search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agony"

    • பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார்
    • நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்தது.இந்நிலையில்

    நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் நேற்று பகிர்ந்தார். 

    "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்". தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்" என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு இருந்தார்.




    இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று இணைய தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் - நயன்தாரா ஜோடியாக கட்டிப்பிடித்து அன்போடு தழுவும் படங்கள், இரட்டை குழந்தைகளை பாசத்துடன் கொஞ்சுவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார். 

    நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பிற்காக வீட்டை விட்டு பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார். நயன்தாரா இணையத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    'சிங்கப்பூரில் இருந்து 20 நாடுகளுக்குப் பிறகு திரும்பிய உங்களை ( விக்னேஷ்) பார்த்தபோது நாங்கள் மூவரும் எப்படி உணர்ந்தோம் என்பதை விளக்க முடியவில்லை. நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    • குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளில் குடிநீரை பெறுதற்காக பொதுமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய அவலநிலை இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.

    மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 1-வது தெரு, பாலகிருஷ்ண முதலி தெரு, பாலகிருஷ்ண நாயக்கர் தெரு, சீனிவாச பிள்ளை தெரு, சீனிவாச அய்யங்கார் தெரு, வேலு தெரு, கணபதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடப்பதால், அந்த பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதிகளுக்கு தினமும் சுமார் 17 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறோம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக 150 மில்லியன் லிட்டர் குடிநீரை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறுகிறோம்.

    கடந்த ஜனவரி மாதத்தில், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஆற்காடு சாலையில் உள்ள குடிநீர் குழாய் மெட்ரோ ரெயில் பணியின் போது சேதமடைந்தது. அந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் பிரச்சினையை சரி செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சென்னை குடிநீர் வாரியம், சேதம் அடைந்த குழாய்களை சரி செய்தாலும், தண்ணீரின் அழுத்தம் மற்றும் அளவு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாயை பெரியதாக மாற்றுமாறு சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். வெறும் 35 வீடுகள் இருந்த இடத்தில், இப்போது கிட்டத்தட்ட 200 வீடுகள் உள்ளன. இதனால் தண்ணீர் போதவில்லை.

    சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதி மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை சரியாக செலுத்துவதால், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீதும், திருடுபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓட்டை, வி. புதுப்பாக்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாயப் பகுதியாகும். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சமீப காலமாக இங்குள்ள வயல் வெளிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் அமர்ந்து குடிப்பதும், கஞ்சா அடிப்பதும் தொடர் நிகழ்வாக உள்ளது.தாங்கள் பயன்படுத்திய பொரு ட்களை அப்புற ப்படுத்துவது கூட கிடையாது. ஒரு சிலர் மது பாட்டீல்களை நடைபாதையிலேயே உடை த்துவிட்டு செல்கின்றனர். மேலும், அந்த மர்மநபர்கள் வயல்வெளிகளில் உள்ள பல்வேறு பொருட்களை திருடிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் மறுநாள் காலையில் வயல்வெளிக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் வானூர் அருகே உள்ள ஒட்டை கிராமத்தில் செந்தில், ராஜசேகர் ஆகியோர் அவரவர் வயல்வெளிக்கு இன்று காலை சென்றனர். நெற்பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் கொட்டகைக்கு சென்று, ஸ்டார்ட்டரை இயக்கினர். ஸ்டார்ட்டர் மட்டும் இயங்கியது. மோட்டார் ஓடவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மோட்டாரை நிறுத்திவிட்டு வெளியில் வந்து பார்த்தனர். அப்போது மோட்டார் கொட்டகை அருகில் ஒரு சிலர் அமர்ந்து மது அறுந்தியதும், அவர்கள் மோட்டார் கொட்டகையில் இருந்து போர்வெல்லுக்கு செல்லும் வயரினை அறுத்து சென்றதும் தெரியவந்தது. மது அருந்திய மர்மநபர்கள் கஞ்சா புகைத்ததற்காக அறிகுறிகளும் இருந்தன.ஸ்டார்ட்டரில் இருந்து போர்வெல்லுக்கு செல்லும் மின் ஓயரில் ஓட்டுக்கள் இருக்ககூடாது. அவ்வாறு இருந்தால் மோட்டார் பழுதாகி விடும். இதனால் விலைஉயர்ந்த ஓயர்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்துவார்கள். மேலும், தற்போது புதிய மின் ஓயரினை மாற்ற வேண்டுமெனில் மோட்டாரை வெளியில் தூக்க வேண்டும். இதற்கு ரூ.6 ஆயிரம் வரை செலவாகும்.

    மேலும், புதிய மின் ஓயர் வாங்க ரூ.10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை செலவாகும். பின்னர் எலக்ட்ரிசீயன் சம்பளம் என மொத்தத்தில் ரூ.25 ஆயிரம் வரை பண விரயம் ஏற்படுமென விவசாயிகள் வேதனையுடன் கூறினர். இதனை கருத்தில் கொண்டு போலீசார் கிராமப்பகுதிகளிலும், குறிப்பாக வயல்வெளி செல்லும் சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீதும், திருடுபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓட்டை, வி. புதுப்பாக்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மனவேதனை காரணமாக அய்யப்பன் விஷம் குடித்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது32). கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சலில் இருந்த அவர் கடந்த 30-ந்தேதி விஷம் குடித்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அய்யப்பன் இறந்தார். இதுகுறித்து அய்யப்பன் சகோதரி மகேஸ்வரி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அய்யப்பனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் 9 பேர் பலியான சம்பவம் மனதுக்கு வேதனை அளிக்கிறது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது அறிக்கை தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வ தற்காக 90 க்கும் மேற்பட்டோர் கடந்த 17 தேதி யாத்திரைப் பயணிகள் ரெயில் மூலமாக தமிழ்நாட் டிற்கு வந்துள்ளனர்.

    இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.

    இவர்களின் ரெயில் பெட்டி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டபோது, திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தால் 9-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தீக் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கோரச்சம்பவம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீ விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் மரணமடைந்த பக்தர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ள‌ விழிப்புணர்வு போர்டுகளை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர்.
    • தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த ஓட்டுநர்களுக்கு புரியும் மொழியில் விளம்பர வாசகங்கள் எழுதலாம்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மாநில சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.பெருகி வரும் வாகனங்களால் சாலைகள் அகலப்படுத்தப்படுவது அவசியமான‌ஒன்று ஆகும்.

    இதில் கல்லணை திருவையாறு சாலை (மாநில சாலை எண்22) கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை
    அகலப்படுத்தும் பணிகளில் திருச்செனம் பூண்டி வரை முடிந்துள்ளது.

    முடிவடைந்த சாலைகளில் வெள்ளைக் கோடுகள், சாலை ஓரங்களில் மிளிரும் எச்சரிக்கை பலகைகள் பிரதிபலிப்பானகள் பொருத்தி உள்ளனர்.

    சாலை அருகில் பள்ளிகள் வேகத்தடைகள் உள்ளதை குறிக்கும் பலகைகள் வைத்து உள்ளனர்.

    இவை எல்லாம் வரவேற்புக்குரியவை.

    அதேசமயத்தில் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகள் நெடுஞ்சாலை துறை வண்ணத்தில் வைத்து உள்ளனர்.

    அருமையான‌ ஆங்கில‌வாசகங்கள் மட்டுமே இந்த வகையான போர்டுகளில் உள்ளன.

    தமிழ் நாட்டில் மாநில‌நெடுஞ்சாலையில் ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ள‌ விழிப்புணர்வு போர்டுகளை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர். தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த ஓட்டுநர்களுக்கு புரியும் மொழியில் விளம்பர வாசகங்கள் எழுதலாம்.

    ஆங்கில மொழியில் வாசகங்கள் வேண்டும் என்றால் இரு மொழி களிலும் வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கலாம்.

    தமிழை புறக்கணித்து ஆங்கில வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளதை உடனே மாற்றம் செய்து தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் ஓட்டுநர் களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர் பார்க்கின்றனர்.

    • வெள்ளப்பெருக்கு காரணமாக பிச்சாண்டார் கோவில், உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை, பெருகமணி, திருப்பராய்த்துறை பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
    • லால்குடி பகுதியில் 500 ஏக்கர் ெநற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. தொட்டியம் மற்றும் அந்தநல்லூர் பகுதிகளில் 250 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது.

    திருச்சி :

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து உபரி நீர் தொடர்ச்சியாக திறந்து விடப்பட்டது. முக்கொம்பு மேலணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 17 ஆயிரம் கன அடி நீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்பட்டது.

    இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிச்சாண்டார் கோவில், உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை, பெருகமணி, திருப்பராய்த்துறை பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் வேளாண் நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. லால்குடி பகுதியில் 500 ஏக்கர் ெநற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த நான்கு நாட்களாக வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைக்குள் வெள்ளநீர் வழியா விட்டால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அது மட்டுமல்லாமல் தொட்டியம் மற்றும் அந்தநல்லூர் பகுதிகளில் 250 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது. கூகூர் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்ற விவசாயி கூறும்போது, எனது இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கிக் கிடக்கிறது. குறுவை தொகுப்பு மூலம் அரசு வழங்கிய உதவிகள் விவசாயம் செய்தேன். ஆனால் தற்போது கஷ்டத்தை சந்திக்க நேரிட்டுள்ளது என கவலை தெரிவித்தார். அரசின் குறுவை தொகுப்பு வீணாகி விட்டதே என்றார்.

    இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை கணக்கிட துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் சேதம் மதிப்பீடுகள் தொடங்கும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையே முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 59 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இன்று 94 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் விளைநிலங்களில் புகுந்த வெள்ள நீர் வடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • மதுரையில் தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • தண்ணீர் வெளியேறி வீணாக ஆற்றில் கலக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று காலை மாணவ, மாணவிகள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமடைந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவும், இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில்மழை நீர்குளம் போல் தேங்கியுள்ளது.

    இன்று காலை மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொது மக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    இந்த மழை காரணமாக முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. வைகை ஆற்றிலும் கூடுதலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதையொட்டி வைகை அணையில்இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டு வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக மதுரையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயப்ப ணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    மதுரை வண்டியூர் கண்மாய், சுமார் 687 ஏக்கர் பரப்பளவு உடையது. இது முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து ஓடுகிறது.

    எனவே வண்டியூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இங்கு வந்து வேடிக்கை பார்த்து சொல்கின்றனர். ஒரு சிலர் தூண்டில் வலை போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.

    வண்டியூர் கண்மாய் நிரம்பியதால் கே.கே. நகர், அண்ணாநகர், மேலமடை, கோமதிபுரம் உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது.

    அதே நேரத்தில் கண்மாயை சரியாக தூர்வாரி பராமரிக்காமல், விட்டுவிட்டதால் கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாக ஆற்றில் கலக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

    ×