்) மூலம் முத்திரைத்தாள் விற்கப்படுகிறது.

    கடந்த ஓராண்டாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய 5 ஆயிரம் முதல், 25 ஆயிரம் மதிப்புள்ள முத்திரைதாள் வரை தட்டுப்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது.பத்திரப்பதிவு முறைகளின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க, இ-ஸ்டாம்பிங் என்ற மின்னணு முத்திரைதாள் கட்டணத்தை செலுத்தும் முறையும் அமலில் உள்ளது. இந்த புதிய முறையை மக்கள் முழுமையாக பயன்படுத்த முன்வருவதில்லை. இதனால் முத்திரைத்தாளையே அதிகம் கேட்கின்றனர். அவர்களுக்கு, வழங்கும் அளவுக்கு இல்லாமல் தட்டுப்பாடு தொடர்கிறது.

    இது குறித்து முத்திரைத்தாள் விற்பனையாளர் சங்க தலைவர் கூறுகையில், ஐந்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உள்ள முத்திரைதாள் கடந்த சில மாதங்களாக விற்பனையாளர்களுக்கு வழங்குவதில்லை. சார்நிலை கருவூலத்தில் கேட்டால் நாசிக் நகரிலிருந்து வரவில்லை என்று கூறுகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அதிக மதிப்புள்ள முத்திரைதாள் தேவைப்படுகிறது. தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    அதிகாரிகள் கூறுகையில், அதிக மதிப்புள்ள தொகைக்கான முத்திரை தாள்களின் தேவைக்கு ஏற்ப பிற மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. ரூபாய், 10 முதல் 5 ஆயிரம் மதிப்புள்ள வரை முத்திரை தாள் கிடைக்கிறது. அதிக மதிப்புள்ள தொகைக்கான முத்திரை தாள் சென்னையில் இருந்து வருவதில்லை. எந்த பகுதியில் தேவைப்படுகிறது என்பது குறித்து விசாரிக்கிறோம் .முத்திரை தாள் இல்லையென்றாலும் கூட, குறைந்த மதிப்பிலான முத்திரை தாளை முதல்பக்கத்தில் மட்டும் வைத்து விட்டு மீதமுள்ள தொகைக்கு ஆன் லைன் மூலம் செலுத்தலாம். இ-ஸ்டாம்பிங் முறையை மக்கள் தாராளமாக பயன்படுத்தலாம் என்றார்.

    ×