search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பச்சைநிற ஆவின்பால் தொடர்ந்து தட்டுப்பாடு- பால் வினியோகஸ்தர்கள் குமுறல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பச்சைநிற ஆவின்பால் தொடர்ந்து தட்டுப்பாடு- பால் வினியோகஸ்தர்கள் குமுறல்

    • பால் விலை மிகவும் குறைவாக இருப்பதாக பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
    • பசும்பால் பாக்கெட் விலையும் பச்சை நிற பாக்கெட் விலையும் ஒன்றாக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தினமும் ஆவின் பால் 16 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது. ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா மற்றும் பசும்பால் என பல்வேறு வகைகளாக தரம் பிரித்து வினியோகிக்கப்படுகிறது.

    தனியார் பாலைவிட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் கடைகளில் உடனடியாக விற்பனை ஆகிவிடுகிறது. குறிப்பாக பச்சை நிற கவரில் உள்ள பால் 4.5 சத வீத கொழுப்புச் சத்துடன் வழங்கப்படுகிறது.

    இந்த பால் ஆவின் விற்பனை முகவர்களிடம் அரை லிட்டர் ரூ.22-க்கு கிடைக்கிறது. கடைகளில் ரூ.23-க்கு விற்கப்படுகிறது.

    ஆவினில் தயாரித்து வினியோகிக்கப்படும் மற்ற பால்களைவிட பச்சை நிற பால் விலை மிகவும் குறைவாக இருப்பதாக பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இதர ஆவின் பால் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு மார்க்கெட்டில் சரி சமமான வினியோக முறையை கொண்டு வருவதில் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பச்சை பால் மட்டுமே அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டதால் மற்ற பால் தயாரிப்புகள் பாதிக்கக் கூடும் என்பதால் அனைத்து பால் பாக்கெட் வகைகளையும் சீராக சமமான அளவு வினியோகிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் ஆவின் நிர்வாகம் இறங்கி உள்ளது.

    அதன் ஒரு பகுதியான பச்சை பால் பாக்கெட் உற்பத்தியை 10 சதவீதம் குறைத்து பசும்பால் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரித்து சென்னையில் வினியோகம் செய்து வருகிறது.

    பசும்பால் பாக்கெட் விலையும் பச்சை நிற பாக்கெட் விலையும் ஒன்றாக உள்ளது. ஆனால் ஒரு சதவீதம் கொழுப்புச்சத்து பசும்பாலில் குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த சில மாதங்களாக பச்சை நிறபால் தட்டுப்பாடாக இருந்த நிலையில் இன்று 30 சதவீதம் பால் வினியோகத்தை குறைத்துள்ளதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

    எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் ஆவின் நிர்வாகம் பச்சை நிறபால் பாக்கெட் வினியோகத்தை குறைத்திருப்பது பால் முகவர்களுக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்துகிறது. பசும்பால் பாக்கெட்டுகளை வலுக்கட்டாயமாக விற்பனை செய்ய கூறுவதால் பால் முகவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    Next Story
    ×