search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration items"

    • அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பொது வினியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது வினியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

    அதனைத்தொடர்ந்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்துப் பணி மேற்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-ன்படி தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 3 லட்சத்து 29 ஆயிரத்து 300 கிலோ அரிசி, 152 எரிவாயு சிலிண்டர்கள், 90 கிலோ கோதுமை, 250 கிலோ துவரம்பருப்பு, 251 லிட்டர் மண்எண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.23 லட்சத்து 61 ஆயிரத்து 969 ஆகும். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட 529 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

    இதுதவிர கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க 18005995950 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    • சுற்றுவட்டார பகுதிகளில் 48 ரேஷன் கடைகள் உள்ளன.
    • காட்டு யானை உடைக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    வால்பாறை,

    வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 48 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 45 ரேஷன் கடைகள் எஸ்டேட் பகுதியில் செயல்படுகின்றன.

    வனப்பகுதியையொட்டி உள்ள அந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இவை ரேஷன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை தின்பதோடு, சிதறடித்து அட்டகாசத்திலும் ஈடுபட்டு வருகிறது.

    இதன் காரணமாக ரேஷன் கடை பணியாளர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் மனித-காட்டு யானை மோதலும் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க வால்பாறை பகுதியில் நடமாடும் ரேஷன் கடைகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் வால்பாறை அருகே கவர்க்கல், சக்தி, தலநார் போன்ற எஸ்டேட் பகுதியில் லாரியில் கொண்டு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தனது சொந்த முயற்சியில் ரேஷன் கடை பணியாளர் நடவடிக்கை எடுத்தார்.

    இதன் மூலம் ரேஷன் பொருட்கள் உரிய நேரத்துக்கு கிடைப்பதாகவும், கடைகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்வது தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மேலும் ரேஷன் கடை பணியாளரின் இந்த பணியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து மக்கள் கூறும்பேது, இதுபோன்று அரசு சார்பில் நடவடிக்கை எடுத்து லாரியில் கொண்டு சென்று ரேஷன் பொருட்களை அனைத்து எஸ்டேட் பகுதியிலும் வினியோகித்தால் கடைகளை காட்டு யானை உடைக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    எனவே இந்த கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றனர்.

    • சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டாண்டி விளை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை உள்ளது.
    • நியாய விலைக்கடையில் வாரம் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க கோரி அப்பகுதியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டாண்டி விளை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை உள்ளது. இங்கு வாரம் ஒரு நாள் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நியாய விலைக்கடையில் வாரம் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க கோரி அப்பகுதியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாதம் ஒரு நாள் மட்டுமே பட்டாண்டி விளை கடையில் பொருட்கள் வழங்கப்படும் என்று சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொது மக்கள் காலை முதல் மாலை வரை ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.  

    ×